twitter


குடல் பசியை போக்கிட
உடல் விலை போகிறது
விபச்சாரம்

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரன் ...

சுவரில் எழுதாதே !

சுவர் முழுவதும்

எழுதிருந்தது ...

அப்பாவும் மகனும்

ஒரே வரிசையில்

வேலைவாய்ப்பு அலுவலகம்

விதவை வானம்

மறுநாளே மறுமணம்

பிறை நிலவு


(நன்றி இரா ரவி )

250 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 250   Newer›   Newest»
  1. டாஸ்மாக் ஹைக்கூ இரா. இரவி

    அரசாங்கம் நடத்தும்
    அவமானச்சின்னம்
    டாஸ்மாக்

    பாதை தவறியவர்கள்
    போதை வாங்குமிடம்
    டாஸ்மாக்

    காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
    குடிமகன்களுக்கு பிடித்த இடம்
    டாஸ்மாக்

    குடிமகன்களிடமிருந்து கரந்து
    அரசாங்கத்திற்கு வழங்கும்
    கற்பக காமதேனு டாஸ்மாக்

    வருமானம் பெருகப் பெருக
    அவமானம் பெருகுகின்றது
    டாஸ்மாக்

    பாஸ் மார்க் வாங்கியும்
    க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
    டாஸ்மாக்

    ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
    தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
    நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

    போதை சுகத்தில் குடிமகன்
    சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
    டாஸ்மாக்

    விதவைகளின் எண்ணிக்கையை
    விரிவாக்கம் செய்யுமிடம்
    டாஸ்மாக்

    வருங்கால தூண்கள்
    வழுக்கி விழுமிடம்
    டாஸ்மாக்

    இலவசமாய் நண்பன் தருவதாக
    இளித்துக் கொண்டு போகுமிடம்
    டாஸ்மாக்

    இமயமாக உயர வேண்டியவன்
    படு பாதாளத்தில் விழுமிடம்
    டாஸ்மாக்




    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  1. காந்தியடிகள் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அகிம்சையை உணர்த்திய
    அறிவு ஜீவி
    காந்தியடிகள்

    ரகசியம் இல்லாத
    அதிசய மாமனிதர்
    காந்தியடிகள்

    கொண்ட கொள்கையில்
    குன்றென நின்றவர்
    காந்தியடிகள்

    திருக்குறள் வழி
    வாழ்ந்த நல்லவர்
    காந்தியடிகள்

    சுட்ட கொடியவனையும்
    மன்னித்த மாமனிதர்
    காந்தியடிகள்

    உலகம் வியக்கும்
    ஒப்பில்லாத் தலைவர்
    காந்தியடிகள்

    வன்முறை தீர்வன்று
    வையகத்திற்கு உணர்த்தியவர்
    காந்தியடிகள்

    நெஞ்சுரத்தின் சிகரம்
    நேர்மையின் அகரம்
    காந்தியடிகள்

    அரை ஆடை அணிந்த
    பொதுஉடைமைவாதி
    காந்தியடிகள்

    வெள்ளையரின்
    சிம்ம சொப்பனம்
    காந்தியடிகள்

    மனித உரிமைகளின்
    முதல் குரல்
    காந்தியடிகள்

    அமைதியின் சின்னம்
    அடக்கத்தின் திரு உருவம்
    காந்தியடிகள்

    அன்றே உரைத்தவர்
    உலக மயத்தின் தீமையை
    காந்தியடிகள்

    மனிதருள் மாணிக்கம்
    மாமனிதருக்கு இலக்கணம்
    காந்தியடிகள்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கூடுதலாக உண்டு
    தாய்மண் பாசம்
    புலம் பெயர்ந்தவர்களுக்கு

    வெந்நீர் ஊற்றியபோதும்
    வளரும் செடிகள்
    புலம் பெயர்ந்தவர்கள்

    பயன்பட்டது
    சாக்கடைநீரும்
    தீ அணைக்க

    கூடலின் அருமை
    உணர்த்தியது
    ஊடல்

    ஈடில்லா வேகம்
    பின்னோக்கிப் பார்ப்பதில்
    மலரும் நினைவுகள்

    உடலின் மச்சமென
    நீங்காத நினைவு
    காதல்

    இனிமை இனிமை
    சின்னத் தீண்டல்
    சிந்தையில் கிளர்ச்சி

    கோலமிட்டுச் சென்றது
    சாலையில்
    தண்ணீர் லாரி

    பிணமானபின்னும்
    காசு ஆசை
    நெற்றியில் காசு

    தடுக்கி விழுந்ததும்
    தமிழ் பேசினான்
    அம்மா

    வந்துவிட்டது
    சேலையிலும் சைவம்
    சைவப்பட்டு

    கொன்ற கோபம்
    இன்னும் தீரவில்லை
    அதிரும் பறை

    உயராத கூலி
    உயரும் விலைவாசி
    வேதனையில் ஏழைகள்

    அயல்நாட்டில் ஊறுகாய்
    நம்நாட்டில் சாப்பாடு
    தொலைக்காட்சி


    மழை வந்ததும்
    உடன் வந்தது
    மண்வாசைனை

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி



    தென்னைமரம் தேங்காய்
    பனைமரம் நுங்கு
    உழைக்காத மனிதன் ?

    அகராதியில் இல்லாத சொல்
    அடிக்கடிப் பயன்படுத்தும் சொல்
    சும்மா

    திரைஅரங்கின் பெயரால்
    ஆபாசம் மறைத்தார்
    சுவரொட்டி

    --

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்



    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பறைக்குமேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?

    --

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மூலதனமின்றி
    அமோக லாபம்
    சாமியார் !

    மூளைச்சலவையால்
    மூளைஆக்கிரமிப்பு
    சாமியார் !

    பொருளுக்கு விற்பனை
    ஆன்மிக அருளுரை
    சாமியார் !

    பாவிகளின் புகலிடம்
    காவிஅணியும்
    சாமியார் !

    உதட்டில் ஆன்மிகம்
    உள்ளத்தில் காமம்
    சாமியார் !

    மோட்சம் தருவதாக
    மோசடி செய்பவர்
    சாமியார் !

    வித்தைக் காட்டி
    கத்தையாகப் பணம் சேர்ப்பு
    சாமியார் !


    நினைவூட்டியும்
    மறந்து விடுகின்றனர்
    பகுத்தறிவை !

    துருப்பிடித்தது
    பயன் படுத்தாததால்
    பகுத்தறிவு !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    சிறந்தது
    கடவுளைத் தொழுவதை விட
    பிறர் கண்ணீர் நிறுத்துவது !

    போட்டிப் போட்டு
    பண்பாடு சிதைப்பு
    ஊடகங்கள் !

    கிராமத்தில் குற்றம்
    நகரத்தில் விருது
    ஆபாச நடனம் !

    இறந்த பின்னும்
    இறக்காமல் வாழ்கின்றது
    செய்த தொண்டு !

    புசிக்க மறந்தேன்
    ரசிக்க ரசிக்க
    இயற்கை அழகு !

    கூடல் அங்கீகாரம்
    ஊர் கூடி
    திருமணம் !

    விண்ணில் அல்ல
    மண்ணில் சொர்க்கம்
    உணர்த்தியது பெண்மை !

    என்று மாறும்
    கோடிகள் பெறும் நடிகர்கள்
    கொடிகள் கட்டும் ரசிகர்கள் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    முட்டாள்களின்
    மூடச்செயல்
    தற்கொலை !

    தன்னம்பிக்கையற்றவர்களின்
    தரமற்ற செயல்
    தற்கொலை !

    தாழ்வு மனப்பான்மையின்
    வெளிப்பாடு
    தற்கொலை !

    கோழைகளின்
    கோழைத்தனம்
    தற்கொலை !

    பகுத்தறிவு மனிதனுக்கு
    அழகற்ற செயல்
    தற்கொலை !

    அவலம் கேவலம்
    செயற்கை மரணம்
    தற்கொலை !

    தீர்வு அல்ல
    தீராத அவச்சொல்
    தற்கொலை !

    மனச்சிதைவால்
    உயிர்ச்சிதைவு
    தற்கொலை !

    முடிவு அல்ல தொடக்கம்
    உறவுகளின் துக்கம்
    தற்கொலை !

    முடிவல்ல ஆரம்பம்
    பெற்றோரின் துன்பம்
    தற்கொலை !

    மடத்தனத்தின் உச்சம்
    உயிர் போவதே மிச்சம்
    தற்கொலை !

    வாழ்க்கை ஒருமுறைதான்
    வீணடிப்பது முறையோ ?
    தற்கொலை !

    உங்களின் செயலால்
    உறவுகளுக்கு இன்னல்
    தற்கொலை !

    தலைமுறைக்கே அவமானம்
    காற்றில் பறக்கும் மானம்
    தற்கொலை !

    ஒரே பிறப்பு உண்மை
    மறு பிறப்பு பொய்
    தற்கொலை ?

    கோடிகள் கொடுத்தாலும்
    மீட்க முடியாது உயிர்
    தற்கொலை ?

    உன்னால் உருவானதல்ல உன்னுயிர்
    உனக்கேது உரிமை
    தற்கொலை ?

    சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்
    உயிர் மாய்க்கும் குறையற்றவர்கள்
    தற்கொலை ?

    ஒழியட்டும் ஒழியட்டும்
    உலகை விட்டு ஒழியட்டும்
    தற்கொலை !

    முற்றுப்புள்ளி வைத்திடுவோம்
    முடிவு கட்டுவோம்
    தற்கொலைக்கு !

    வாழட்டும் வாழட்டும் உயிர்கள்
    இயற்கையாக வரட்டும் மரணம்
    வேண்டாம் வேண்டாம் தற்கொலை .

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அணைக்க முடியவில்லை
    குப்பைகளின் தீ
    அணு உலை தீ ?

    பல கோடி ஊழல்
    பிணையில் வெளியே
    ரொட்டி திருடன் சிறையில் !

    துன்பத்தால் அழுதவனுக்கு
    சிரித்து ஆறுதல் சொன்னது
    மலர் !

    மனம்
    அறம்
    மரம் !

    இன்றும் உள்ள பாத்திரங்கள்
    சகுனி கூனி
    அரசியல் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உணர்த்திச் சென்றன
    அலைகள்
    கடலின் வனப்பை !

    சந்தேகப்படுங்கள்
    நம்பாதீர்கள்
    "சாமி நான்" என்பானை !

    மூடி மறைக்க முடியவில்லை
    கோடிகளால்
    சாமியார் லீலைகள் !

    வளர்வது தெரியாது
    வளரும்
    காதல் மரம் !

    சொல்லில் அடங்காது
    சொன்னால் புரியாது
    காதல் !

    கூட்டம் கூடியது
    முக்கியப்புள்ளி நாய் இறந்தது
    முக்கியப்புள்ளி இறந்தார் ?

    உள்ளம் மலர்ந்தது
    நட்ட செடியில்
    பூத்தது பூ !

    மலர்ந்த மலர்
    மழலையின் சிரிப்பு
    மனதிற்கு மகிழ்வு !

    அன்பை அழித்து
    வம்பை வளர்கின்றது
    தொலைக்காட்சித் தொடர்கள் !

    அமோகமாக நடக்கின்றது
    குறுந்தகவல் கூட்டுக் கொள்ளை
    தொலைக்காட்சிகள் !

    தமிழ்த்திரைப்பட விளம்பரத்தில்
    ஆங்கிலத்தில் பெயர்கள்
    வெளையன் வாரிசுகள் !

    மீன் சாப்பிட்டது
    அழுக்கை
    சுத்தமானது குளம் !

  1. அரசியல் ! கவிஞர் இரா .இரவி

    தேவை இல்லை
    நீதி நேர்மை நாணயம்
    அரசியல் !

    மிகவும் தேவை
    நிதி ரவுடி பித்தலாட்டம்
    அரசியல் !

    ஏய்க்கத் தெரிந்தால்
    ஏற்றம் உறுதி
    அரசியல் !

    கூட்டுக் கொள்ளை
    கூட்டணிக் கொள்ளை
    அரசியல் !

    அணியும் உடையோ வெள்ளை
    அடிக்கும் பணமோ கருப்பு
    அரசியல் !

    சொன்னதை இல்லை என்பார்கள்
    சொல்லாததைச் சொன்னேன் என்பார்கள்
    அரசியல் !

    அண்ணன் தம்பி என்பார்கள்
    ஆள் வைத்துக் கொல்வார்கள்
    அரசியல் !

    சகோதரி சகோதரன் என்பார்கள்
    சகவாசம் இல்லை என்பார்கள்
    அரசியல் !

    என் உயிர்த் தொண்டன் என்பார்கள்
    சந்திக்க மறுப்பார்கள்
    அரசியல் !

    உங்கள் வீட்டுப் பிள்ளை என்பார்கள்
    தன் வீட்டுப் பிள்ளைகளை வளர்ப்பார்கள்
    அரசியல் !

    உயிர் எனக்கு துச்சம் என்பார்கள்
    பிறகு அச்சம் கொல்வார்கள்
    அரசியல் !

    பிரித்து ஆளும் சூழ்ச்சி
    நெஞ்சத்தில் நீர் வீழ்ச்சி
    அரசியல் !

    தேவை இல்லை படிப்பு
    அவசியம் தேவை நடிப்பு
    அரசியல் !

    ஓடி வருவேன் என்பார்கள்
    ஓடி விடுவார்கள் வென்றதும்
    அரசியல் !

    நன்றி மறவேன் என்பார்கள்
    நன்றி என்ன ? என்பார்கள்
    அரசியல் !

    வந்ததுப் பஞ்சம்
    நல்லவர்களுக்கு
    அரசியல் !

    கூடவே இருந்து குழிப் பறிக்கும்
    குணம் கற்பிக்கும்
    அரசியல் !

    உள் ஒன்று வைத்து
    புறம் ஒன்று பேசும்
    அரசியல் !

    பொது நலம் பேசும் உதடுகள்
    தன் நலம் மட்டுமே பேணும் உள்ளம்
    அரசியல் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    திரவத்தங்கம் திடத்தங்கம்
    விலை உயர உயர
    ஏழைகளுக்கு துன்பம் !

    பிறக்கையில் முகம் சுளித்தவர்கள்
    சாதித்தும் அகம் குளிர்ந்தார்கள்
    பெண் குழந்தை !

    கூட்டணிவைத்து கோடிகள்அடித்து
    கடைசியாக அறிவித்தனர்
    கசப்பான கூட்டணி !

    கோயில் கருவறை
    அனுமதி இல்லை
    தமிழ் தமிழன் !

    உயர் நீதி மன்றத்தில்
    தொடரும் தீண்டாமை
    தமிழ் மொழிக்கு !

    உதட்டிலும் உள்ளத்திலும்
    இல்லை தமிழ்
    தமிழன் ?

    பாதுகாக்க முடியவில்லை
    வேண்டவே வேண்டாம்
    புதிய சிலை !

    மரியாதைக்கு நிறுவியது
    அவமதிக்க காரணியானது
    சிலை !

    சாலையில் படுத்திருந்தான்
    சங்கடமின்றி
    குடிகாரன் !

    குடியால் கோடிகள் அரசுக்கு
    குடும்பம் தெருக்கோடிக்கு
    திருந்தாத குடிமகன்கள் !

    உதவுவதாக நினைத்து
    துன்புறுத்துகின்றனர்
    மாட்டுக்கு லாடம் ! (இரும்புக் காலணி)

    இறந்த வீட்டில் எல்லோரும்
    கேட்கும் கேள்வி
    காப்பீடு எவ்வளவு ?

    தவிர்க்கலாம் இட நெருக்கடி
    புதைப்பதை விட
    எரிப்பதே நலம் !

    அளவான குடும்பம்
    அளவற்ற இன்பம்
    குடும்பக்கட்டுப்பாடு !

    கருப்பணம் வெள்ளையானது
    கோயில் கணக்கில்
    உண்டியல் வசூல் !

    கவனம் கவனம்
    சாமியாரில் ஆசாமிகளில்
    யாரும் இல்லை சாமி !

    பறிக்கப் பறிக்கத் துளிர்க்கும்
    அட்சயப் பாத்திரம்
    தேயிலைச்செடி !

  1. மலர்க்கண்காட்சி ! கவிஞர் இரா .இரவி

    மலர்ந்த மலர்கள்
    மலர்வித்தன மனங்களை
    மலர்க்கண்காட்சி !

    பேசாத மலர்கள்
    பேசின நம்மோடு
    மலர்க்கண்காட்சி !

    மலர்களின் மாட்சி
    பார்த்தவர்கள் சாட்சி
    மலர்க்கண்காட்சி !

    மலைகளின் ராணிக்கு
    மலர்களின் மகுடம்
    மலர்க்கண்காட்சி !

    வளமான வனப்பு
    வந்தப்பின்னும் நினைப்பு
    மலர்க்கண்காட்சி !

    ரசித்துப் பார்த்ததில்
    புசிக்க மறந்தனர்
    மலர்க்கண்காட்சி !

    யாராலும் கூற இயலாது
    மிகச் சிறந்த மலர் எது ?
    மலர்க்கண்காட்சி !

    பார்த்த இடமெல்லாம் ராஜா
    மலர்களின் ராஜா ரோஜா
    மலர்க்கண்காட்சி !

    பூக்களை ரசிக்கும்
    பூவையரும் அழகு
    மலர்க்கண்காட்சி !

    கண்கொள்ளாக் காட்சி
    வண்ணங்களின் ஆட்சி
    மலர்க்கண்காட்சி !

    கண்டு ரசிக்க
    கண்கள் போதவில்லை
    மலர்க்கண்காட்சி !

    மனதிற்கு மகிழ்ச்சி
    உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி
    மலர்க்கண்காட்சி !

    மலருக்கு காயமின்றி
    தேன் எடுத்த வண்டு
    மலர்க்கண்காட்சி !

    மரங்களின் அரசி மடியில்
    மலர்களின் அரசாட்சி
    மலர்க்கண்காட்சி !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    நல்ல தீனி
    ஊடகங்களுக்கு
    சாமியார்கள் கூத்து !

    மெய்ப்பித்தனர்
    கடவுள் இல்லை
    சாமியார்கள் !

    இலவசம் மாற்றம்
    சொல் மட்டும்
    விலையில்லா !

    விமானிகள் வேலை நிறுத்தம்
    அமைச்சர் பிடிவாதம்
    பயணிகள் துன்பம் !

    எந்த ஊரும்
    ஈடாகவில்லை
    பிறந்த மண்ணிற்கு !

    தேவையற்றதை நீக்கிட
    கிடைத்தது
    சிலை !

  1. விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

    வந்தது பார்வை
    பார்வையற்றவர்களுக்கு
    விழிக்கொடை !

    இறந்தப் பின்னும்
    இறக்காத விழிகள்
    விழிக்கொடை !

    மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
    மனிதர்களுக்கு வேண்டும்
    விழிக்கொடை !

    கரு விழிகள்
    அகற்றியது இருள்
    விழிக்கொடை !

    வாழ்கிறான் கொடையில்
    வள்ளல் கர்ணன்
    விழிக்கொடை !

    உயிர்ப் பிரிந்தும்
    உயிர்ப் பெற்றது
    விழிக்கொடை !

    உடல் மாறியும்
    உயிர் உள்ளது
    விழிக்கொடை !

    ஒளி ஏற்றியது
    வழி காட்டியது
    விழிக்கொடை !

    துன்பம் துரத்தி
    இன்பம் ஈந்தது
    விழிக்கொடை !

    குறையை நீக்கி
    நிறைவாக்கியது
    விழிக்கொடை !

    மரிக்கவில்லை மனிதம்
    மனிதரில் புனிதம்
    விழிக்கொடை !

    வைத்தது முற்றுப்புள்ளி
    மூடநம்பிக்கைக்கு
    விழிக்கொடை !

    செத்தப்பின்னும்
    சாகவில்லை
    விழிக்கொடை !

    இறப்பிலும் பிறப்பு
    இறக்கத உறுப்பு
    விழிக்கொடை !

    மரணித்தும் மரணிக்கவில்லை
    முடிவிலும் இனிய தொடக்கம்
    விழிக்கொடை !

  1. மழை ! கவிஞர் இரா .இரவி

    வானில் இருந்து வரும்
    அமுதம்
    மழை !

    பார்க்கப் பரவசம்
    நனைந்தால் குதூகலம்
    மழை !

    பயிர்களின் உயிர் வளர்க்கும்
    விவசாயிக்கு வளம் சேர்க்கும்
    மழை !

    குடை வேண்டாம்
    தடை வேண்டாம்
    மழை !

    காதலி அருகில் இருந்தால்
    காதல் மழை
    மழை !

    சூடான தேநீர்
    சுவை மிகுதி
    மழை !

    கோடையில் வந்தால்
    கொண்டாட்டம்
    மழை !

    சாலை வியாபாரிகளுக்கு
    திண்டாட்டம்
    மழை !

    குடிசைவாசிகளுக்கு
    ஒழுகும் கவலை
    மழை !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மின் விளக்கின்
    வெளிச்சத்தில்
    எடிசன் முகம் !

    இறந்தபின்னும்
    ஒலி எழுப்பும் விலங்கு
    மத்தளம் !

    திட்டங்கள் கோடிகளில்
    ஏழைகள் தெருக் கோடியில்
    என்று விடியல் ?

    பாலியல் குற்றவாளி
    கொலைக் குற்றவாளி
    சாமியார்கள் ?

    தாமதமான நீதி அநீதி
    தண்டியுங்கள் விரைவில்
    இலங்கைக் கொடூரன் !


    சரியாக ஆடும்
    ஆட்டத்தின் பெயரோ
    தப்பாட்டம் !

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இசை !

    மனதை மலர்விக்கும்
    சிந்தையைச் செதுக்கும்
    கவிதை !

  1. பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி

    தோகை உண்டு
    பெண் மயிலுக்கு
    பரத நாட்டியம் !

    பேசும் விழிகள்
    சைகை மொழிகள்
    பரத நாட்டியம் !

    வேற்று மொழியை விட
    தமிழ் மொழி இனிமை
    பரத நாட்டியம் !

    கண்டு ரசித்தால்
    கவலைகள் போகும்
    பரத நாட்டியம் !


    வரிகளுக்கு ஏற்றப்படி
    வஞ்சியின் நளினம்
    பரத நாட்டியம் !

    கைகளும் பேசும்
    கால்களும் பேசும்
    பரத நாட்டியம் !

    குத்துப் பாட்டும் உண்டு
    குறத்தி நடனம்
    பரத நாட்டியம் !

    ராகத்தை ரசிக்கலாம்
    சோகத்தை மறக்கலாம்
    பரத நாட்டியம் !

    புத்துணர்வுப் பெறலாம்
    புதுமைகள் காணலாம்
    பரத நாட்டியம் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    இரும்புச் சங்கிலி இழுத்துத் தோற்றதால்
    கயிற்றை இழுக்க முயலவில்லை
    கோயில் யானை !

    இரண்டும் மிக அவசியம்
    இல்லாவிட்டால் சிரமம்
    சம்சாரம் மின்சாரம் !

    குளிர் பூமி ஆடை
    வெப்ப பூமியில்
    மட்டை விளையாட்டு (கிரிக்கெட் )

    இயற்கையை அழிக்காதே
    உணர்த்துகின்றது
    புயல் !

    மரம் வைத்தவர்
    தண்ணீர் ஊற்றவில்லை
    அமைச்சர் !

    அவமானப்படுத்துகின்றனர்
    புத்தரை
    புத்தபிட்சுகள் !

    மேலும் மேலும் சலுகை
    வருமானம் மிக்க
    காவல்துறைக்கு !

    காரணம் புரியவில்லை
    கவர்ச்சி நடிகைக்கு
    தேசியவிருது ?

    மக்கள் விருப்பம்
    அனைத்துத் தொகுதியிலும்
    இடைத் தேர்தல் !

    விலை மதிப்பற்ற உயிர்கள் பலி
    தேர்வடம் இரும்பில்
    பகுத்தறிவு ?

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வைத்துக் கொண்டப் பந்தை மிதித்தனர்
    தந்துவிட்ட புல்லாங்குழல் முத்தமிட்டனர்
    காற்று !

    முற்றும் துறந்த முனிவர்கள்
    முடி சூடிக் கொண்டார்கள்
    தங்கக் கீரிடம் !

    ஒரு லட்சம் வாங்கியவர் உள்ளே
    பல கோடி வாங்கியவர் வெளியே
    இன்றைய அரசியல் !

    ஆலையில் இட்டக் கரும்பாக
    விவசாயி
    கரும்பு நட்டத்தில் நட்டம் !

    தீக்குளிக்கச் சொன்ன இராமனிடம்
    சீதை சொன்னாள்
    முதலில் நீ குதி !

    தலைவர்கள் சண்டை
    மக்கள் வேண்டினர்
    வேண்டாம் புத்தாண்டு !

    மாத ஊதியம் லட்சத்தில்
    மன நிம்மதி பூஜ்ஜியம்
    கணினிப் பொறியாளர் !


    இருந்தால் நன்றுதான்
    ஆனால் இல்லை
    கடவுள் !

    இல்லம் வந்தது பால்
    கடைக்குச் சென்றால் மது
    மதிப்பதில்லை நல்லதை !

  1. புத்தகம் கவிஞர் இரா .இரவி

    மனிதனை மனிதனாக
    வாழ வைப்பது
    புத்தகம் !

    மனிதனின் வளர்ச்சிக்கு
    வித்திட்டது
    புத்தகம் !

    பண்பாடு வளர்த்து
    பண்பைப் போதிப்பது
    புத்தகம் !

    அறிவியல் அறிவை
    அகிலம் பரப்பியது
    புத்தகம் !

    பயனுள்ள கண்டுபிடிப்பு
    வாழ்வின் பிடிப்பு
    புத்தகம் !

    புரட்சியாளனை
    உருவாக்கியது
    புத்தகம் !

    அகிம்சைவாதியை
    வளர்த்தது
    புத்தகம் !

    பகுத்தறிவுப் பகலவன்
    ஒளிவீசக் காரணம்
    புத்தகம் !

    பேரறிஞர்
    புகழ்ப் பெறக் காரணம்
    புத்தகம் !

    அகமும் புறமும்
    சுத்தம் செய்வது
    புத்தகம் !

    அகம்பாவம் ஆணவம்
    அகற்றுவது
    புத்தகம் !

    பணிவு கனிவு தெளிவு
    வழங்குவது
    புத்தகம் !

    அறிவை விரிவு செய்து
    அறியாமையை அகற்றுவது
    புத்தகம் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிரை அடிப்பான் கொள்ளை
    உடையின் நிறம் வெள்ளை
    வெண்சுருட்டு ( சிகரெட் )

    தேள் படம் போட்டும்
    கவலையின்றி சுவைக்கின்றான்
    வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் )

    குடி குடி கெடுக்கும்
    படித்து விட்டு குடிக்கின்றான்
    படித்தவன் ?

    தெரிந்தே குடித்தனர்
    புற்று நோய் வரும்
    குளிர்பானம் !

    அழுதாலும்
    ஒளி தந்தது
    மெழுகு !

    வானிலிருந்து குதித்தும்
    காயம் இல்லை
    மழைத் துளி !

    சுமை அல்ல பாதுகாப்பு
    கூடு
    நத்தை !

    அவள் வரும் முன்னே
    வந்தது இசை ஓசை
    கொலுசு !

    சிதைத்தப் போதும்
    தந்தது வாசம்
    சந்தனம் !

    அன்று நல்லவர்களுக்கு மட்டும்
    இன்று கேட்டவர்களுக்கு மட்டும்
    அரசியல் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    தமிழர்களை விட
    சிங்களர் மீதே பாசம்
    இந்தியா !

    காற்றில் பறந்தது
    இந்தியாவின் மானம்
    இராணுவத்தில் ஊழல் !

    ஓழிக்க முடியவில்லை ஊழல்
    ஒழிக்கலாமா ?
    ஊழல்வாதிகளை !

    காமராஜ் கக்கன்
    காலத்தோடு முடிந்தது
    அரசியலில் தூய்மை !

    வாரிசு அரசியல்
    ஓழிக்க வழி
    வாரிசில்லாத் தலைவர் !

    தோழி ஆதிக்கம்
    ஓழிக்க வழி
    தோழி இல்லாத் தலைவி !

    மாற்றினர்
    தலைநகரை துக்ளக்
    புத்தாண்டை அரசியல்வாதிகள் !

    போதித்து
    அமைதி
    புத்தரின் சிலை !

    புத்தரை வணங்கியும்
    புத்திக் கெட்ட
    இலங்கை !

    இலைகள் உதிர்ந்தும்
    நம்பிக்கையோடு மரம்
    மழை வரும் !

    நீர் உயர
    தானும் உயந்தது
    தாமரை !

    வழக்கொழிந்தது
    கிராமங்களில்
    குலவைச் சத்தம் !

    நிலத்தையும்
    மலடாக்கியது
    மலட்டு விதை !

    தனியாக செல்கையில்
    துணைக்கு வந்தது
    நிலா !

    மரத்தை வாங்கியவன்
    பிய்த்து எறிந்தான்
    பார்வையின் கூட்டை !

    பதட்டம் இல்லை
    பற்றி எரிந்தும்
    உள்ளது காப்பீடு !

    மாதவம் செய்து
    மங்கையாகப் பிறந்து
    குப்பைத் தொட்டியில் !

    பணக்காரகளுக்கு அருகில்
    ஏழைகளுக்கு தூரத்தில்
    கடவுள் தரிசனம் !

    இன்றும் வாழும்
    கொடிய அரக்கன்
    தீண்டாமை !

    அத்திப் பூத்தாற்ப் போல
    நல்லவர்கள்
    காவல் துறையில் !

    சும்மா இருப்பதாகஅறிமுகப் படுத்தினார்கள்
    அனைத்து வேலை செய்யும்
    அம்மாவை !

    இல்லம் அலுவலகம்
    இரண்டிலும் வேலை
    பெண்கள் !

    கேட்டுப் பாருங்கள்
    கவலை மறக்கலாம்
    இசை !

  1. தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி

    துண்டித்தது
    உறவுகளின் உரையாடலை
    தொ(ல்)லைக்காட்சி !

    வளர்ச்சியை விட
    வீழ்ச்சியே அதிகம்
    தொ(ல்)லைக்காட்சி !

    வன்மம் வளர்த்து
    தொன்மம் அழித்தது
    தொ(ல்)லைக்காட்சி !

    பாலில் கலந்த
    பாழும் நஞ்சு
    தொ(ல்)லைக்காட்சி !

    இல்லத்தரசிகளின்
    போதைப்போருளானது
    தொ(ல்)லைக்காட்சி !

    வளர்த்துவிடும்
    மாமியார் மருமகள் சண்டை
    தொ(ல்)லைக்காட்சி !


    கைவினைப் பொருட்களின்
    உற்பத்தி அழித்தது
    தொ(ல்)லைக்காட்சி !

    நன்மையை விட
    தீமையே அதிகம்
    தொ(ல்)லைக்காட்சி !

    பணம் பறித்து
    மனம் சிதைக்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    பழிக்குப் பழி வாங்கும்
    உணர்ச்சிப் போதிக்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    இரண்டு மனைவிகள்
    தொடர் நாயகர்களுக்கு
    தொ(ல்)லைக்காட்சி !

    பண்பாட்டைச் சிதைத்து
    குற்றம் வளர்க்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    பிஞ்சு நெஞ்சங்களில்
    நஞ்சு விதைக்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    மழலை மொட்டுகள்
    மனத்தைக் காயப்படுத்தும்
    தொ(ல்)லைக்காட்சி !

    நேரம் விழுங்கும்
    சுறா மீன்
    தொ(ல்)லைக்காட்சி !

    விளம்பர இடைவேளைகளில்
    பரிமாறப்படும் உணவுகள்
    தொ(ல்)லைக்காட்சி !

    ஆபாசம் காண்பித்து
    புத்தியைச் சிதைக்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    தமிழ்ப் பண்பாட்டை
    தரை மட்டமாக்கும்
    தொ(ல்)லைக்காட்சி !

    குறுந்தகவல் வழி
    பணம் பறிக்கும் திருடன்
    தொ(ல்)லைக்காட்சி !

    மூடி விடுங்கள்
    நாடு உருப்படும்
    தொ(ல்)லைக்காட்சி !

  1. மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அதனை நீ குடிக்க
    அது உன் உயிர் குடிக்கும்
    மது !

    இலவசமென்றாலும் வேண்டாம்
    உனைக் கொல்லும் நஞ்சு
    மது !

    என்றைக்காவது என்றுத் தொடங்கி
    என்றும் வேண்டும் என்றாகும்
    மது !

    நண்பனுக்காகக் குடிக்காதே
    நண்பனைத் திருத்திடு
    மது !

    சிந்தனையைச் சிதைக்கும்
    செயலினைத் தடுக்கும்
    மது !

    மதித்திட வாழ்ந்திடு
    அவமதித்திட வாழாதே
    மது !

    இன்பத்தைக் கொண்டாட
    துன்பம் எதற்கடா
    மது !

    சோகத்தை மறந்திட
    மருந்தன்று
    மது !

    நன்மை ஏதுமில்லை
    தீமை ஏராளம்
    மது !

    இழப்பு பணம் மட்டுமல்ல
    மானமும்தான்
    மது !

    இல்லத்தரசிகளின்
    முதல் எதிரி
    மது !

    திறமைகளை மறக்கடிக்கும்
    ஆற்றலை அழித்துவிடும்
    மது !

    உடலுக்குக் கேடு மட்டுமல்ல
    ஒழுக்கக் கேடு
    மது !

    வீழ்ந்தவர்கள் கோடி
    வீழ்வது தெருக்கோடி
    மது !

    அடிமை ஆக்கும்
    அடி மடியில் கை வைக்கும்
    மது !

    மனிதனை மிருகமாக்கும்
    பகுத்தறிவை மழுங்கடிக்கும்
    மது !

    குற்றவாளியாக்கும்
    கொலைகாரனாக்கும்
    மது !

    நிதானம் இழந்து
    நிலத்தில் வீழ்த்தும்
    மது !


    வாய் மட்டுமல்ல
    வாழ்க்கையும் நாறும்
    மது !

    உழைத்தப் பணத்தை
    ஊதாரியாக்கும்
    மது !

    குடி குடியை மட்டுமல்ல
    சமுதாயத்தையும் கெடுக்கும்
    மது !

    கேடியாக மாறுவாய்
    ஜோடிஇன்றி வாடுவாய்
    மது !

    தொடவே தொடதே
    தொட்டால் பற்றிக்கொள்ளும்
    மது !

    மட்டமாக்கும் உன்னை
    மடையனாக்கும் உன்னை
    மது !

    கேளீக்கை என்று தொடங்கி
    வாடிக்கையாகிவிடும்
    மது !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    சிரித்தான் பிச்சைக்காரன்
    சாலையோர வியாபாரி
    கையேந்தும் காவலர் !

    உண்மை
    நுணலும் தன் வாயால் கெடும்
    அரசியல் தலைவர் !

    வருந்தியது
    மரம்
    பிரிந்த இலைகள் !

    பேசும் சிலை
    நடக்கும் ஓவியம்
    அவள் !

    சிறகுகள் இருந்தும்
    வானில் பறப்பதில்லை
    வாத்து !

    வேண்டா வெறுப்பாக
    அபராதத்திற்குப் பயந்து
    தலைக்கவசம் !

    பிடித்தால் மாட்டலாம்
    பின்னால் மனைவியிடம்
    தலைக்கவசம் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    இழுக்க இழுக்க இன்பமன்று
    இழுக்க இழுக்கத் துன்பம்
    சிகரெட் !

    புண்பட்ட மனதைப் புகை விட்டு
    புண்ணாக்காதே மேலும்
    சிகரெட் !

    விரைவில் சாம்பலாவாய்
    உணர்த்தும் சாம்பல்
    சிகரெட் !

    புகையில் வளையம்
    உனக்கான மலர்வளையம்
    சிகரெட் !

    நடிகரைப் பார்த்துப் புகைக்காதே
    உன்னை நீயே புதைக்காதே
    சிகரெட் !

    உனக்கு மட்டுமல்ல
    சுற்றி இருப்பவருக்கும் நோய்
    சிகரெட் !

    வெள்ளையன் கற்பித்த
    வெள்ளை உயிர்க்கொல்லி
    சிகரெட் !

    எந்தப் பெண்ணும்
    என்றும் விரும்பவில்லை
    சிகரெட் !

    தூக்கம் வர விழிக்க
    தயாரிக்கவில்லை
    சிகரெட் !

    ஆதியில் இல்லை
    பாதியில் வந்த தொல்லை
    சிகரெட் !

    தீங்குத் தரும் கங்கு
    தீண்டாது ஒதுங்கு
    சிகரெட் !

    உடல் நலத்திற்குக் கேடு
    உடனே சிந்தித்து விட்டுவிடு
    சிகரெட் !

    முயன்றால் முடியும்
    முடிவெடு வேண்டாம் என்று
    சிகரெட் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மழையில் நனைந்தும்
    வண்ணம் மாறவில்லை
    வண்ணத்துப்பூச்சி !

    தீயால் சுட்டபோதும்
    வண்ணம் மாறவில்லை
    வெண்சங்கு !

    திக்காயம் பட்டபோதும்
    நல்கியது இனிய இசை
    புல்லாங்குழல் !

    பயணத்தில்
    வரிசை மாறவில்லை
    எறும்பு !

    சுமையை
    சுமையாகக் கருதவில்லை
    நண்டு !

    பசித்தபோதும்
    உண்ணவில்லை புல்
    புலி !

    ஏமாற்றிக் கரந்தபோதும்
    பால் தந்தது
    பசு !

    உழுது உதவியது
    உழவனுக்கு
    மண் புழு !

    அடித்தப்போதும்
    குரைத்து உதவியது
    நாய் !

    வெட்டியப்போதும்
    கறியானது
    ஆடு !

    வலையில் சிக்கியும்
    உணவானது
    மீன் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    ஏட்டில் எழுத்தில் சரி
    வீட்டில் நடைமுறையில் எப்போது ?
    பெண் விடுதலை !

    விபத்து
    விழிப்புணர்வு விதைத்தது
    குருதிக் கொடை !

    கட்டைவிரல் கேட்ட
    நாக்கை வெட்டினான்
    இன்றைய ஏகலைவன் !

    கைகளை விட
    உயர்ந்தது
    தன்னம்பிக்கை !

    இன்றைய அமைச்சர்
    நாளைய கைதி
    நாட்டு நடப்பு !

    பாசப் போராட்டம்
    அழாத தந்தை அழுதார்
    மகளுக்குத் திருமணம் !

    பசி எடுக்க
    மருந்துக் கேட்டார்
    பணக்காரர் !

    தூக்கம் வர
    மாத்திரைக் கேட்டார்
    பணக்காரர் !

    உச்சரிப்புத் தவறினாலும்
    கேட்க இனிமை
    மழலை !

    மக்கள் விருப்பம்
    அனைத்து தொகுதியிலும்
    இடைத் தேர்தல் !

    விதைப்புமின்றி
    அறுவடையுமின்றி
    விலை நிலங்கள் !

    உள்ளே சென்றனர்
    மூக்கைப் பிடித்து
    நவீன கழிப்பறை ?

    குசியில் குடிமகன்கள்
    கூடுதல் நேரம்
    மதுக்கடை !

    யாரும் விற்கவில்லை
    தரமான
    தங்கம் !

    விளம்பர விரயம்
    சேர்ந்துக் கொண்டது
    பொருளின் விலையில் !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மரணம் இல்லை
    மக்களுக்காகப் போராடிய
    போராளிகளுக்கு !

    செலவற்ற
    வரவு
    புன்னகை !

    வலிமை வாய்ந்தது
    சிறந்த ஆயுதம்
    அன்பு !

    கண்டுபிடிக்கவில்லை
    மருந்து
    காதல் நோய் !


    எங்கும் இல்லை
    தமிழகம் தவிர
    பச்சைக் குத்தும் தொண்டர்கள் !

    ஓய்விலும் ஓய்வின்றி
    உழைத்திடும் பெண்கள்
    மாத விலக்கு !

    வென்றவர்களுக்குப் புரியவில்லை
    தோற்ற வர்களுக்குப் புரிந்தது
    காதலின் அருமை !

    ஏற்றத்தாழ்வு
    உழைப்பதில்
    கடிகார முட்கள்

    நேரம் பார்த்து தோல்வி
    நேரம் பார்க்காது வெற்றி
    மூடநம்பிக்கை !

    ஒரே மாதிரி
    ஒருவரும் இல்லை
    மனிதர்கள் !

    அதிசயம்
    ஆனால் உண்மை
    உடலின் இயக்கம் !

    தேவை சிக்கனம்
    பயன்பாட்டில் இக்கணம்
    மின்சாரம் !

    அழகுதான்
    கழுதை
    குட்டியில் !

    ஊழல்
    உடன் பிறந்த நோய்
    அரசியல்வாதிகள் !

    இக்கரைக்கு
    அக்கரைப் பச்சை
    அரசியல்வாதிகள் !

    மூலதனம்
    பொய் வாய்
    அரசியல் !

    ஊ ழல் ஒழிக்க வந்தவருக்கு
    பண விருது
    ஊழல் ?

    மக்கள் மறக்கவில்லை
    இருவரையும்
    காந்தி !கோட்சே !

    பெரிய மனிதர்களின்
    சின்னப் புத்தி
    ஊழல் !

    தன்னலம் மறந்து அன்று
    தன்னலம் ஒன்றே இன்று
    அரசியல் !

    இறங்காதோ ?
    ஏக்கத்தில் ஏழைகள்
    விலைவாசி !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி



    பறவைகளின் எச்சம்
    மரங்கலானது மிச்சம்
    இயற்கையின் உச்சம் !

    அமர்வதும் அழகு
    பறப்பதும் அழகு
    பட்டாம் பூச்சி !

    உணரந்தவர்கள் மட்டும்
    உணரும் உன்னது உணர்வு
    காதல் !

    பொன்முட்டை வாத்து
    அறுத்த கதையாக
    மரம் வெட்டி விறகு !

    விலங்கை முறி
    சிறகை விரி
    இளம் விதவை !

    அழுவதில்லை
    சிறைபடுத்தப்பட்டும்
    தொட்டி மீன்கள் !

    பயமுறுத்தியது
    கர்ஜனை
    சிங்கம் !

    தேவையில்லை
    தண்ணீர்
    செயற்கைச் செடிகள் !

    ஏமாளித் தொண்டன்
    கோமாளித் தலைவன்
    அரசியல் !

    சுதந்திர இந்தியாவில்
    சுதந்திரக் கொள்ளை
    அரசியல் !

    ரணமானது மனசு
    புயல் நிவாரணத்திலும்
    கையூட்டு !

    அப்போது எப்போது என்பது தெரிந்து
    இப்போது எப்போது என்பது தெரியாது
    தொடரும் மின் தடை !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


    சுந்தர இலங்கை
    சுடுகாடானது
    சிங்கள இனவெறியால்

    மழையை வெறுத்தான்
    விவசாயி
    அறுவடையில் வந்ததால்

    அதிர்ச்சிதான்
    முகம் காட்டும் கண்ணாடி
    அகம் காட்டினால்

    பூமி வெப்பமயமாவதால்
    மனிதன் வெப்பமாகிறான்
    வன்முறை

    வளரும் நாடுகள்
    வளரத்தடை
    வளர்ந்தநாடுகள்








    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி
    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    http://www.noolulagam.com/product/?pid=6802#response

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க
    கண் தானம் செய்வோம் !!

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    சுற்றுச் சுழல்

    முயன்றால் சாத்தியமே
    மரணமில்லாப் பெருவாழ்வு
    சுற்றுச் சுழல் பேணல்

    வீடு தெரு ஊர்
    சுத்தமானால்
    ஓடிவிடும் நோய்கள்

    தீமையின் உச்சம்
    மக்காத எச்சம்
    பாலித்தீன்

    உணர்ந்திடுக
    மரம் வெட்ட
    மழை பொய்க்கும்

    கரும் புகை
    பெரும் பகை
    உயிர்களுக்கு

    கண்ணுக்குப் புலப்படாது
    புலன்களை முடக்கும்
    கிருமிகள்

    தெரிந்திடுக
    காற்றின் மாசு
    மூச்சின் மாசு

    இயற்க்கை வரத்தை
    சாபமாக்கிச் சங்கடப்படும்
    மனிதன்

    அறிந்திடுக
    சுத்தம் சுகம் தரும்
    அசுத்தம் நோய் தரும்

    புரிந்திடுக
    செயற்கை உரம் தீங்கு
    இயற்க்கை உரம் நன்கு

    கட்சிக் கொடிகளை விட்டு
    பச்சைக் கொடிகளை வளருங்கள்
    பசுமையாகும்

    மதிக்கத் தக்கது
    ரசனை மிக்கது
    ரசாயணமில்லா விவசாயம்

    வேண்டாம் வேண்டாம்
    பூச்சிக் கொல்லி மருந்து
    மனிதனையும் கொல்கிறது

    தாய்ப்பால் இயற்க்கை உரம்
    புட்டிப்பால் செயற்க்கை உரம்
    வேண்டாம் உலகமயம்
    உழைக்காமல் உண்பது
    திருட்டு
    உழைப்பே உயர்வு

  1. அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    காணிக்கைக் கேட்காத
    கண் கண்ட கடவுள்
    அம்மா

    நடமாடும்
    தெய்வம்
    அம்மா

    கருவறை உள்ள
    கடவுள்
    அம்மா

    உயிர் தந்த உயிர்
    உயிர் வளர்த்த உயிர்
    அம்மா

    மனதில் அழியாத ஓவியம்
    மறக்க முடியாத காவியம்
    அம்மா

    ஆடுகளும் மாடுகளும் கூட
    உச்சரிக்கும் உயர்ந்த சொல்
    அம்மா

    வாய் பேசாத ஜீவன்களும்
    பேசிடும் ஒரே சொல்
    அம்மா

    மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
    உருகிடும் மெழுகு
    அம்மா

    உச்சங்களின் உச்சம்
    உலகின் உச்சம்
    அம்மா

    அன்பின் சின்னம்
    அமைதியின் திரு உருவம்
    அம்மா

    திசைக் காட்டும்
    கலங்கரை விளக்கம்
    அம்மா

    கரை சேர்க்கும் தோணி
    உயர்த்திடும் ஏணி
    அம்மா

    நேசம் பாசம் மிக்கவள்
    வேசம் அறியாதவள்
    அம்மா

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    தென்னைமரம் தேங்காய்
    பனைமரம் நுங்கு
    உழைக்காத மனிதன் ?

    அகராதியில் இல்லாத சொல்
    அடிக்கடிப் பயன்படுத்தும் சொல்
    சும்மா

    திரைஅரங்கின் பெயரால்
    ஆபாசம் மறைத்தார்
    சுவரொட்டி


    அங்கிகரிக்கப்பட்ட
    சூதாட்டம்
    பங்குச்சந்தை

  1. ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

    ஹிட்லரின் தற்கொலை
    முடிவை நீயே எடு
    ராஜபட்சே

    மரணம் உறுதி
    விரைவில் இறுதி
    ராஜபட்சே

    தப்புச் செய்தவன்
    தப்பிக்கப் பார்க்கிறான்
    ராஜபட்சே

    பலநாள் கொலைகாரன்
    ஒரு நாள் அகப்பட்டான்
    ராஜபட்சே

    கெட்டிக்காரன் புளுகு
    எட்டு நாளைக்குதான்
    ராஜபட்சே

    வணங்கிய புத்தரும்
    கைகழுவினார்
    ராஜபட்சே

    மொட்டைப் பிட்சுக்களால்
    காக்க முடியாது உன்னை
    ராஜபட்சே

    எத்தனுக்கு எத்தன்
    உலகில் உண்டு உணர்
    ராஜபட்சே

    முகத்தில் தெரியுது
    மரணபயம் உனக்கு
    ராஜபட்சே

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான் உண்மை
    ராஜபட்சே

    கூட்டுக்களவானி பொன்சேகா
    உன்னுடன் இல்லை
    ராஜபட்சே

  1. ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    பார்க்காதவர்கள் பாருங்கள்
    தேவதை
    என்னவள்

    நடந்து சென்றாள்
    கடந்து சென்றாள்
    கடத்திச்சென்றாள்

    சக்தியில்
    மின்சாரத்தை வென்றது
    அவள் கண்சாரம்

    வேண்டாம் வண்ணம்
    இயற்கையாகவே சிகப்பு
    அவள் இதழ்கள்

    உச்சரிப்பை விட
    அசைவே அழகு
    அவள் இதழ்கள்

    செவிகளை விட
    விழிகளுக்கு இன்பம்
    அவள்

    ஆயிரம்
    அர்த்தம் உண்டு
    மவுனத்திற்கு

    வருகிறது
    பெரு மூச்சு
    அவளை நினைத்தாலே

    இன்று நினைத்தாலும்
    மனதில் மகிழ்ச்சி
    அவள் புன்னகை

    கால்தடம் அழித்தது
    கடல் அலை
    உள்ளத்தின் தடம் ?

    முகம் சிரித்தாலும்
    அகம் அழுகின்றது
    காதல் தோல்வி

    சோகமான முடிவுகள்
    சுகமான சுமைகள்
    காதல் தோல்வி

  1. ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    இன்றும் காணலாம்
    டைனோசர்கள்
    அரசியல்வாதிகள்

    சுருங்கச்சொல்லி
    விளங்கவைத்தல்
    ஹைக்கூ

    வாடிக்கையானது
    காக்காக் குளியல்
    பெரு நகரங்களில்

    ராமன் ஆண்டாலும்
    ராவணன் ஆண்டாலும்
    ஒழியவில்லை வறுமை

    உலகெலாம் பரவியது
    தேமதுரத் தமிழோசை அல்ல
    ஊழல் ஓசை

    பெருகப் பெருக
    பெருகுது வன்முறை
    மக்கள்தொகை

    பலதாரம் முடித்தவர்
    பண்பாட்டுப் பேச்சு
    ஒருவனுக்கு ஒருத்தி

    சிலைகளில் தெரிந்தது
    ஆடை அணிகலனும்
    சிற்பியின் சிறப்பும்

    கூட்டம் கூடுவதில்லை
    இலக்கிய விழாக்களுக்கு
    தொலைகாட்சிகளால்

    நிஜத்தை வென்றது நிழல்
    நாடகத்தை வென்றது
    திரைப்படம்

  1. ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    புறத்தில் கோபம்
    அகத்தில் இன்பம்
    அவள் பலாப்பழம்

    யானைப்பசிக்கு
    சோளப்பொரி
    அவள் முத்தம்

    இதழ்கள் வழி
    இனிமைப் பகிர்வு
    முத்தம்

    கைரேகை பதிந்தனர்
    படித்தவர்களும்
    நவீன வருகைப்பதிவு

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பாறைக்குமேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    மன்னராட்சியையும் வென்றார்கள்
    அரசியல்வாதிகள்
    குடும்ப அரசியிலில்

    மனிதனால் படைக்கப்பட்டு
    மனிதனையே படுத்துகின்றது
    பணம்

    எங்கு ?முறையிடுவது
    ஆண் காவலர்களால்
    பெண் காவலர்களுக்குத் தொல்லை

    அவள் தந்த
    சங்கு பயன்பட்டது
    இறுதி ஊர்வலத்திற்கு

    சவுக்குமரம்
    பார்க்கையில்
    அவள் நினைவு

    தமிழைக் காத்ததில்
    பெரும்பங்குப் பெற்றன
    பனை மரங்கள்

    தமிழை அழிப்பதில்
    பெரும்பங்குப் பெற்றன
    தொலைக்காட்சிகள்

    மூடநம்பிக்கையால்
    முற்றுப் பெற்றது
    சேதுகால்வாய்த் திட்டம்

    இடித்ததால்
    இடிந்தது மனிதநேயம்
    பாபர் மசூதி

    எட்டாவது அதிசயம்
    ஊழலற்ற
    அரசியல்வாதி

    மூச்சுக்காற்று வெப்பமானது
    ஏழை முதிர்கன்னிக்கு
    தங்கத்தின் விலையால்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    கருவறையில் உயிர்ப்பு
    கல்லறையில் துயில்வு
    இடைப்பட்டதே வாழ்க்கை

    எல்லோரும் சிரிக்க
    அழுது பிறந்தது
    குழந்தை

    எல்லோரும் அழ
    அமைதியாக இருந்தது
    பிணம்

    நடமாடும் நயாகரா
    நடந்துவரும் நந்தவனம்
    என்னவள்

    பெயருக்கு காதலிக்கவில்லை
    பெயரையே காதலித்தேன்
    மலரும் நினைவுகள்

    அதிக வெளிச்சமும்
    ஒருவகையில் இருட்டுத்தான்
    எதுவும் தெரியாது

    கூந்தல் மட்டுமல்ல
    வாயும் நீளம்தான்
    அவளுக்கு

  1. ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி


    அணையப் போகும் விளக்கு
    சுடர் விட்டு எரியும்
    ராஜபட்சே

    பாவத்தின் சம்பளம்
    விரைவில் கிட்டும்
    ராஜபட்சே

    எத்தனைக் காலம்தான்
    ஏமாற்றமுடியும்
    ராஜபட்சே

    பேராசை பெரும் நஷ்டம்
    பொன்மொழியை மெய்ப்பித்தாய்
    ராஜபட்சே

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    இயற்கை எழுதிய கவிதையில்
    எழுத்துப்பிழைகள்
    திருநங்கைகள்

    உணர்த்தியது
    பசியின் கொடுமை
    நோன்பு

    வக்கிரம் வளர்க்கும்
    வஞ்சனைத் தொடர்கள்
    தொலைக்காட்சிகளில்

    அன்று இலங்கை கொடூரனுக்கு
    இன்று இந்திய வில்லிக்கு
    புற்றுநோய்

    ஆணி அடித்து
    ரணப்படுத்தி விளம்பரம்
    சாலையோர மரங்களில்

    படமே இல்லை
    உதவியது விளம்பரம்
    முன்னாள் நடிகைக்கு

    புகைப் பிடிக்கின்றதோ ?
    மலை
    வான் மேகம்

    கண்ணால்
    காண்பதும் பொய்
    மலையை முத்தமிடும் வானம்

    ஒழித்து விடு
    பொன்னாசை பட்டாசை
    நிரந்தரம் நிம்மதி

    விரயமாவதைப் பயன்படுத்திடு
    விவேகமாக வளரந்திடு
    சூரிய சக்தி

  1. நிலவு ! ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    காதலிக்கு உவமை
    கண்ணுக்கு இனிமை
    நிலவு !

    பாடாத கவிஞர் இல்லை
    பாடதவர் கவிஞரே இல்லை
    நிலவு !

    கண்ணால் காண்பதும் பொய்
    வளரவுமில்லை தேயவுமில்லை
    நிலவு !

    அல்லியை மட்டுமல்ல
    அனைவரையும் மலர்விக்கும்
    நிலவு !

    சூரியனின் கண்ணாடி
    சுடாத சுடரொளி
    நிலவு !

    வானில் மட்டுமல்ல
    குளத்திலும் மிதக்கும்
    நிலவு !

    தூரத்தில் இருந்தாலும்
    துயரம் போக்கும்
    நிலவு !

    பார்த்தால் பரவசம்
    பார்த்தவர் உள்ளம் தன்வசம்
    நிலவு !

    வானத்து தோசை
    சுவைத்திட ஆசை
    நிலவு !

    பார்வைக்கு வெண்மை
    மனிதர்கள் இல்லை உண்மை
    நிலவு !

    கூடவே நடக்கும்
    நின்றதும் நிற்கும்
    நிலவு !

    எட்டத்தில் இருந்தாலும்
    ஒட்டி இருப்பதாக உணர்வு
    நிலவு !

    காதலர்களின்
    காதல் சாட்சி
    நிலவு !

    புற இருள் மட்டுமன்றி
    அக இருளும் அகற்றும்
    நிலவு !

    என்றும் குழந்தைக்குச் சோறுட்ட
    இன்று ஆய்வுக்கும்
    நிலவு !

  1. நூலகம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அகம்
    தூய்மையகம்
    நூலகம்

    அறிவு வளர்க்கும்
    அற்புத இடம்
    நூலகம்

    பண்பாடுப் போதிக்கும்
    பயனுள்ள இடம்
    நூலகம்

    அறவழிப்படுத்தும்
    அழகிய இடம்
    நூலகம்

    அறிவாளிகள் இருக்கும்
    அறிவார்ந்த இடம்
    நூலகம்

    அமைதிப் படுத்தி
    மதி வளர்க்கும் இடம்
    நூலகம்

    விலைமதிப்பற்ற நூல்களின்
    வசிப்பிடம்
    நூலகம்

    மறைந்த தலைவர்கள்
    மறையாமல் வாழுமிடம்
    நூலகம்

    புரட்டப் புரட்ட
    புத்திப் புகட்டுமிடம்
    நூலகம்

    எடுத்துப் படிக்க
    இனிமை கூட்டுமிடம்
    நூலகம்

    வயது பேதமின்றி
    வாசகரை உயர்த்துமிடம்
    நூலகம்

    சாதி மத பேதமின்றி
    சமத்துவம் கற்பிக்குமிடம்
    நூலகம்

    அரசுப்பணி ஆட்சிப்பணி
    கிடைக்கக் காரணம்
    நூலகம்

    கடன் கேட்காத
    நல்ல நண்பன்
    நூல்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    திரவத்தங்கம் திடத்தங்கம்
    விலை உயர உயர
    ஏழைகளுக்கு துன்பம் !

    பிறக்கையில் முகம் சுளித்தவர்கள்
    சாதித்தும் அகம் குளிர்ந்தார்கள்
    பெண் குழந்தை !

    கூட்டணிவைத்து கோடிகள்அடித்து
    கடைசியாக அறிவித்தனர்
    கசப்பான கூட்டணி !

    கோயில் கருவறை
    அனுமதி இல்லை
    தமிழ் தமிழன் !

    உயர் நீதி மன்றத்தில்
    தொடரும் தீண்டாமை
    தமிழ் மொழிக்கு !

    உதட்டிலும் உள்ளத்திலும்
    இல்லை தமிழ்
    தமிழன் ?

    பாதுகாக்க முடியவில்லை
    வேண்டவே வேண்டாம்
    புதிய சிலை !

    மரியாதைக்கு நிறுவியது
    அவமதிக்க காரணியானது
    சிலை !

    சாலையில் படுத்திருந்தான்
    சங்கடமின்றி
    குடிகாரன் !

    குடியால் கோடிகள் அரசுக்கு
    குடும்பம் தெருக்கோடிக்கு
    திருந்தாத குடிமகன்கள் !

    உதவுவதாக நினைத்து
    துன்புறுத்துகின்றனர்
    மாட்டுக்கு லாடம் ! (இரும்புக் காலணி)

    இறந்த வீட்டில் எல்லோரும்
    கேட்கும் கேள்வி
    காப்பீடு எவ்வளவு ?

    தவிர்க்கலாம் இட நெருக்கடி
    புதைப்பதை விட
    எரிப்பதே நலம் !

    அளவான குடும்பம்
    அளவற்ற இன்பம்
    குடும்பக்கட்டுப்பாடு !

    கருப்பணம் வெள்ளையானது
    கோயில் கணக்கில்
    உண்டியல் வசூல் !

    கவனம் கவனம்
    சாமியாரில் ஆசாமிகளில்
    யாரும் இல்லை சாமி !

    பறிக்கப் பறிக்கத் துளிர்க்கும்
    அட்சயப் பாத்திரம்
    தேயிலைச்செடி !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வேண்டாம் தீபாவளி
    சாகவில்லை நரகாசூரன்
    வாழ்கிறான் இலங்கையில்

    காக்கவில்லை கடவுள்
    சாலை ஓவியரை
    மழை

    விலைவாசி ஏற்றம்
    ஏழைகள் திண்டாட்டம்
    தீபாவளி

    மாளிகைக் குழந்தையை
    ஏக்கத்துடன் பார்த்தது
    குடிசைக் குழந்தை

    சின்னமீன் செலவு
    சுறாமீன் வரவு
    அரசியல்

    ஆசையால் அழிவு
    தூண்டில் புழுவால்
    உயிரிழந்த மீன்

    தோன்றின் புகழோடு
    தோன்றுக
    வானவில்

  1. தந்தை பெரியார் ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி

    அறிவு பூட்டின்
    திறவுகோல்
    பெரியார்

    எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி?
    என்று கேட்க வைத்தவர்
    பெரியார்

    பிள்ளை பெறும் இயந்திரமா?
    பெண்கள் என்று கேட்டவர்
    பெரியார்

    கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள்
    என்பதை உணர்த்தியவர்
    பெரியார்

    அடித்து நொறுக்கினார்
    அடிமை விலங்கை
    பெரியார்

    அறிஞர் அண்ணா என்ற
    ஆலமரத்தின் விதை
    பெரியார்

    ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும்
    கிடைத்திடக் காரணமானவர்
    பெரியார்

    பெண் இனத்தின்
    போர்முரசு விடிவெள்ளி
    பெரியார்

    மூடநம்பிக்கை ஒழித்து
    தன்னம்பிக்கை விதைத்தவர்
    பெரியார்

    சமூக நீதியாம் இடஒதுக்கீட்டை
    சாதித்துக் காட்டியவர்
    பெரியார்

    “மனிதனை நினை” என்று
    மனிதனுக்கு நினைவூட்டியவர்
    பெரியார்

    தமிழருக்கு தன்மானம்
    கற்பித்த ஆசான்
    பெரியார்

    தள்ளாத வயதிலும்
    தளராத தேனீ
    பெரியார்

    இறுதி மூச்சு வரை
    கொள்கையை மூச்சாகக் கொண்டவர்
    பெரியார்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    நல்ல விளைச்சல்
    விளை நிலங்களில்
    மகிழ்ந்து நிறுவனங்கள்

    கத்துக்குட்டி உளறல்
    நதிநீர் இணைப்பு
    எதிர்ப்பு

    நல்ல முன்னேற்றம்
    நடுபக்க ஆபாசம்
    முகப்புப் பக்கத்தில்

    இன்று குடிநீர்
    நாளை சுவாசக்காற்று
    விலைக்கு வாங்குவோம்

    பெட்டி வாங்கியவர்
    பெட்டியில் பிணமானவர்
    பிணப்பெட்டி

    உணவு சமைக்க உதவும்
    ஊரை எரிக்கவும் உதவும்
    தீக்குச்சி

    நடிகை வரும் முன்னே
    வந்தது
    ஒப்பனை பெட்டி

    தனியார் பெருகியதால்
    தவிப்பில் உள்ளது
    அஞ்சல் பெட்டி

    தாத்தா பாட்டியை
    நினைவூட்டியது
    வெற்றிலைப்பெட்டி

    நகைகள் அனைத்தும்
    அடகுக் கடையில்
    நகைப்பெட்டி?

    மூடநம்பிக்கைகளில்
    ஒன்றானது
    புகார்ப்பெட்டி

  1. கவிஞர் இரா .இரவி

    நீளம் சக்கரமானது
    தொட்டது சுருண்டது
    ரயில் பூச்சி

    எருக்கம் பூ
    ரோசாப்பூ
    பேதமின்றி ஆதவன்

    முதலிடம் தமிழகம்
    முட்டாள் தனத்தில்
    அட்சயதிரிதியில் தங்கம்

    வென்றாள் கண்ணகி
    சிலப்பதிகாரத்திலும்
    சிலை அதிகாரத்திலும்

    எதுவும் செய்வான்
    செய்யாமலும் இருப்பான்
    அவளுக்காக

  1. ஹைக்கூ கவிதை
    தன்னம்பிக்கை

    வாழ்க்கைத் தத்துவம்
    யானைக்குத் தும்பிக்கை
    மனிதனுக்கு தன்னம்பிக்கை!

    இமயம் செல்லலாம்
    இரு கால்களும் இன்றி
    தன்னம்பிக்கை இருந்தால்

    முடியாதது முடியும்,
    நடக்காதது நடக்கும்
    தன்னம்பிக்கை இருந்தால்…

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
    தன்னம்பிக்கையை நிறுத்து
    வெற்றி பெற

    வெற்றியை
    வெறியோடு சாதிக்க
    துணை தன்னம்பிக்கை!

    வயது தடையல்ல!
    எந்த வயதிலும்
    புரியலாம் சாதனை.

    உடல் ஊனம்
    அகற்றிடும்
    தன்னம்பிக்கை.

    உள்ளத்து ஊனம்
    தகர்த்திடும்
    தன்னம்பிக்கை

    குறைந்த காரணத்தால்
    மலிந்தது குற்றங்கள்
    தன்னம்பிக்கை

    உருவம் இல்லாத உறுப்பு,
    உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
    தன்னம்பிக்கை

    இழந்தவன் வீழ்வான்
    இருப்பவன் வெல்வான்
    தன்னம்பிக்கை

    தென்னைக்குத் தெரியாது
    இளநீரின் சுவை
    திறமையறியா இளைஞர்கள்

    மனதில் தீ வேண்டும்,
    திட்டமிட வேண்டும்
    புரியலாம் சாதனை

  1. ஹைக்கூ இரா .இரவி

    உயிரோடு
    கண் தானம்
    காதலர்கள்

    இதழ்களின்
    ஒத்தடம்
    இனிய நினைவுகள்

    தடையின்றி
    மின்சாரப்பரிமாற்றம்
    காதலர்கள்

    அடுத்தவர் உதவியில்
    காவல்துறை வாழ்த்து
    விளம்பர லஞ்சம்

    மது வியாபாரம்
    போதை மறுவாழ்வு
    இரண்டும் அரசிடம்

    இயற்கையை அழித்துவிட்டு
    செயற்கை மரங்கள்
    நகரங்கள்

    ஆய்வின் முடிவு
    நல்லது நடைப்பயிற்சி
    வளர்க்கும் நினைவாற்றல்

    கண் கலங்க வைப்பான்
    உரித்தால் ஒன்றும் இல்லாதவன்
    வெங்காயம்

    காயமில்லாத விபத்து
    நீடித்தால் ஆபத்து
    காதலர்கள் சந்திப்பு

    நீரின் வீழ்ச்சி
    நதியாக நடந்தது
    மனிதன் ?

    இரண்டும் இல்லை இன்று
    போதிமரம்
    புத்தன்

    இரண்டும் ஒன்றுதான்
    கழுதையின் முன் பின் கழிவு
    அரசியல்

    தேனும் பாலும் ஓடும் என்பார்கள்
    வென்றதும்தேனீயாக
    ஓடி விடுவார்கள்

    உன்னதக்கொடை
    உயிர்க்கொடை
    குருதி தானம்

  1. காதல் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அன்றும் இன்றும்
    என்றும் இனிக்கும்
    காதல்

    உணர்ந்தவர்களுக்கு மட்டும்
    புரிந்திடும் உன்னத சுகம்
    காதல்

    கற்காலம் முதல்
    கணிப்பொறி காலம் வரை
    காதல்

    செல்ல வழி உண்டு
    திரும்ப வழி இல்லை
    காதல்

    கண்களில் தொடங்கி
    கண்ணிரில் முடியும்
    சில காதல்

    காவியத்திலும்
    கணினியுகத்திலும்
    இனிக்கும் காதல்

    விழியால் விழுங்குதல்
    இதழால் இணைதல்
    காதல்

    இரசாயண மாற்றம்
    ரசனைக்குரிய மாற்றம்
    காதல்

    விழி ஈர்ப்பு விசை
    எழுப்பும் இனிய இசை
    காதல்

    சிந்தையில் ஒரு மின்னல்
    உருவாக்கும் ஒரு மின்சாரம்
    காதல்

    வானில் மிதக்கலாம்
    உலகை மறக்கலாம்
    காதல்

    பெற்றோரை விட
    பெரிதாகத் தோன்றும்
    காதல்

  1. ஹைக்கூ கவிதை

    பறக்காமல் நில்
    பிடிக்க ஆசை
    பட்டாம்பூச்சி

    பறவை கூண்டில்
    புள்ளிமான் வலையில்
    மழலை பள்ளியில்

    வானத்திலும் வறுமை
    கிழிசல்கள்
    நட்சத்திரங்கள்

    புத்தாடை நெய்தும்
    நெசவாளி வாழ்க்கை
    கந்தல்

    உயரத்தில்
    பஞ்சுமிட்டாய்
    வான் மேகம்

    டயர் வண்டி ஓட்டி
    நாளைய விமானி
    ஆயத்தம்

    பிறரின் உழைப்பில் தன்னை
    பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
    முழு நேர சோம்பேறிகள் முதலாளி

    சந்திரன் அல்லி
    நான் அவள்
    காதல்

    கடல் கரைக்கு
    அனுப்பும் காதல் கடிதம்
    அலைகள்…

    அமாவாசை நாளில்
    நிலவு
    எதிர் வீட்டுச் சன்னலில்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    வழியில் மரணக்குழி
    நாளை
    செய்தியாகி விடுவாய்

    கோடை மழை
    குதூகலப்பயணம்
    திரும்புமா? குழந்தைப்பருவம்

    வானம்.
    கட்சி தாவியது
    அந்திவானம்.

    மழையில் நனைந்தும்
    வண்ணம் மாறவில்லை
    வண்ணத்துப்பூச்சி

    மானம் காக்கும் மலர்
    வானம் பார்க்கும் பூமியில்
    பருத்திப்பூ

    என்னவளே உன்
    முகத்தைக் காட்டு…
    முகம் பார்க்கவேண்டும்

    ஒலியைவிட ஒளிக்கு
    வேகம் அதிகம்
    பார்வை போதும்

    கிருமி தாக்கியது
    உயிரற்ற பொருளையும்
    கணினியில் வைரஸ்

    மரபுக் கவிதை
    எதிர்வீட்டு சன்னலில்
    என்னவள்…

  1. கரைந்தது காகம்
    வந்தனர் விருந்தினர்
    காகத்திற்கு

    அவசியமானது
    புற அழகல்ல
    அக அழகுதான்

    சண்டை போடாத
    நல்ல நண்பன்
    நூல்

    ரசித்து படித்தால்
    ருசிக்கும் புத்தகம்
    வாழ்க்கை

    சக்தி மிக்கது
    அணுகுண்டு அல்ல
    அன்பு

    அழகிய ஓவியிமான்து
    வெள்ளை காகிதம்
    துரிகையால்

    மழை நீர் அருவி ஆகும்
    அருவி நீர் மழை ஆகும்
    ஆதவனால்

    ஒன்று சிலை ஆனது
    ஒன்று அம்மிக்கல் ஆனது
    பாறை கற்கள்

    காட்டியது முகம்
    உடைந்த பின்னும்
    கண்ணாடி

    உருவம் இல்லை
    உணர்வு உண்டு
    தென்றல்

    பாத்ததுண்டா மல்லிகை
    சிவப்பு நிறத்தில்
    வாடா மல்லிகை

    கூர்ந்து பாருங்கள்
    சுறுசுறுப்பை போதிக்கும்
    வண்ணத்துப்பூச்சி

    இல்லாவிட்டாலும் கவலை
    இருந்தாலும் கவலை
    பணம்

    உடல் சுத்தம் நீரால்
    உள்ளத்தின் சுத்தம்
    தியானத்தால்

    மழலைகளிடம்
    மூட நம்பிக்கை விதைப்பு
    மயில் இறகு குட்டி போடும்

    பரவசம் அடைந்தனர்
    பார்க்கும் மனிதர்கள்
    கவலையில் தொட்டி மீன்கள்

    அம்மாவை விட
    மழலைகள் மகிழ்ந்தன
    அம்மாவிற்கு விடுமுறை

    இளமையின் அருமை
    தாமதமாக புரிந்தது
    முதுமையில்

    தோற்றம் மறைவு
    சாமானியர்களுக்குதான்
    சாதனையாளர்களுக்கு இல்லை

  1. கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ

    சங்க இலக்கியத்தை
    சாமானியருக்குச் சமர்பித்தவர்
    கவியரசு

    திருக்குறளின் நுட்பத்தை
    திரைப்பாடலில் வடித்தவர்
    கவியரசு

    நிரந்தரமானவன் அழிவில்லை
    நிதர்சனமான உண்மை
    கவியரசு

    பணத்தை மதிக்காதவர்
    குணத்தை மதித்தவர்
    கவியரசு

    தித்திக்கும் பாடல்களை
    திகட்டாமல் தந்தவர்
    கவியரசு

    நடிகர் திலகம் மக்கள் திலகம்
    சிகரமடைய காரணமானவர்
    கவியரசு

    காலத்தால் அழியாத
    கல்வெட்டுக்கவி புனைந்தவர்
    கவியரசு

    கொடிக்கட்டிப் பறந்த போதும்
    செருக்கு இல்லாத எளியவர்
    கவியரசு

    ரகசியம் இல்லாத
    அதியசக் கவிஞர்
    கவியரசு

    முற்றிலும் பொருத்தமானவர்
    பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
    கவியரசு

    கள்ளம் கபடமற்றவர்
    குழந்தை மனம் படைத்தவர்
    கவியரசு

    கண்ணே கலைமானே
    கடைசியாகப் பாடியவர்
    கவியரசு

  1. பாதித்தவர்கள் கவிஞர் இரா .இரவி
    சபிக்கிறார்கள்
    மின்தடை

    வெட்ட வெளிச்சமானது
    கையாலாகாத தனம்
    மின்தடை

    அறிவித்து பாதி
    அறிவிக்காமல் மீதி
    மின்தடை

    தாமஸ் ஆல்வாய் எடிசனை
    தினமும் நினைவூட்டுகின்றனர்
    மின்தடை

    தடையின்றி
    கொசுக்கள் ரிங்காரம்
    மின்தடை

    வந்தது வெறுப்பு
    வாக்குப் பெற்றவர் மீது
    மின்தடை

    ஆளுங்கட்சியை தோற்கடிக்க
    ஏதிர்க்கட்சி வேண்டாம்
    மின்தடை போதும்

    விவசாயம் பாதிப்பு
    தொழில்கள் பாதிப்பு
    மின்தடை

    வல்லரசாவது இருக்கட்டும்
    நல்லரசாகுங்கள்
    மின்தடை

    வெளிநாடுகளில் இல்லை
    இந்தத் தொல்லை
    மின்தடை

  1. ஹைக்கூ இரா .இரவி

    வீடு மாறியபோது
    உணர்ந்தேன்
    புலம் பெயர்ந்தோர் வலி

    விமர்சனங்களுக்கு
    செவி மடுக்கவில்லை
    தவளை

    இராமாயண மாற்றம்
    கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
    கலங்கினான் இலங்கை வேந்தன்

    மலர்களோடு பேசினேன்
    அவளின் தாமதத்திற்கு
    நன்றி

    பாராட்டினார்கள்
    சிலையையும் சிற்பியையும்
    சோகத்தில் உளி

    ஏங்கியது குழந்தை
    கதை கேட்க
    முதியோர் இல்லத்தில் பாட்டி

    பொருத்தமாக இல்லை
    எயிட்ஸ் விளம்பரத்தில்
    நடிகர்

    கூவலின் இனிமை
    இனப்பெருக்கத்தில் இல்லை
    குயில்

    திருந்தாத மக்கள்( மாக்கள் )
    அமோக வசூல்
    சாமியார் ? தரிசனம்

    முக்காலமும் எக்காலமும்
    அழியாத ஒன்று
    காதல்

    வேகமாக விற்கின்றது
    நோய் பரப்பும் குளிர்பானம்
    வருத்தத்தில் இளநீர்

    உழைப்பாளியின் ரத்தம்
    உறிஞ்சிக் குடிக்கும்
    டாஸ்மாக்

    விதைத்த நிலத்தில்
    பாய்ச்சிய நீரில்
    பாலிதீன் பைகள்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    ஈழத்தில் மரித்த உயிர்கள்
    இன்று பழி தீர்த்தன
    முறிந்தது கூட்டணி

    மூன்று சீட்டு சண்டை
    முச்சந்திலும்
    அரசியலிலும்

    ஆடிய ஆட்டம்
    நொடியில் முடிந்தது
    அரசியல்

    நேற்று இருந்தார்
    இன்று இருப்பதில்லை
    அரசியல்

    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காது என்பார் நடந்துவிடும்
    அரசியல்

    எண்ணங்களால் அன்று
    எண்ணிக்கைகளால் இன்று
    கூட்டணி

    விரைவில் காதல்
    விரைவில் திருமணம்
    விரைவில் மணவிலக்கு

    வேண்டாம் இனி
    கொலைகாரனாக்கியது
    பேருந்து தினம்

    கிடைக்கவில்லை
    எங்கு தேடியும்
    போதிமரம்

    நல்ல கூட்டம்
    பித்தலாட்டப் பயிற்சி
    சோதிடப் பயிற்சி

    புரட்டு அங்கிகாரம்
    பல்கலைக்கழகப்பாடத்தில்
    சோதிடம்

    வேடந்தாங்கல் செல்லாத
    இரும்புப்பறவை
    விமானம்

    நேசித்தால் இனிக்கும்
    யோசித்தால் கசக்கும்
    வாழ்க்கை

    சுறுசுறுப்பின் சின்னம்
    பறக்கச் சலிப்பதில்லை
    தேனீ

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பூகம்பம் வரும் முன்
    அறியும் தவளை
    மனிதன் ?

    சேமிக்கும் எறும்பு
    மழைக் காலத்திற்கு
    மனிதன் ?

    நன்றி மறக்காது
    வாலாட்டும் நாய்
    மனிதன் ?

    பசிக்காமல் உண்பதில்லை
    விலங்குகள்
    மனிதன் ?

    பிறந்ததும் உடன்
    நீந்திடும் மீன்
    மனிதன் ?

    அடைகாக்கும் காகம்
    குயிலின் முட்டையையும்
    மனிதன் ?

    காடுகள் வளரக்
    காரணம் பறவைகள்
    மனிதன் ?

    சீண்டாமல் எவரையும்
    கொத்தாது பாம்பு
    மனிதன் ?

    ஓடிடச் சலிப்பதில்லை
    மான்
    மனிதன் ?

    அசைவம் உண்ணாது
    அசைவம் ஆகின்றது
    ஆடு

    கொள்ளையர்களின்
    கூடாரமானது
    கல்வி நிறுவனங்கள்

  1. நிறங்கள் ஹைக்கூ இரா.இரவி

    அன்பின் நிறம் இன்று
    வம்பின் நிறமானது
    காவி

    பொதுவுடைமை நிறம் இன்று
    தனியுடைமை நிறமானது
    சிவப்பு

    பசுமை வயல்கள்
    பன்னாட்டு நிறுவனகளால்
    கொள்ளை போனது பச்சை

    பகுத்தறிவு வாதியின்
    மூடநம்பிக்கை நிறமானது
    மஞ்சள்

    பெரியார் அணிந்த போது நன்று
    களங்கம் வந்தது இன்று
    கருப்பு

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பாறைக்கு மேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மன்னராட்சியையும் வென்றார்கள்
    அரசியல்வாதிகள்
    குடும்ப அரசியிலில்

    மனிதனால் படைக்கப்பட்டு
    மனிதனையே படுத்துகின்றது
    பணம்

    எங்கு ?முறையிடுவது
    ஆண் காவலர்களால்
    பெண் காவலர்களுக்குத் தொல்லை

    அவள் தந்த
    சங்கு பயன்பட்டது
    இறுதி ஊர்வலத்திற்கு

    சவுக்குமரம்
    பார்க்கையில்
    அவள் நினைவு

    தமிழைக் காத்ததில்
    பெரும்பங்குப் பெற்றன
    பனை மரங்கள்

    தமிழை அழிப்பதில்
    பெரும்பங்குப் பெற்றன
    தொலைக்காட்சிகள்

    மூடநம்பிக்கையால்
    முற்றுப் பெற்றது
    சேதுகால்வாய்த் திட்டம்

    இடித்ததால்
    இடிந்தது மனிதநேயம்
    பாபர் மசூதி

    எட்டாவது அதிசயம்
    ஊழலற்ற
    அரசியல்வாதி

    மூச்சுக்காற்று வெப்பமானது
    ஏழை முதிர்கன்னிக்கு
    தங்கத்தின் விலையால்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    கருவறையில் உயிர்ப்பு
    கல்லறையில் துயில்வு
    இடைப்பட்டதே வாழ்க்கை

    எல்லோரும் சிரிக்க
    அழுது பிறந்தது
    குழந்தை

    எல்லோரும் அழ
    அமைதியாக இருந்தது
    பிணம்

    நடமாடும் நயாகரா
    நடந்துவரும் நந்தவனம்
    என்னவள்

    பெயருக்கு காதலிக்கவில்லை
    பெயரையே காதலித்தேன்
    மலரும் நினைவுகள்

    அதிக வெளிச்சமும்
    ஒருவகையில் இருட்டுத்தான்
    எதுவும் தெரியாது

    கூந்தல் மட்டுமல்ல
    வாயும் நீளம்தான்
    அவளுக்கு

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    ஆட்சியில் ஆள்பவர்களை விட
    மனதை ஆண்டவர்கள்
    மரித்த பின்னும் வாழ்கின்றனர்

    சிற்பி வீட்டு
    படிக்கல்லானாலும்
    சிலையாவதில்லை

    கோடிகள் கொள்ளை
    அடித்தாலும் முடிவு
    தற்கொலை கொலை

    பொம்மை உடைந்த போது
    மனசும் உடைந்தது
    குழந்தைக்கு

    தடியால் அடித்து
    கனிவதில்லை கனி
    குழந்தைகளும்தான்

    அனைவரும் விரும்புவது
    அதிகாரம் அல்ல
    அன்பு

    நிலம் விற்றுப்
    பெற்றப் பணத்தில்
    அப்பாவின் முகம்

    கால்களைத் தொட்டு
    வணங்கிச் சென்றன
    அலைகள்

    சிற்பி இல்லை
    சிற்பம் உண்டு
    நிலையானது எது ?

    போட்டியில் வென்றது
    புற அழகை
    அக அழகு

    நான் கடவுள் என்பவன்
    மனிதன் அல்ல
    விலங்கு

    அவளுக்கும் உண்டு
    மனசு மதித்திடு
    மனைவி

  1. காந்தியடிகள் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அகிம்சையை உணர்த்திய
    அறிவு ஜீவி
    காந்தியடிகள்

    ரகசியம் இல்லாத
    அதிசய மாமனிதர்
    காந்தியடிகள்

    கொண்ட கொள்கையில்
    குன்றென நின்றவர்
    காந்தியடிகள்

    திருக்குறள் வழி
    வாழ்ந்த நல்லவர்
    காந்தியடிகள்

    சுட்ட கொடியவனையும்
    மன்னித்த மாமனிதர்
    காந்தியடிகள்

    உலகம் வியக்கும்
    ஒப்பில்லாத் தலைவர்
    காந்தியடிகள்

    வன்முறை தீர்வன்று
    வையகத்திற்கு உணர்த்தியவர்
    காந்தியடிகள்

    நெஞ்சுரத்தின் சிகரம்
    நேர்மையின் அகரம்
    காந்தியடிகள்

    அரை ஆடை அணிந்த
    பொதுஉடைமைவாதி
    காந்தியடிகள்

    வெள்ளையரின்
    சிம்ம சொப்பனம்
    காந்தியடிகள்

    மனித உரிமைகளின்
    முதல் குரல்
    காந்தியடிகள்

    அமைதியின் சின்னம்
    அடக்கத்தின் திரு உருவம்
    காந்தியடிகள்

    அன்றே உரைத்தவர்
    உலக மயத்தின் தீமையை
    காந்தியடிகள்

    மனிதருள் மாணிக்கம்
    மாமனிதருக்கு இலக்கணம்
    காந்தியடிகள்

  1. ஹைக்கூ

    கவிஞர் இரா. இரவி, மதுரை

    இறந்த பின்னும்
    இருவருக்குப் பயன்படுமே
    விழிக்கொடை

    மண்ணுக்கும் தீக்கும்
    இரையாகும் விழிகளை
    மனிதனுக்கு வழங்குகள்

    இறந்த பின்னும்
    இவ்வுலகை இரசிக்க
    கண் தானம்

    ரசித்துப் பார்த்தால்
    ருசிக்கும் புத்தகம்
    வாழ்க்கை

    குஞ்சுகள் மிதித்து
    கோழிகள் காயம்
    முதியோர் இல்லம்

    வேண்டாம் மூடநம்பிக்கை
    வேண்டும் தன்னம்பிக்கை
    வெற்றி உன் கை

    பிஞ்சு நெஞ்சங்களில்
    நஞ்சு விதைப்பு
    ஊடகங்கள்

  1. அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    காணிக்கைக் கேட்காத
    கண் கண்ட கடவுள்
    அம்மா

    நடமாடும்
    தெய்வம்
    அம்மா

    கருவறை உள்ள
    கடவுள்
    அம்மா

    உயிர் தந்த உயிர்
    உயிர் வளர்த்த உயிர்
    அம்மா

    மனதில் அழியாத ஓவியம்
    மறக்க முடியாத காவியம்
    அம்மா

    ஆடுகளும் மாடுகளும் கூட
    உச்சரிக்கும் உயர்ந்த சொல்
    அம்மா

    வாய் பேசாத ஜீவன்களும்
    பேசிடும் ஒரே சொல்
    அம்மா

    மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
    உருகிடும் மெழுகு
    அம்மா

    உச்சங்களின் உச்சம்
    உலகின் உச்சம்
    அம்மா

    அன்பின் சின்னம்
    அமைதியின் திரு உருவம்
    அம்மா

    திசைக் காட்டும்
    கலங்கரை விளக்கம்
    அம்மா

    கரை சேர்க்கும் தோணி
    உயர்த்திடும் ஏணி
    அம்மா

    நேசம் பாசம் மிக்கவள்
    வேசம் அறியாதவள்
    அம்மா

  1. தேர்தல் முடிவு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    ஈழத்தில் மரித்த உயிர்கள்
    பழித் தீர்த்தன
    தேர்தல் முடிவு

    அதிக ஆட்டம்
    அழிவுக்கு வழிவகுக்கும்
    தேர்தல் முடிவு

    நாட்டை இருட்டாக்கியவர்களை
    நாடு இருட்டாக்கியது
    தேர்தல் முடிவு

    பேராசை
    பெரும் நஷ்டம்
    தேர்தல் முடிவு

    உன்னால் நான் கெட்டேன்
    என்னால் நீ கெட்டாய்
    தேர்தல் முடிவு

    அதீத நம்பிக்கை
    ஆபத்தில் முடியும்
    தேர்தல் முடிவு

    சுனாமியை வென்றது
    எதிர்ப்பு அலை
    தேர்தல் முடிவு

    கோடிகள் இரைத்தும்
    முடிவு சோகம்
    தேர்தல் முடிவு

    குடிமகன்கள் மட்டுமல்ல
    குடி மகன்களும் கைவிட்டனர்
    தேர்தல் முடிவு

    பொது மக்களின்
    மவுனப் புரட்சி
    தேர்தல் முடிவு

    மனிதநேயம் மறந்ததால்
    கிடைத்தத் தண்டனை
    தேர்தல் முடிவு

    இன நலம் பேணாததனால்
    பெற்ற த் தண்டனை
    தேர்தல் முடிவு

    சேரக் கூடாதவர்களுடன்
    சேர்ந்ததால் வந்தது
    தேர்தல் முடிவு

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உடன் நிறுத்தியது
    குழந்தையின் அழுகையை
    பொம்மை

    விசமாக இருந்தாலும்
    அழகுதான்
    அரளிப் பூவும்

    கூறியது
    வரலாறு
    குட்டிச்சுவரு

    உருவம் இன்றியே
    தாலாட்டியது
    தென்றல்

    பிரிவினை விரும்பாதவள்
    இணைந்தே இருக்கும்
    இரு புருவமும்

    பட்டப் பகலில்
    கூவியது சேவல்
    கணினிப் பொறியாலனுக்கு

    இங்கு பெய்த மழை
    அங்கு பெய்யவில்லை
    இயற்கையின் அதிசயம்

    அசிங்கம்தான்
    அனைவருக்கும்
    அந்தரங்கம்

    உருப்படியான
    ஒரே திட்டம்
    நான்கு வழிச் சாலை

    அனுமதிக்கவில்லை
    ஊருக்குள்
    காவல் அய்யனாரை

    வருமானத்தைவிட
    கழிவால் தீங்கு அதிகம்
    ஆலைகள்

    அழகைக் கூட்டியது
    காதோரம் பறந்த
    சிகை

    இடித்த பின்னும்
    பயன்பட்டது வீடு
    நிலை சன்னல்

  1. ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    காவிரி போல
    அரசியலானது
    கல்வி

    இனிமையானது
    உற்றுக்கேளுங்கள்
    ஓடும் நதியின் ஓசை

    பெண்ணைவிட
    ஆணே அழகு
    மயில்

    முடிந்தது சந்திப்பு
    தொடர்ந்தது அதிர்வு
    நினைவலைகள்

    பிரித்தது இலைகளை
    மரத்திலிருந்து
    காற்று

    குளத்தின் உயரம் கூட
    தானும் வளர்ந்தது
    தாமரை

    உண்மையை விட
    போலிகள் பொலிவாக
    செயற்கைச் செடிகள்

    கோலத்தை விட
    கோலமிட்டவள்
    கொள்ளை அழகு

    தோற்றத்தை விட
    குரல் அழகு
    குயில்

    சம்மதித்தனர்
    வரதட்சணைக் குறைக்க
    சொத்து வரும் என்பதால்

    வா வை விட
    ஏ பொருந்தும்
    வேலை வாய்ப்பு அலுவலகம்

    வருட வருமானம் லட்சத்தில் அன்று
    மாத வருமானம் லட்சத்தில் இன்று
    நிம்மதி ?

    பலன் இல்லை
    பெயர் மாற்றுவதால்
    எண்ணம் மாற்று

    பலவீனம்
    பறை சாற்றுதல்
    சோதிடம் பார்த்தல்

    மாதா பிதா
    குரு
    மனைவி

    கோபத்தைக் குறைக்கும்
    இதயத்தை இதமாக்கும்
    இலக்கியம்

    முக்காலமும் வாழ்பவர்
    எக்காலமும் வாழ்பவர்
    திருவள்ளுவர்

    தமிழ் என்ற சொல்லின்றி
    தமிழுக்கு மகுடம் சூட்டியவர்
    திருவள்ளுவர்

    தமிழன் என்ற சொல்லின்றி
    தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவர்
    திருவள்ளுவர்

    உலகின் முதல்மொழி
    மொழிகளின் தாய்மொழி
    தமிழ்

    இலக்கண இலக்கியங்களின்
    இனிய சுரங்கம்
    தமிழ்

    யுகங்கள் கடந்தும்
    இளமை குன்றாதது
    தமிழ்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மணத்தோடு அவள் மனமும்
    பரப்பியது
    மலர்ந்த மலர்

    நானே பெரியவன்
    நினைக்கும்போதே
    மிகச் சிறியவனாவாய்

    சிந்திச் சென்றது
    குப்பையோடு மணத்தையும்
    குப்பைவண்டி

    காசாக்கலாம்
    குப்பையையும்
    பெயர் எடுத்துவிட்டால்

    ஒளிப் பாய்ச்சியது
    ஓடியது இருள்
    விளக்கு

    நீண்ட பிரிவிக்குபின்
    சந்திப்பு
    கூடுதல் இன்பம்

    வெட்கப் பட வேண்டும்
    வல்லரசுகள்
    சோமாலியா சோகம்

  1. ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    கோடிகளும் லட்சங்களும்
    கோயிலின் உள்
    வெளியே பிச்சைக்காரர்கள்

    தமிழர்களின் நெஞ்சில்
    நீரு பூத்த நெருப்பு
    முள்ளிவாய்க்கால் படுகொலைகள்

    அன்று கர்மவீரர் காமராசருக்கு
    இன்று சாராய வியாபாரிகளுக்கு
    கல்வி வள்ளல் பட்டம்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மெய்ப்பித்தனர்
    பேராசை பெருநஷ்டம்
    அரசியல்வாதிகள்

    கோடிகள் கொள்ளை
    கேடியாக இருந்து
    கம்பி எண்ணுகிறான்

    அசைவம் அணியலாமா ?
    சைவம் என்றாயே
    பட்டுச்சேலை

    பட்டுச்சேலையைவிட
    பருத்திச்சேலையே
    அவளுக்கு அழகு

    காந்தியடிகளுக்கு அவமரியாதை
    இன்றும் தொடர்கின்றது
    கிராமங்களில் தீண்டாமை

    கணினி யுகத்தில் களங்கம்
    கிராமங்களில்
    தீண்டாமை

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அரசியல்வாதிகளின்
    கால் பந்தானது
    கல்வி

    வேதனையில்
    தமிழ் அன்னை
    தமிங்கிலம்

    பறவையின் எச்சத்தால்
    வளர்ந்தது உச்சம்
    மரம்

    உழவனுக்கு
    உதவமுடியா மண்புழு
    பாலித்தீன் பைகள்

    மரத்தை வெட்டி
    எரித்த விறகு
    அழவைத்தது

    அவமானச்சின்னங்கள்
    இந்தியாவிற்கு
    முதியோர் இல்லங்கள்

    காண முடியவில்லை
    குருவிக்கூடு
    குருவி

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மூளைச்சலவையால்
    மூளை இழந்தவர்கள்
    தீவிரவாதிகள்

    விலங்குகளை விடக்
    கீழானவர்கள்
    தீவிரவாதிகள்

    உயிர்களை அழிக்கும்
    கொடூரன்களே
    உருவாக்க முடியுமா ?

    மதி இழந்ததால்
    மதச் சார்பற்ற நாட்டில்
    மதக்கொலைகள்

    அறிவிழந்த
    மத வெறியால்
    அப்பாவி மக்கள் பலி

    வாழ்ந்தவர்களை விட
    வீழ்ந்தவர்களே அதிகம்
    மதத்தால்

    மதம் அபீன் என்றார் லெனின்
    மதம் புரட்டு என்றார் பெரியார்
    மெய்யானது இன்று

  1. மரம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    திருமணத்திற்கு வாழை
    மரணத்திற்கு மூங்கில்
    தொடரும் மரத்தின் உறவு

    தொட்டில் முதல்
    சுடுகாடு வரை
    மரம்

    வாழ்ந்தால் நிழல்
    வீழ்ந்தால் விறகு
    மரம்

    வெட்டும் வில்லனுக்கும்
    நிழல் தந்தது
    மரம்

    இயற்கையின் விசித்திரம்
    சிறிய விதை
    பெரிய விருட்சமானது ‘

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    இயற்கை எழுதிய கவிதையில்
    எழுத்துப்பிழைகள்
    திருநங்கைகள்
    உணர்த்தியது
    பசியின் கொடுமை
    நோன்பு
    வக்கிரம் வளர்க்கும்
    வஞ்சனைத் தொடர்கள்
    தொலைக்காட்சிகளில்

    ஆணி அடித்து
    ரணப்படுத்தி விளம்பரம்
    சாலையோர மரங்களில்
    படமே இல்லை
    உதவியது விளம்பரம்
    முன்னாள் நடிகைக்கு
    புகைப் பிடிக்கின்றதோ ?
    மலை
    வான் மேகம்
    கண்ணால்
    காண்பதும் பொய்
    மலையை முத்தமிடும் வானம்
    ஒழித்து விடு
    பொன்னாசை பட்டாசை
    நிரந்தரம் நிம்மதி
    விரயமாவதைப் பயன்படுத்திடு
    விவேகமாக வளரந்திடு
    சூரிய சக்தி

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பாமரர்கள் மட்டுமல்ல
    படித்தவர்களிடமும் பெருகியது
    மூடநம்பிக்கை

    இரண்டும் ஒழிந்தால்
    வல்லரசாகும் இந்தியா
    சாமியார் சாமி

    கணினி யுகத்தில்
    கற்கால நம்பிக்கை
    பிரசன்னம் பார்த்தல்

    முட்டாளை அறிவாளியாக்கும்
    அறிவாளியை மேதையாக்கும்
    சுற்றுலா

    வாழ்க்கை முரண்பாடு
    பணக்காரர்களுக்கு பசி இல்லை
    ஏழைகளுக்கு பசி தொல்லை

    அறிந்திடுங்கள்
    சோம்பேறிகளின் உளறல்
    முடியாது நடக்காது தெரியாது

    சாதிக்கின்றனர்
    கைகள் இல்லாமலும்
    கைகள் உள்ள நீ ?

    வாழ்க்கை இனிக்கும்
    கொடுத்ததை மறந்திடு
    பெற்றதை மறக்காதிரு

    கவனம் தேவை
    சிக்கல் இல்லை
    சிந்தித்துப் பேசினால்

    விரல்களால் தெரிந்தது
    விழிகளில் உலகம்
    இணையம்

    கையில் வெண்ணை
    நெய்யுக்கு அலைகின்றனர்
    கோவில்களில் தங்கம்

  1. எய்ட்ஸ் ஹைக்கூ

    கவிஞர் இரா .இரவி

    பண்பாடுப் பயிற்றுவிக்கும்
    பயமுறுத்தல் நோய்
    எய்ட்ஸ்

    ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
    இருபாலருக்கும்
    வராது எய்ட்ஸ்

    மருந்து இல்லை
    மரணம் உறுதி
    எய்ட்ஸ்

    உயிரை உருக்கும்
    உடலைக் கெடுக்கும்
    எய்ட்ஸ்

    கவனம் தேவை
    குருதி பெறுகையில்
    எய்ட்ஸ்

    எச்சரிக்கை
    ஊசி போடுகையில்
    எய்ட்ஸ்

    வரும் முன் காப்போம்
    உயிர்க் கொல்லிநோய்
    உணர்ந்திடுவோம்

    சபலத்தின் சம்பளம்
    சலனத்தின் தண்டனை
    எய்ட்ஸ்

    சில நிமிட மகிழ்வால்
    பல வருடங்கள் இழப்பு
    எய்ட்ஸ்

    வெறுக்க வேண்டாம்
    நேசிப்போம் நண்பராக
    எய்ட்ஸ் நோயாளிகளை

  1. மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி

    உடலில் குறை இருந்தாலும்
    உள்ளத்தில் குறைவற்றோர்
    மாற்றுத்திறனாளிகள்

    குறையைக் குறையை
    நினைக்காதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    வியக்கும் வண்ணம்
    விந்தைகள் புரிவோர்
    மாற்றுத்திறனாளிகள்

    புறப்பார்வை இல்லாவிட்டாலும்
    அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    உடலுறுப்பை இழந்தபோதும்
    தன்னம்பிக்கை இழக்காதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    வாய்ப்பு வழங்கினால்
    சிகரம் தொடுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சாதனை புரிவதில்
    சரித்திரம் படைப்பவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சளைத்தவர்கள் அல்ல
    நிருபித்துக் காட்டுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    முயற்சித் திருவினையாக்கும்
    மெய்பித்துக் காட்டுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    இல்லை என்ற கவலை
    என்றும் இல்லாதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    விழிகளை இழந்தபோதும்
    விரல்களை விழிகளாக்கியவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    குரலினைக் கேட்டே
    யார் ?என்று உரைப்பவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சக மனிதராக நேசியுங்கள்
    சங்கடப்படும்படிப் பார்க்காதீர்கள்
    மாற்றுத்திறனாளிகளை

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
    பதவி ஊசலாடுகிறது
    சிதம்பர ரகசியம்

    பொதுஉடைமை
    உணர்த்தியது
    செம்பருதி பூ

    தங்கக்கூண்டு வேண்டாம்
    தங்க கூண்டு போதும்
    காதலர்களுக்கு

    இயற்கையின்
    இனிய கொடைகள்
    வண்ணங்கள்

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள்

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை

    ஈடு இணை இல்லை
    இன்பத்தின் எல்லை
    காதல் உணர்வு

    அளவிற்கு அதிகமானால்
    ஆபத்து
    பணமும் காற்றும்

    யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
    சந்திக்கும்போது
    பிரிந்த காதலர்கள்

    அன்று பாசத்தால்
    இன்று பணத்தால்
    உறவுகள்

    புலியைக்கண்ட மானாக
    வேட்பாளரைக் கண்ட
    வாக்காளர்

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கண்களுக்கு விருந்து
    காட்சிப் பெட்டகம்
    இயற்கை

    உழைக்காத மலருக்கு
    வியர்வையா ?
    பனித்துளி

    பூமியிலிருந்து வானம்
    வானத்திலிருந்து பூமி
    தண்ணீர் சுற்றுலா மழை

    உச்சரிப்பைவிட
    உயரந்தது
    மௌனம்

    ஒழியவேண்டும்
    வரங்களுக்கான
    தவம்

    விரல்களின்றித்
    தீண்டியது
    தென்றல்

    உற்றுக்கேளுங்கள்
    பேசும்
    மலர்

    மரமும் கெட்டது
    மனிதனைப் பார்த்து
    கல்லானது

    ஒரு வீட்டில் ஒரு நாளில்
    இத்தனை பாலித்தீன்
    நாட்டில் ?

    யாருக்கு வாக்களிக்க
    தேர்ந்து எடுக்க முடியவில்லை
    குழப்பத்தில் மக்கள்

    ருசிப்பதில் திகட்டலாம்
    ரசிப்பதில் திகட்டுவதில்லை
    அழகு

    கிடைக்காததற்காக ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில்

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம்

    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று
    நாட்டு நடப்பு

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மனமெனும் நீதிமன்றத்தில்
    மன சாட்சியே
    நீதிபதி

    ஆசைகளைக் குறைத்தால்
    காணமல் போகும்
    கவலை

    கதை அளப்பவர்களின்
    கட்டுக் கதை
    வாஸ்து

    ஒன்றில் எழுதியது மூன்றில்
    நான்கில் எழுதியது எட்டில்
    ராசிபலன்கள்

    குறை உடலில்
    நிறை மனதில்
    மாற்றுத்திறனாளிகள்

    உயிர்காப்பான்
    தோழன்
    தலைக்கவசம்

    இன்றைய அமைச்சர்
    நாளைய சிறைவாசி
    அரசியல்

    மேல் பார்த்தால் பொறாமை
    கீழ் பார்த்தால் ஆறுதல்
    வாழ்வியல்

    கொலைகாரனையும்
    கொடூரமானவனையும்
    நேசிப்பவள் தாய்

    ஆபாசம் ஊறுகாய் அன்று
    ஆபாசம் சாப்பாடு இன்று
    திரைப்படங்கள்

    கூடியது அன்று
    கூட்டுகின்றனர் இன்று
    கூட்டம்

    வன்முறை போதிக்கும்
    போதி மரங்கள்
    திரைப்படங்கள்

    ஒரே குட்டையில்
    ஊறிய மட்டையில்
    சின்னத்திரை பெரியத்திரை

    பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
    குறிஞ்சிமலராக எப்போதாவது
    நல்ல படங்கள்

    உயிருள்ளவரை
    ஒட்டியே இருக்கும்
    பிறந்தமண் நேசம்

    தொடக்கம் பீர்
    முடிவு பிராந்தி வாந்தி
    இளைஞர்கள்

    உளவியல்
    மனம் செம்மையானால்
    வாழ்க்கை செம்மையாகும்

    நினைத்தது நடக்கும்
    நல்லது நினைத்தால்
    நல்லது நடக்கும்

  1. புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

    தீக்காயம் பட்ட போதும்

    வருந்தவில்லை

    புல்லாங்குழல்

    காற்றை இசையாக்கும்

    வித்தகக் கருவி

    புல்லாங்குழல்

    மவ்னமாகவே இருக்கும்

    காற்றுத் தீண்டும் வரை

    புல்லாங்குழல்

    உருவில் சிறியது

    உணர்வில் பெரியது

    புல்லாங்குழல்

    காட்டில் விளைந்து

    காதோடு உறவாடும்

    புல்லாங்குழல்

    தீயால் துளைத்தபோதும்

    இசை நல்கும்

    புல்லாங்குழல்

    இதழ் குவித்து விரல் பதித்து

    காற்றுத் தந்ததும் இசைக்கும்

    புல்லாங்குழல்

    அன்று முதல் இன்று வரை

    அற்புத இசை

    புல்லாங்குழல்

    எம்மொழியும் சம்மதம்

    இனிய இசைப் பிறக்கும்

    புல்லாங்குழல்

    கானம் இசைத்து

    கவலைப் போக்கும்

    புல்லாங்குழல்

    பல இசையிலும்

    தனித்துக் கேட்கும்

    புல்லாங்குழல்

    விழிகள் மூடி செவிகள் திறந்தால்

    தேன் பாயும்

    புல்லாங்குழல்

  1. அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி

    பகல் கொள்ளை
    ஆரம்பம்
    அட்சய திரிதி !

    உழைக்காமல் உண்ணும் சோம்பேறி
    சோதிடன் உளறல்
    அட்சய திரிதி !

    பெருகிட உயிரினமா ?
    தங்கம்
    அட்சய திரிதி !

    அடகில் மூழ்கியது
    வாங்கிய தங்கம்
    அட்சய திரிதி !

    மூடநம்பிக்கையின் உச்சம்
    ஏமாருவதே மிச்சம்
    அட்சய திரிதி !

    சோதிடன் நகைவணிகன்
    கூட்டுக் கொள்ளை
    அட்சய திரிதி !

    உலோகம் பெருகுமா ?
    யோசிக்க வேண்டாமா ?
    அட்சய திரிதி !

    தங்கத்தின் ஆசை
    தகர்த்திடுப் பெண்ணே
    அட்சய திரிதி !

    கொலை கொள்ளைப் பெருகிடக்
    காரணம் தங்கம்
    அட்சய திரிதி !

    குடும்பத்தின் நிம்மதி
    கெடுப்பது
    அட்சய திரிதி !

    தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
    காரணம்
    அட்சய திரிதி !

    தரமற்றத் தங்கம்
    தரமென்று விற்கும்
    அட்சய திரிதி !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    நல்ல தீனி
    ஊடகங்களுக்கு
    சாமியார்கள் கூத்து !

    மெய்ப்பித்தனர்
    கடவுள் இல்லை
    சாமியார்கள் !

    இலவசம் மாற்றம்
    சொல் மட்டும்
    விலையில்லா !

    விமானிகள் வேலை நிறுத்தம்
    அமைச்சர் பிடிவாதம்
    பயணிகள் துன்பம் !

    எந்த ஊரும்
    ஈடாகவில்லை
    பிறந்த மண்ணிற்கு !

    தேவையற்றதை நீக்கிட
    கிடைத்தது
    சிலை !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிரை அடிப்பான் கொள்ளை
    உடையின் நிறம் வெள்ளை
    வெண்சுருட்டு ( சிகரெட் )

    தேள் படம் போட்டும்
    கவலையின்றி சுவைக்கின்றான்
    வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் )

    குடி குடி கெடுக்கும்
    படித்து விட்டு குடிக்கின்றான்
    படித்தவன் ?

    தெரிந்தே குடித்தனர்
    புற்று நோய் வரும்
    குளிர்பானம் !

    அழுதாலும்
    ஒளி தந்தது
    மெழுகு !

    வானிலிருந்து குதித்தும்
    காயம் இல்லை
    மழைத் துளி !

    சுமை அல்ல பாதுகாப்பு
    கூடு
    நத்தை !

    அவள் வரும் முன்னே
    வந்தது இசை ஓசை
    கொலுசு !

    சிதைத்தப் போதும்
    தந்தது வாசம்
    சந்தனம் !

    அன்று நல்லவர்களுக்கு மட்டும்
    இன்று கெட்டவர்களுக்கு மட்டும்
    அரசியல் !

    --

  1. நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

    கோடிப் பணத்தை விட
    உயர்ந்தவர்கள்
    நண்பர்கள் !

    சொத்துக்களை விட
    சிறந்தவர்கள்
    நண்பர்கள் !

    துன்பம் என்றால்
    திரண்டு விடுவார்கள்
    நண்பர்கள் !

    துயரத்தின் போது
    தோள் கொடுப்பவர்கள்
    நண்பர்கள் !

    எதுவும் செய்வார்கள்
    எதையும் இழப்பார்கள்
    நண்பர்கள் !

    குடத்து விளக்கான நம்மை
    குன்றத்தில் வைப்பார்கள்
    நண்பர்கள் !

    கூட்டமாகக் கூடி
    கூத்துக் கட்டுவார்கள்
    நண்பர்கள் !

    நேரம் செல்வதை
    மறக்கடிப்பவர்கள்
    நண்பர்கள் !

    புண்பட்ட மனதிற்கு
    மருந்தாவர்கள்
    நண்பர்கள் !

    வாழ்வின் இருள் நீங்க
    வழிகாட்டி ஒளி தருவார்கள்
    நண்பர்கள் !

    தவறான பாதை சென்றால்
    தட்டிக் கேட்பவர்கள்
    நண்பர்கள் !

    எதிரிகளை அடக்குவார்கள்
    பகைவர்களை பயப்படுத்துவார்கள்
    நண்பர்கள் !

    ஏணியாக இருப்பார்கள்
    தோணியாக வருவார்கள்
    நண்பர்கள் !

    காதலுக்கு துணை நிற்பார்கள்
    காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
    நண்பர்கள் !

    உயிருக்கு உயிரானவர்கள்
    என்றும் மறக்கமுடியாதவர்கள்
    நண்பர்கள் !

    --

  1. நிலவு ! ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    காதலிக்கு உவமை
    கண்ணுக்கு இனிமை
    நிலவு !

    பாடாத கவிஞர் இல்லை
    பாடதவர் கவிஞரே இல்லை
    நிலவு !

    கண்ணால் காண்பதும் பொய்
    வளரவுமில்லை தேயவுமில்லை
    நிலவு !

    அல்லியை மட்டுமல்ல
    அனைவரையும் மலர்விக்கும்
    நிலவு !

    சூரியனின் கண்ணாடி
    சுடாத சுடரொளி
    நிலவு !

    வானில் மட்டுமல்ல
    குளத்திலும் மிதக்கும்
    நிலவு !

    தூரத்தில் இருந்தாலும்
    துயரம் போக்கும்
    நிலவு !

    பார்த்தால் பரவசம்
    பார்த்தவர் உள்ளம் தன்வசம்
    நிலவு !

    வானத்து தோசை
    சுவைத்திட ஆசை
    நிலவு !

    பார்வைக்கு வெண்மை
    மனிதர்கள் இல்லை உண்மை
    நிலவு !

    கூடவே நடக்கும்
    நின்றதும் நிற்கும்
    நிலவு !

    எட்டத்தில் இருந்தாலும்
    ஒட்டி இருப்பதாக உணர்வு
    நிலவு !

    காதலர்களின்
    காதல் சாட்சி
    நிலவு !

    புற இருள் மட்டுமன்றி
    அக இருளும் அகற்றும்
    நிலவு !

    என்றும் குழந்தைக்குச் சோறுட்ட
    இன்று ஆய்வுக்கும்
    நிலவு !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மூலதனமின்றி
    அமோக லாபம்
    சாமியார் !

    மூளைச்சலவையால்
    மூளைஆக்கிரமிப்பு
    சாமியார் !

    பொருளுக்கு விற்பனை
    ஆன்மிக அருளுரை
    சாமியார் !

    பாவிகளின் புகலிடம்
    காவிஅணியும்
    சாமியார் !

    உதட்டில் ஆன்மிகம்
    உள்ளத்தில் காமம்
    சாமியார் !

    மோட்சம் தருவதாக
    மோசடி செய்பவர்
    சாமியார் !

    வித்தைக் காட்டி
    கத்தையாகப் பணம் சேர்ப்பு
    சாமியார் !


    நினைவூட்டியும்
    மறந்து விடுகின்றனர்
    பகுத்தறிவை !

    துருப்பிடித்தது
    பயன் படுத்தாததால்
    பகுத்தறிவு !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    சிறந்தது
    கடவுளைத் தொழுவதை விட
    பிறர் கண்ணீர் நிறுத்துவது !

    போட்டிப் போட்டு
    பண்பாடு சிதைப்பு
    ஊடகங்கள் !

    கிராமத்தில் குற்றம்
    நகரத்தில் விருது
    ஆபாச நடனம் !

    இறந்த பின்னும்
    இறக்காமல் வாழ்கின்றது
    செய்த தொண்டு !

    புசிக்க மறந்தேன்
    ரசிக்க ரசிக்க
    இயற்கை அழகு !

    கூடல் அங்கீகாரம்
    ஊர் கூடி
    திருமணம் !

    விண்ணில் அல்ல
    மண்ணில் சொர்க்கம்
    உணர்த்தியது பெண்மை !

    என்று மாறும்
    கோடிகள் பெறும் நடிகர்கள்
    கொடிகள் கட்டும் ரசிகர்கள் !

  1. மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

    எழுதியபடி வாழ்ந்தவன்
    வாழ்ந்தபடி எழுதியவன்
    மகாகவி பாரதி !

    புதுமைக்கும் மரபுக்கும்
    பாலம் அமைத்தவன்
    மகாகவி பாரதி !

    விடுதலை விதையை
    விருட்சமாக வளர்த்தவன்
    மகாகவி பாரதி !

    மற்றவரை மதித்தவன்
    சுயமரியாதை மிக்கவன்
    மகாகவி பாரதி !

    வறுமையிலும் செம்மை
    ஏழ்மையிலும் நேர்மை
    மகாகவி பாரதி !

    பா ரதம் செலுத்திய
    பாக்களின் சாரதி
    மகாகவி பாரதி !

    பெண் விடுதலைக்கு
    போர்முரசு கொட்டியவன்
    மகாகவி பாரதி !
    வாழ்வில் ஆசைப்பட்டவன்
    பேராசைப்படாதவன்
    மகாகவி பாரதி !

    மூடப் பழக்கங்களுக்கு
    மூடு விழா நடத்தியவன்
    மகாகவி பாரதி !

    பகுத்தறிவைப் பயன்படுத்தி
    பாடல்கள் புனைந்தவன்
    மகாகவி பாரதி !

    அழியாத பாடல்கள்
    அகிலத்திற்கு வழங்கியவன்
    மகாகவி பாரதி !

    வெள்ளையர்களை விரட்டிய
    காரணிகளில் ஒன்றானவன்
    மகாகவி பாரதி !

    வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
    பாடல்களின் காலம் பல நூற்றாண்டு
    மகாகவி பாரதி !

    மொழிகள் பல பயின்றவன்
    தமிழே சிறப்பு அறிவித்தவன்
    மகாகவி பாரதி !

  1. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    சூரியனால் எடுத்ததை
    சுத்தமாக்கி பொழிந்தது
    வானம் !

    எங்கு விழுவோம்
    என்பது தெரியாது
    மழைத்துளி !

    நினைவூட்டியது
    சூரியனை
    சூரியகாந்தி !

    கரிசல் காட்டில்
    வெண்மை மலர்ச்சி
    பருத்திப்பூ !

    ரசிக்க
    சுவாசிக்க
    மரம் !

    மொழிக்கு முந்தியது
    ஓசை
    இசை !

    இசைகளின்
    தாய்
    தமிழிசை !

    மெய்பிக்கப்பட்ட உண்மை
    சேய்கள் மற்ற மொழிகள்
    மொழிகளின் தாய் தமிழ் !

    இலக்கண இலக்கியங்களின்
    இனிய சுரங்கம்
    தமிழ் !

    லட்சங்களைத் தாண்டும்
    சொற்களின் மொத்தம்
    தமிழ் !

    தமிழருக்குப் புரியவில்லை
    அன்னியருக்குப் புரிந்தது
    முதல் மொழி தமிழ் !

  1. ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

    மிருகத்தையும்
    மனிதனாக்கியது
    மழலையின் சிரிப்பு !

    களத்துமேட்டில் குவித்த நெல்
    குறையவில்லை அப்படியே
    கிராமங்களில் !

    தேவைப்பட்டது பணம்
    நடத்தினார்
    காதணி விழா !

    ஒய்வுக்குமுன்
    மகள் திருமணம்
    அரசு ஊழியர் !

    விமானம் ஓட்டினாலும்
    வீட்டில் சமையல்
    பெண்கள் !

    சோழியன் குடுமி
    சும்மா ஆடியது
    காற்று !

    வைகுண்டத்திற்கு வழி சொன்னவர்
    மறந்தார்
    தன் வீட்டிற்கு வழி !

    இன்றும் தொடர்கின்றது
    மன்னனின் சந்தேகம்
    கூந்தலின் மணம் இயற்கையா ?

    மரம் இழந்த இலை
    சருகானது
    பெற்றோர் இழந்த குழந்தை ?

    ஒன்றும் ஒன்றும் இரண்டு
    குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று
    பிரிவினை பெரிய வினை !

    வயதைக் குறைக்கும்
    வாழ்நாளை நீடிக்கும்
    இலக்கிய ஈடுபாடு !

    அளவிற்கு மிஞ்சினால்
    அமுதமும் திகட்டும்
    திகட்டாத தமிழ் !


    .

  1. ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

    இனிய வரவேற்பு
    இரடிப்பு மகிழ்ச்சி
    கோடை மழை !

    சக்தி உள்ளவ்ரை
    நகர்ந்துகொண்டே
    நிமிட முள் !

    இன்றும் வாழ்கின்றனர்
    மலை முழுங்கி
    மகாதேவன்கள் !

    நாய் விற்ற காசு
    குரைத்தது
    மனதில் !

    அன்று " நானே கள்வன் "
    மாண்டான் மன்னன்
    இன்று ?

    ஆராய்ச்சி மணி
    அடித்த பசு
    அரண்மனை பிரியாணியில் !

    முரசுக் கட்டிலில்
    தூங்கிய புலவன்
    முதுகை முறித்தனர் !

    மக்களின் மறதி
    அரசியல்வாதிகளுக்கு வசதி
    புதுப்புது ஊழல் !

    நாட்டு நடப்பு
    வறுமையிலும் செம்மை ஏழைகள்
    செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !

    காந்தியோடு முடிந்தது
    அரசியிலில் நேர்மை
    நேர்மையின்மை முதல் தகுதி !

  1. ஹைக்கூ (சென்றியு ) கவிஞர் இரா .இரவி
    நூற்றால்
    நூல் வராத பருத்தி
    செம்பருத்தி !

    பேசிக்கொண்டன
    புரியவில்லை நமக்கு
    எறும்புகள் !

    நினைவூட்டியது
    அவளை
    வானவில் !

    காயம்பட்ட
    சோகம் இசைத்தது
    புல்லாங்குழல் !

    மீனவரின்
    அட்சயப்பாத்திரம்
    கடல் !

    நம்ப முடியவில்லை
    கண்ணால் கண்டும்
    ஆட்டை விழுங்கும் பாம்பு !

    அரசியல்வாதிகளின் பொய்
    நூலாடையை
    பொன்னாடை !

    சுடுகாட்டிலும்
    சிரித்தன
    மலர்கள் !

    கிளைகளை விட
    நெடியது
    வேரின் பயணம் !

    உருவம் மட்டுமல்ல
    சுவையும் பெரிது
    பலா !

    வருத்தத்தில் குழந்தை
    குட்டிபோடவில்லை
    மயிலிறகு !

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    மெய்ப்பித்தன
    அயல் நாட்டுப் பறவைகள் !

    புதிய பொருளாதாரம்
    மலட்டு விதைகள்
    மலடாக்கியது நிலத்தை !

    சிறுவனின்
    வண்டிச்சக்கரம்
    நுங்கு மட்டை !

    பறித்த போதும்
    சிரித்தன
    மலர்கள் !

    காணவில்லை கண்மாய்
    ஊரில் இல்லை ஊரணி
    உலகமயம் !

    வருங்கால சந்ததிகளின்
    வளம் அழிக்கும் பகைவன்
    நெகிழி !

    மரத்தை வெட்ட வெட்ட
    பொய்த்தது
    மழை !

    ஆக்கிரமித்தது
    உலகனேரி
    மதுரை உயர்நீதிமன்றம் !


  1. ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

    தோரண மாவிலை
    தோராயமாக பார்த்தது
    மாங்காய் !

    குளத்தில்
    படகானது
    உதிர்ந்த இலை !

    உழுது உதவியது
    உழவனுக்கு
    மண் புழு !

    மலர் மீது
    வண்ண மலரா ?
    ஓ வண்ணத்துப் பூச்சி !

    ஆயிரம் தேனீக்களின்
    வாழ்க்கையை முடித்து
    ஒரு தீக்குச்சி !

    சேற்றில் நட்ட நாற்று
    கதிர்களாய் விளைந்து சிரித்தது
    உவகையில் உழவன் !

    அறுவடைக்குப் பின்னும்
    தந்து உணவு பசுவுக்கு
    பூமி !

  1. ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

    மழையில் நனைந்தும்
    வண்ணம் போகவில்லை
    வண்ணத்துப்பூச்சி !

    வானவில் பறந்தது
    மண்ணில்
    வண்ணத்துப்பூச்சி !

    அம்புகள் இன்றி
    வானில் தனியாக
    வானவில் !

    ஓட்டுனர் இன்றி
    பயணமானது
    ரயில்பூச்சி !

    கட்டியது வீடு
    சிறு துரும்பில்
    குருவி !

    பறவையின் எச்சம்
    விழுந்த மிச்சம்
    விருட்சம் !

    தடம் மாறவில்லை
    சென்றன வரிசையாக
    எறும்புகள் !

    வரும் முன்னே
    வந்தது வாசம்
    என்னவள் !

    கவனிக்கவில்லை உச்சரிப்பை
    கவனித்தான் உதட்டசவை
    காதலன் !

    உதட்டு முத்தத்தை விட
    வலிமையானது
    நெற்றியில் முத்தம் !

    அழகான சேலை
    குறைந்தது அழகு
    அவள் அணிந்ததும் !

  1. ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

    தந்தது இன்பம்
    உள்ளத்திற்கும் உடலுக்கும்
    கோடை மழை !

    விலங்கிலிருந்து வந்த மனிதன்
    விலங்காகிறான்
    பாலியல் குற்றம் !

    மனிதாபிமானமற்றது
    மனிதனை மனிதன் சுமப்பது
    பல்லக்கில் அர்ச்சகர் !

    முரண்பாடு
    பெருகியது பக்தர்கள் கூட்டம்
    பெருகவில்லை நல்லவர்கள் !

    நண்பன் எதிரி நிரந்தரமன்று
    அரசியல்
    நிரந்தரம் பிதல்லாட்டம் !

    விரும்பினர் ரசிகர்கள்
    ஓட்டம் நான்கு ,ஆறு
    அழகிகளின் ஆட்டம் !

    ரொட்டித்திருடன் சிறையில்
    கோடிகள் திருடன் குளு குளு அறையில்
    மக்களாட்சி !

    விலை இறங்க மகிழ்ச்சி
    குறையும் குற்றங்கள்
    தங்கம் !

    சங்கம் வைத்துத் தமிழ்
    வளர்த்த மதுரையில்
    சங்கம் இல்லா சாதி இல்லை !

    நோக்கம் விபத்துத் தடுக்க
    நடந்தது விபத்து
    வேகத்தடை !

    நம்பினோர்
    கைவிடப் பட்டார்
    யாத்திரை விபத்து !


  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சிற்பி இல்லை
    சிலை உண்டு
    அழியாத கலை !

    வீழ்ந்த பின்னும்
    நடந்தது நதியாக
    நீர் வீழ்ச்சி !

    வளர்ந்துகொண்டே செல்கிறது
    புவி வெப்பமயம்
    கொளுத்தும் கோடை !

    நடந்தது கொலை
    சகஜம் என்றனர்
    அரசியல் !

    விரித்தது தோகை
    மேகம் பார்த்து
    ஆண் மயில் !

    ஆடி அடங்கியவர்
    இறுதி ஊர்வலத்தில்
    ஆட்டம் போட்டனர் !

    இறந்தும் விடவில்லை
    காசு ஆசை
    நெற்றியில் நாணயம் !

    கோடீஷ்வரருக்கு
    இறுதில் எஞ்சியது
    ஒரு ரூபாய் நாணயம் !


    .

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பெயரை மாற்றுங்கள்
    கருணை இன்றி நிராகரிப்பு
    கருணை மனுக்கள் ?

    பசுமை இலை
    வழங்கியது சிகப்பு
    மருதாணி !

    விழுங்கியது
    கோடை விடுமுறையை
    இன்றைய கல்வி !

    கறிக்கோழியாக
    மதிப்பெண்ணுக்காக
    மாணவன் !

    தேர்வில் வெற்றி
    வாழ்வில் தோல்வி
    மாணவர்கள் !

    உணர்த்தியது
    மழையின் வருகை
    இடி மின்னல் !

    மரங்களை வெட்டி
    கட்டிய கட்டிடங்களில்
    செயற்கைச் செடிகள் !

    இன்பம் துன்பம்
    உணர்த்தியது
    பிறை நிலவு !

    வலைக்கட்டிக் காத்திருந்தது
    பூச்சிக்காக
    சிலந்தி !

    புத்தரை வணங்குவது
    புத்தருக்கு அவமானம்
    சிங்களர் !

    விஞ்சியது
    ஜாலியன் வாலாபாக் கொடுமையை
    இலங்கைப் படுகொலைகள் !

    தாமதமாகவே விழித்தது
    தூங்கிய தமிழினம்
    லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !

  1. ஹைக்கூ ! ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !


    ஏழைகளின் மலர்
    பணக்காரர்கள் மலரானது
    மல்லிகை !

    இன்றைய மனிதர்கள்
    சத்து இன்றி
    இல்லை பழைய கஞ்சி !

    தனியாகப் பேசுகின்றனர்
    இல்லத்தரசிகள்
    தொடர்களின் பாதிப்பு !

    சேதாரத்தால்
    சேதரமானார்கள்
    வாடிக்கையாளர்கள் !

    செய் கூலி இல்லை என்று
    சேர்த்தார்கள்
    செம்பொன் !

    தள்ளுபடி என்று
    தள்ளுபடியானது
    நாணயம் !

    நாங்கள்தான் தங்கம்
    எல்லோரும் சொல்கிறார்கள்
    தங்க வியாபாரிகள் !

    வாங்கினால் அதிகம்
    விற்றால் குறைவு
    தங்கம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    சொல்லித் தருகின்றன
    சிரிப்பதற்கு
    மலர்கள் !

    காணாமல் போகும்
    கவலைகள்
    ரசியுங்கள் இயற்கை !

    தண்ணீர் ஊற்றவில்லை
    மரம் வைத்தவன்
    காப்பாற்றியது மழை !

    வீட்டிற்கு வெளியே தொடங்கி
    அலுவலகத்தின் வெளியே முடிகின்றது
    கன்னியின் அலைபேசி உரையாடல் !

    முடிவு செய்கின்றது
    அலைபேசியின் அகலம்
    அந்தஸ்து !

    வளைக்கலாம்
    இரும்பையும்
    தீயிலிட்டால் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    எதைத் தொட்டாலும்
    எங்களுக்கே வாக்கு
    எப்படி எங்கள் சாதனை ?

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    தேன் கூட்டு நிலத்தில்
    மீத்தேன் மிரட்டல்
    நடுவணரசு?

    கோட்டை நகரில்
    ஹைட்ரோ கார்பன்
    அழிவு ஏன் ?

    தாரைவார்த்தனர்
    அயல்நாட்டவருக்கு
    தாமிரபரணி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    நம்பலாமா ?
    சைவம் என்கிறது
    ஓநாய் !

    ----------------------------------


    .கரண்டி சண்டை எதற்கு ?
    கை இருக்கையில்
    உண்பதற்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    வாடிவாசல் அன்று
    நெடுவாசல் இன்று
    நாளை ?
    -------------------------------
    வாடிவாசல்
    நெடுவாசல்
    வாசல் தோறும் வேதனை !
    -------------------------------------------------
    மண் காக்க
    மண்ணின் மைந்தர்கள்
    போராட்டம் !
    ---------------------------------------
    வாடிவாசல் வெற்றி மக்களுக்கே
    நெடுவாசலும் வெற்றி மக்களுக்கே
    உடன் அறிவித்தால் மதிப்பு மிஞ்சும் !
    ------------------------------------

    புதுக்கோட்டையில் பூத்தது
    புதிய போராட்டம் இன்று
    வெற்றி நாளை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    சேற்றில் மிதந்தும்
    அழுக்காகவில்லை
    நிலவு !

    களவும் கற்று மற அன்று
    களவும் அற்று
    மற !

    சேற்றில் மலர்ந்தும்
    ஒட்டவில்லை சேறு
    செந்தாமரை !

    பணம் சேர்ப்பு
    இல்லாத பேய்
    இருப்பதாகக் காட்டி !
    .
    அழிந்தது
    நேர்மை
    அரசியல் !

    முடிக்கலாம் அதிகவேலை
    அதிகாலை எழுந்தால்
    சாதிக்கலாம் !

    அன்பே சிவம்
    சிவன் கரத்தில்
    சூலாயுதம் !

    காண்பதும் பொய்
    சுற்றுவதாகத் தோன்றும்
    சுற்றாத சூரியன் !

  1. காதல் ! கவிஞர் இரா .இரவி !
    .
    காதலித்த நாள் முதலாய்
    உயிருள்ளவரை நினைப்பதே
    காதல் !

    எண்ணம் முழுவதும்
    இனிதே நிரம்பி இருப்பதே
    காதல் !

    அன்பு செலுத்துவதில்
    இருவருக்கும் போட்டி நடப்பதே
    காதல் !

    ஒருவரை ஒருவர் யாரிடமும்
    விட்டுக் கொடுக்காததே
    காதல் !

    இன்பம் துன்பம் இரண்டிலும்
    இணைந்தே இருப்பதே
    காதல் !

    பிரித்தாளும் சூழ்ச்சிக்கு
    பலியாகாமல் இருப்பதே
    காதல் !

    ஒருவருக்கு ஒருவர்
    அசைக்கமுடியாத நம்பிக்கையே
    காதல் !

    புற அழகால் வருவதல்ல
    அக அழகால் வருவதே
    காதல் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    படைத்தனர் மாணவர்கள்
    புதிய வரலாறு
    ஜல்லிக்கட்டு தடை தகர்த்து !

    தடை அதை உடை
    உடைந்தது தடை
    காளைகளின் வெற்றி !

    பொன் எழுத்துக்களால்
    பொறிக்க வேண்டியது
    மாணவர்கள் வெற்றி !

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    வாடிவாசல் வென்றதடா !

    வேண்டாம்
    கஞ்சத்தனம்
    பாராட்டில் !

    மகானாக வேண்டாம்
    மனிதனால் போதும்
    மனசாட்சிப்படி நட !

    முடியும் என்று
    முதலில் நினை
    முடியும் !

    முடியுமா என்ற
    சந்தேகம்
    தோல்வியில் முடியும் !

    கவலையை மற
    கவலையால் தீராது
    கவலை !

    நாளை என்று
    நாளைக் கடத்தாதே
    இன்றே முடி !

    செய்ததை மற
    பெற்றதை மறக்காதே
    உதவி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    உலகமே உற்று நோக்கியது
    தமிழர்களின் போராட்டம்
    கனவு நனவாகியது !


    தலைவன் இல்லாத
    போராட்டம் அல்ல
    தமிழே தலைவன் !


    சென்னையின் சாலைகள் யாவும்
    மெரீனாவை நோக்கி
    மிரண்டது இந்தியா !


    பொறுத்தது போதும்
    பொங்கினான் தமிழன்
    புரிந்தது இந்தியாவிற்கு !


    ஐம்பது பேரில் தொடங்கி
    லட்சத்தைத் தாண்டியது
    லட்சியம் வென்றது !

    சென்னை மட்டுமல்ல
    தமிழகமே பொங்கியது
    புரிந்தது ஆற்றல் !

    உலகத்தமிழர் யாவரும்
    உணர்வை உணர்த்தினர்
    தமிழன்டா !

    வெற்றி ! வெற்றி !
    மாணவர்கள் போராட்டம்
    வெற்றி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பொங்கலுக்குள் அனுமதித்து இருந்தால்
    பொங்கி இருக்க மாட்டார்கள்
    மாணவர்கள் !

    உச்ச நீதிமன்றம்
    உச்சம் இழந்தது
    அவமானமே மிச்சம் !

    மக்கள் எழுச்சியால்
    மண்டியிட்டது
    பீட்டா !

    அயல்நாட்டுக் குளிர்பானம்
    விரட்ட உதவிய
    பீட்டாவிற்கு நன்றி !

    இப்படை போதுமா
    இன்னும் கொஞ்சம் வேணுமா
    மிரட்சியில் அரசியல்வாதிகள் !

    ஏறு தழுவுதல் என்பதை
    மிருகவதை என்போர்
    மூடர் கூட்டம் !

    ஆட்டம் கண்டது
    ஓட்டம் எடுத்து
    பீட்டா !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



    நடிப்பில் வென்றனர்
    நடிகர் திலகத்தை
    அரசியல்வாதிகள் !

    வந்தார்
    நேர்மையான அரசியல்வாதி
    கண்டது கனவு !

    பேசினார் பொதுநலம்
    அருகில்
    தேர்தல் !

    மனிதனாகச் சாதிக்க
    விலக்கு
    மது !

    கேளிக்கை அல்ல
    கேடிகளுக்கானது
    மது !

    மகிழ்ச்சி என்று தொடங்கி
    துன்பத்தில் முடியும்
    மது !

    வன்முறை வளர்க்கும்
    நட்பை அழிக்கும்
    மது !

    வாரம் ஒரு நாள் தொடக்கம்
    தினமும் என்றாகும்
    மது !

    ஓசியில் தொடங்கி
    திருட்டில் முடியும்
    மது !

    வெறும் வாசகமல்ல
    முற்றிலும் உண்மை
    குடி குடி கெடுக்கும் !

    போராடித் தோற்றன
    மரங்கள்
    புயல் !

    வளமான
    மனிதாபிமானம்
    ஏழை வீட்டில் !

    உணரவில்லை
    தன் பலம்
    பிச்சையெடுக்கும் யானை !

    மரம் விட்டு உதிர்ந்த
    கவலையால்
    இலை சருகானது !

    பார்வையாளர் கூடிட
    போய் பேசுகின்றன
    தொலைக்காட்சிகள் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அன்று தொண்டு
    இன்று துட்டு
    அரசியல் !

    மாறின கால்கள்
    மாறவில்லை விழுபவர்கள்
    அரசியல் !

    காற்றில் பறந்தன
    சுயமரியாதைக் கொள்கை
    அரசியல் !

    கொள்கையானது
    குறுக்குவழி கொள்ளையடிப்பு
    அரசியல் !

    அழிந்து நாளானது
    நம்பிக்கை நாணயம்
    அரசியல் !

    அன்று மக்களுக்காக
    இன்று தன் மக்களுக்காக
    அரசியல் !

    வழக்கொழிந்து விட்டன
    நீதி நேர்மை
    அரசியல் !

    நம்பிக்கைத் துரோகம்
    நாளும் அரங்கேற்றம்
    அரசியல் !

    நாற்றம்
    தோற்றது கூவம்
    அரசியல் !

    முழுவதும் களையானால்
    களையெடுப்பது எங்ஙனம்
    அரசியல் !

    ஏணியில் உயர்ந்து
    பாம்பு கடித்து கீழே
    பரமபத அரசியல் !
    .

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    கழிவறை சுத்தம் செய்வதை
    குடித்து மகிழும் அவலம்
    குளிர்பானம் !

    தண்ணீருக்குப் பதிலாக
    அருந்திடும் கொடுமை
    குளிர்பானம் !

    நடிகர் விளம்பரத்தில் ஒரு முறை
    நாம் பலமுறை குடிக்கிறோம்
    குளிர்பானம் !

    இரண்டு நாள் போட்டால்
    பல்லையும் கரைக்கும்
    குளிர்பானம் !

    அயல்நாட்டில் தடை
    நம்நாட்டில் தாராளம்
    குளிர்பானம் !

    விலை கொடுத்து வாங்குகிறோம்
    உடல் நலம் கெடுக்கும்
    குளிர்பானம் !

    வழங்காதீர் விழாக்களில்
    விருந்தினருக்குத் துன்பம்
    குளிர்பானம் !

    நவீனம் என்ற பெயரில்
    நலம் கெடுக்கும்
    குளிர்பானம் !

    இயற்கை நன்மை
    செயற்கை தீமை
    குளிர்பானம் !

    பழரசம் என்பர்
    பழரசம் அன்று
    குளிர்பானம் !

    திருந்துவது என்றோ ?
    வாங்கவில்லை நல்ல இளநீர்
    வாங்குகின்றோம் கொடிய குளிர்பானம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    தியான முயற்சியில்
    வந்தது
    தூக்கம் !

    கவனி மூச்சை
    நீளும்
    மூச்சு !

    சாய்ந்தன
    மரங்கள்
    வெப்பமயம் !

    வேகம்
    விவேகமென்று
    உணர்த்தியது புயல் !

    அழிக்க மனமில்லை
    அலைபேசி எண்
    இறந்த நண்பன் !

    நேற்று மழை
    இன்று புயல்
    நாளை ?

    வழிவகுக்கும்
    அழிவிற்கு
    இயற்கையின் சீற்றம் !


    வீழ்ந்தன மரங்கள்
    விழவில்லை நாணல்
    இயற்கையின் விந்தை !

    முதலில் வரம்
    பிறகு தவம்
    நம்பாத பக்தன் !

    போனது பெயர்
    பிரபல மருத்துவமனை
    பிரபலம் மருத்துவத்தால் !

    நாடியை வைத்து அன்று
    சொத்தை வைத்து இன்று
    மருத்துவம் !

    நம்பிக்கையில்லாத தீர்மானம்
    அறத்தின் மீது
    அநீதியின் வெற்றி !

    இறுதியில் வெல்லும் சரி
    இடையில் என் தோற்கிறது
    தர்மம் !

    கெட்டவர்கள் பெருகி
    நல்லவர்கள் குறைவது
    நாட்டு நடப்பானது !

    படிக்காமலே
    பாடியது
    சிள் வண்டு !

    இருப்பை உணர்த்தி
    இரையானது பாம்புக்கு
    தவளை !
    .

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



    சீர் இழந்தது
    சிங்காரச் சென்னை
    வார்தா வந்ததால்

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பார்க்க அழகு
    பயன் இல்லை
    போலிப்பனைமரம் !

    வளைக்கலாம்
    இரும்பையும்
    நெருப்பிலிட்டால் !

    தேவைப்படுகிறது
    கணக்குப்பொறி
    படித்தவர்களுக்கு !

    வஞ்சகம்
    வருங்கால வாரிசுகளுக்கு
    நெகிழி !

    வைத்தவர் இல்லை
    வழங்கியது பலன்
    மரம் !

    கணக்கில் அடங்காது
    வண்ணங்களின் எண்ணிக்கை
    மலர்கள் !

    உழைத்தவர்கள் கவலையில்
    உழைக்காதவர்கள் மகிழ்வில்
    மாறுவது என்றோ ?

  1. இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி !


    அதிகம் படைக்கவில்லை என்றாலும்
    அழுத்தமாகப் படைத்தவன்
    இன்குலாப் !

    யார் கவிஞன் என்றால்
    நீயே கவிஞன் என்றானவன்
    இன்குலாப் !

    பாரதி போலவே
    எழுதியது போல வாழ்ந்தவன்
    இன்குலாப் !

    அஞ்சாமையின் குறியீடு நீ
    சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ
    இன்குலாப் !

    ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில்
    என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள்
    இன்குலாப் !

    மறைவு உன் உடலுக்குத்தான்
    மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு
    இன்குலாப் !

    ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக்
    கவிதைகள் யாத்தவன்
    இன்குலாப் !

    ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும்
    அதனை கவிதை வடிவில் எதிர்த்தவன்
    இன்குலாப் !


    யாருக்கும் துதி பாடாதவன் நீ
    அதனால் உன் துதி பாடுகின்றேன்
    இன்குலாப் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    படிக்காமலே ஆசிரியரானது
    குழந்தை
    விளையாட்டில் !

    தட்டிக் கொடுத்து
    தூங்க வைத்தது குழந்தை
    பொம்மையை !

    குழந்தை இல்லாத வீடு
    நிறைந்து இருந்தன
    பொம்மைகள் !

    வருந்தினேன்
    பார்த்தபோது
    பல்லியின் வாயில் பூச்சி !

    நிறுத்தியது கத்துவதை
    பாம்பின் வாயில்
    தவளை !

    முடிவுக்கு வந்தது
    மீன் வளர்க்கும் ஆசை
    ஒவ்வொன்றாய் இறந்தன !

    குளத்தில் உள்ள நிலவை
    கடித்துத் தோற்றன
    மீன்கள் !

    சின்ன மீனை உண்ட பெரிய மீனை
    உண்டான்
    மனிதன் !

    புழு வைத்து மீன் பிடித்து
    உண்ட மனிதன் மாண்டதும்
    உண்டது புழு !

    சிலந்தி வலை
    விழுந்தது பூச்சி
    மகிழ்வில் சிலந்தி !

    மனமில்லை
    மழை ரசிக்க
    பசி !

    கறுப்புப்பணம் ஒழிப்பதாகச் சொல்லி
    ஒழித்தனர் வெள்ளைமன
    மனிதர்களின் வாழ்வை !

    அன்பே சிவம்
    கையில்
    சூலாயுதம் !

    போய் சொன்ன வாயுக்கு
    போசனம் கிடைத்தது
    சோதிடர் !

    எல்லை தாண்டி
    கண்டிப்பதாகக் கடிந்தனர்
    இளையோர் !

    நனையவில்லை மழையில்
    மேகத்துக்கு மேல் !
    பறந்த பறவை

    நகரும் மரங்கள்
    உண்மையில்லை
    தொடர்வண்டிப் பயணம் !

    சிறிதாகவே தெரியும்
    காணும் யாவும்
    உச்சத்தில் இருந்தால் !

    சுருக்கச் சுருக்க
    பொருள் விரியும்
    ஹைக்கூ !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    கவலை இல்லை
    பாராட்டைப் பற்றி
    குயில் !

    வருத்தமில்லை
    கருமை பற்றி
    காகம் !

    கர்வம் இல்லை
    வெண்மை பற்றி
    புறா !

    விடிந்து வெகுநேரமாகி
    கூவியது
    சோம்பேறி சேவல் !

    வானில் வட்டமிடும்
    பருந்து
    பயத்தில் குஞ்சுகள் !

    வெட்ட வெட்ட
    உயர்ந்தது
    தென்னை !

    அறிந்ததில்லை
    இளநீரின் சுவை
    தென்னை !

    இரண்டையும் காணலாம்
    என்றாவது ஒருநாள்
    சூரியன் சந்திரன் !

    மீண்டும் துளிர்த்தது
    பட்டமரம்
    மழை !

    வகைகள் எத்தனை
    வரையறுக்க முடியாது
    மலர்கள் !

    ரொட்டி
    யார் போட்டாலும்
    வாலாட்டும் நாய் !

    குறைக்கும் நாய்
    கடிக்காது பொய்
    கடிக்கும் !

    திரைகடல் ஓடி
    திரவியம் தேடினால்
    சுடுகிறான் சிங்களன் !

    வேற்றுமையில் ஒற்றுமை
    இந்தியா மட்டுமல்ல
    இணைகளும்தான் !

    உள்ளே அனுமதி இல்லை
    மதிப்பு உண்டு
    காலணி !

    வேண்டாம்
    சூடம்
    சுற்றுச்சூழல் மாசு !

    பெயருக்கு இல்லாமல்
    காரணப் பெயராகட்டும்
    அறங்காவலர் !

    அறம் செய்ய
    விரும்பினால் போதாது
    செய்க அறம் !

    சொல் செயல் சிந்தனை
    அறம் இருந்தால்
    சிறக்கும் வாழ்க்கை !

    குப்பை கூட
    நிலத்திற்கு உரமாகும்
    மனிதன் ?

    மக்காத மக்கும் குப்பை
    வேறுபாடு தெரியாத
    மக்காக மக்கள் !

    நோயின்றி
    நலமாக வாழ
    நடைப்பயிற்சி !
    .
    உலகில் யாருமில்லை
    எல்லாம் பொருந்திய
    இணை !

    சாதியில் இல்லை
    எண்ணத்தில் உள்ளது
    உயர்வு தாழ்வு !

    விட்டுக்கொடுங்கள்
    ஒழியும் வன்முறை
    நிலவும் அமைதி !

    உடைத்தே போடுகின்றனர்
    நடுத்தர மக்கள்
    முந்திரி !

    கடைசித் திருமணம்
    உணர்த்தியது
    கடலைமிட்டாய் !

    உடைந்து இருந்தால் கோபம்
    உடைத்து உண்ணும்
    அப்பளம் !

    பெண்ணிற்கு மட்டும்
    கற்பிக்கப்பட்ட கற்பனை
    கற்பு !

  1. ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !

    வசப்படுவதில்லை
    வாசிக்கும் அனைவருக்கும்
    புல்லாங்குழல் !

    வைத்துக்கொள்வதில்லை
    வந்த காற்றை
    புல்லாங்குழல் !

    வரைந்திட்ட
    ஓவியர் யாரோ
    மயில் தோகை !


    தோற்றுப்போனேன்
    பிடிக்க முயன்று
    வண்ணத்துப்பூச்சி !


    முறைத்துப்பார்த்தான்
    சோம்பேறி
    வண்ணத்துப்பூச்சி !

    ஞானப்பால் வேண்டாம்
    பசும்பால் போதும்
    பசித்து அழும் குழந்தை !


    மூலமொழி
    உலகமொழி ஆங்கிலத்திற்கும்
    தமிழ் மொழி !

    வசந்தத்திற்கு மகிழவுமில்லை
    இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை
    மரம் !

    மகிழ்ச்சி என்று தொடங்கி
    துன்பத்தில் முடிந்தது
    மது !

    மனிதர்களில் மட்டுமல்ல
    புறாக்களிலும் உண்டு
    கருப்பு வெள்ளை !

    வழிவகுத்தன
    விபத்திற்கு
    ஆபாச சுவரொட்டிகள் !

    உண்டால் பலம்
    கிளைகள் பலமில்லை
    முருங்கை !

    பெருகியது
    முதிர்கன்னிகள் மட்டுமல்ல
    முதிர் காளைகளும்தான் !
    .

  1. பெண்ணியம் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    எழுத்திலும் அநீதி
    ஆண் நெடில் தொடக்கம்
    பெண் குறில் தொடக்கம் !

    கணவனை இழந்தவள்
    விதவை சரி
    மனைவியை இழந்தவன் ?

    மணமான பெண்ணிற்கு
    தாலி அடையாளம் சரி
    மணமான ஆணிற்கு ?
    .
    ஆட்டிற்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
    மாட்டிற்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
    பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    படித்தவர்களும்
    ரேகை பதித்தனர்
    அலுவலகம் நுழைகையில் !

    ஓரடி ஆத்திசூடி
    ஈரடி திருக்குறள்
    மூவடி ஹைக்கூ !

    பெயரிலேயே
    திரு உடையது
    திருக்குறள் !

    பெயரிலேயே
    திரு உடையவர்
    திருவள்ளுவர் !

    மல்லிகைக்கு மட்டுமல்ல
    மாசற்ற அன்பிற்கும்
    மதுரை !

    மனிதர்களை மட்டுமல்ல
    கணினிகளை தாக்குகின்றன
    கிருமிகள் !

    அமைதி காக்கவும்
    கத்திச் சொன்னார்
    ஆசிரியர் !

    வழியனுப்ப வந்தவர்
    உடன் பயணித்தார்
    புறப்பட்டது தொடரி !

    இடுகாடு வேண்டாம்
    சுடுகாடு போதும்
    இடநெருக்கடி

    இறந்த பின்னும்
    வாழும் விழிகள்
    விழி தானம் !

    வேண்டாம் ஏளனம்
    மானம் காத்தது
    மாற்றுத்திறனாளி !

    திருந்தாத மக்கள்
    தெரிந்தே ஏமாறுகின்றனர்
    தனியார் நிதிநிறுவனம்

    மனிதனுக்கு
    அழகு
    மனிதநேயம் !

    அடுக்குமாடியில்
    நெருக்கமாக வீடுகள்
    தூரமாக மனசுகள் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    ஒன்று மணமாலை
    ஒன்று மலர்வளையம்
    ஒரே செடி பூக்கள் !

    வானத்தின் நிறமென
    வஞ்சியின் மனம்
    மாறியபடி !

    ஒவ்வொரு நேரமும்
    ஒவ்வொரு வண்ணம்
    ரசியுங்கள் வானம் !

    வகுப்பு வேறுபாட்டை
    உணர்த்துகின்றன தொடரியின்
    கழிவறைகள் !

    மழை நின்றபின்
    குடை விரித்து
    காளான் !

    பயன்படவில்லை
    மழைக்குக் குடை
    காளான் !

    ஒன்று மணமாலை
    ஒன்று மலர்வளையம்
    ஒரே செடி பூக்கள் !

    தள்ளிப் போன
    தேர்தலால் தள்ளிப் போனது
    தோல்வி பயம் !

    வருத்தத்தில்
    வாக்காளன்
    தள்ளிப் போன தேர்தல் !

    உலக வங்கியில் இந்தியா
    உள்ளூர் வங்கியில் குடிமகன்
    கடன் !

    ஆசைப்படுகின்றது
    போருக்கு
    காந்தி தேசம் !

    நினைவிற்கு வந்தது
    மதில் மேல் பூனை
    நடுவணரசு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    காந்தியடிகளின் குரங்கு போதனையை
    மாற்றி புரிந்துக் கொண்டனர்
    சமுதாய சீரழிவு !

    கருகி மடிந்தது
    தண்ணீர் ஊற்றவில்லை
    மரம் நட்டவர்கள் !

    தொட்டிச்செடிக்கும்
    தேவை
    மண் !

    மண்ணில்
    மகசூல் செழிக்க
    மழைநீர் சேமிப்பு !

    முன்னேற்ற விதி
    சாதியை மற
    சாதிக்க நினை !

    வளர்ச்சிக்கான வழி
    மதத்தை மற
    மனிதனை நினை !

    உயர்வுக்கு வழி
    கெட்டவை மற
    நல்லவை நினை !

    சிந்தனை சொல் செயல்
    மூன்றிலும் நல்லவை இருந்தால்
    இறந்தபின்னும் வாழ்வாய் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பெயர் மாற்றம்
    சட்டசபை
    சத்த சபை !

    பிரிக்கமுடியாதது
    அரசியலும்
    ஊழலும் !

    சேர்ந்தே இருப்பது
    பொய்யும்
    அரசியலும் !

    வெண்ணை எடுப்பார்கள்
    கடைந்த மோரிலும்
    அரசியல்வாதிகள் !

    கயிறு திரிப்பார்கள்
    கடல் மணலையும்
    அரசியல்வாதிகள் !

    அம்பு விடுவார்கள்
    வானவில்லிலும்
    அரசியல்வாதிகள் !

    குழந்தை பாசம்
    நடிகை ஆபாசம்
    அரசியல்வாதி வேசம் !

    வாடகைக்கு
    அம்மாவும்
    வாடகைத்தாய் !

    காட்டும்
    உள்ளதை உள்ளபடி
    கண்ணாடி !

    பட்டால் பகல்
    படாவிட்டால் இரவு
    சூரியன் !

    நோய்களை உருவாக்கும்
    காரணி
    மனக்கவலை !

    ஓடாமல் விளையாடியது
    இன்றைய பாப்பா
    கணினியில் !

  1. கோடி வாழும் பறவைகள்
    மோதி வீழும் மனிதர்கள்
    உயர்திணை எது ?
    கவிஞர் இரா .இரவி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    கற்பனைக்குதிரை
    கண்டபடி ஓடியது
    குருப்பெயர்ச்சி பலன் !

    கற்பனையின் உச்சம்
    ஏமாற்றமே மிச்சம்
    இராசிபலன் !

    பத்துப்பொருத்தம் பார்த்து
    முடித்த திருமணம்
    முடிந்தது விவாகரத்தில் !

    ஒன்றும் ஒன்றும்
    ஒன்று
    காதல் கணக்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சன்னலோர இருக்கை
    இனிதாக்கியது பயணத்தை
    இயற்கை ரசிப்பு !

    பயணிக்கிறது
    வகுப்புகளுடன்
    தொடர்வண்டி !

    எல்லோரும் பார்க்க
    குளிக்கின்றன மலர்கள்
    மழை !


    எறிந்தான் கல்
    குளத்து நீரில்
    உடைந்தது நிலா !

    காற்றால் ஓடி
    தருகின்றது மின்சாரம்
    காற்றாடி !

    எடிசன் பிறக்காவிடில்
    இன்றும் இருட்டுதான்
    உலகம் !

    காண்பதும் பொய்
    மலையை முத்தமிடும்
    மேகம் !

    ஏர் உழுத
    வலி தங்கியதால்
    நல்ல விளைச்சல் !

    குப்பைக் கூட
    மக்கினால் உரம்
    மனிதன் ?


    அழகாக இருந்தும்
    பயன்பாடு இல்லை
    விசிறி வாழை !

    பாறைகள் தகர்ப்பு
    மணல்கள் கொள்ளை
    மற்றுமொரு சுனாமி !

    ஒவ்வொன்றும் ஒருவிதம்
    இலைகள் பலவிதம்
    இயற்கையின் அற்புதம் !

    கிராமத்து முரண்
    நிறமோ கருப்பு
    பெயரோ வெள்ளாடு !

    அழிவிற்கான
    முதற்படி
    ஆணவம் !

    சாதனைக்கு
    முதற்படி
    அடக்கம் !

    சினத்தின் போது
    பேச்சை விட சிறந்தது
    மவுனம் !

    கட்டுப்படுத்தாவிடின்
    விளைவுகள் விபரீதம்
    சினம் !

    படித்தப் பெண்களும்
    விதிவிலக்கல்ல
    பொன் ஆசை !

    யாரும் வளர்க்காமலே
    வளர்ந்து விடுகின்றன
    எருக்கம் செடிகள் !

    மன்னர் ஆட்சி மண்சண்டை
    தொடர்கின்றன
    மக்கள் ஆட்சியிலும் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    மனிதர்கள் பறிக்காவிடினும்
    காற்று பறித்துவிடுகிறது
    மலர்கள் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    செலவில்லாதது
    குழந்தைகள் வண்டி
    நுங்கு வண்டி !

    யானை போன்று
    ஆயிரம் போன்
    பனைமரம் !

    பூ காய் இலை
    முழுவதும் பயன்படும்
    முருங்கைமரம் !

    நோய் நீக்கும்
    நலம் தரும்
    வேப்பமரம் !

    ஆயிரம் காலத்து
    மரம்
    தேக்கு !

    சண்டைமாநிலங்களாகின
    அண்டை மாநிலங்கள்
    தமிழகத்திற்கு அநீதி !

    ஆடம்பரக் கல்வியானது
    ஆரம்பக்கல்வி
    தனியார் பள்ளிகள் !

    ஏளனமாய் நினைத்தவர்கள்
    ஏமாந்துபோனார்கள்
    அரசுப்பள்ளிகளின் சாதனை

    நனவாகாது
    உழைப்பற்ற
    வெறும் கனவு !

    வந்துசேரவில்லை
    பயன்பட்டது அரசியலுக்கு
    கருப்புப்பணம்!

    உலகில்
    மிகவும் மலிவானது
    தமிழன் உயிர் !

    அறநெறி மீது
    கற்பிக்கின்றன அவநம்பிக்கை
    நாட்டு நடப்பு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அம்பு இல்லா வில்லுக்கும்
    மதிப்புண்டு
    வானவில் !

    பிரிய மனமில்லை
    பிரித்தது காற்று
    மரத்திலிருந்து இலை !

    நதி நடந்ததால்
    பளபளப்பானது
    கூழாங்கல் !

    சுமை அல்ல
    உயர உதவும்
    சிறகு !

    பேசும் பேச்சை விட
    வலிமையானது
    மவுனம் !

    பஞ்ச பூதங்களை
    கொள்ளையடிக்கும் பூதம்
    மனிதன் !

    எடுத்தால் திருட்டு
    நாமாக வழங்கினால்
    வரதட்சணை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அறிந்தது உலகம்
    அறியவில்லை தமிழர்
    திருக்குறள் அருமை !

    ஒரே வரியில்
    ஒப்பற்ற அறம்
    ஆத்திசூடி !

    நான்கே வரிகளில்
    நல்லபல கருத்துக்கள்
    நாலடியார் !

    ஒழுக்கம் உணர்த்தும்
    ஒப்பற்ற வரலாறு
    சிலப்பதிகாரம் !

    தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி
    பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று
    பிதற்றுகின்றனர் கோமாளிகள் !

    தண்டனை என்று
    அறிவிப்போம்
    தமிங்கிலம் பேசினால் !

    நான் இங்கு இருக்கையில்
    யார் நினைப்பது உங்களை
    தலையில் தட்டும் மனைவி !

    இந்நாட்டு மன்னர்கள்
    தேர்தல் மறுநாள்
    சாதாரண குடிமக்கள் !

    பணம் பத்தும் செய்யும்
    உணர்த்தியது
    தேர்தல் !

    தாமதமானாலும்
    இறுதியில் வெல்வது
    அறம் !

    மூச்சு இருக்குவரை
    நினைவில் இருக்கும்
    முதல் காதல் !

    தோல்வி
    வெற்றிக்கான படிக்கட்டு சரி
    படிக்கட்டு எத்தனை ?

    மழை விட்ட பின்னும்
    சாரல்
    மரத்திலிருந்து !

    நவீனகாலம்
    மாணவனைக் கண்டு
    அச்சத்தில் ஆசிரியர் !

    தூண்டில் புழு மீன்
    மனிதன் புழு
    வாழ்க்கை ஒரு வட்டம் !

    ஆட்டம் ஆர்ப்பாட்டம்
    அனைத்தும் அடக்கம்
    கல்லறை !

    கடன் வாங்கக்
    கற்றுத் தருகிறார்
    கணக்கு ஆசிரியர் !

    பூச்சென்டாக ஒன்று
    மலர்வளையமாக மற்றொன்று
    ஒரு செடிப் பூக்கள் !

    வயப்பட்டவர்கள் மட்டும்
    உணரும் உன்னதசுகம்
    காதல் !

    உட்கார்ந்த இடத்தில்
    ஓடாமல் விளையாடியது
    கணினியில் குழந்தை !

    குறைத்தது
    வாழ்நாள்
    நவீன உணவு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    நிலக்கரி வைரம்
    இரண்டும்
    மண்ணுக்கடியில் !

    ஊரே பால் ஊற்றியது
    முடிவில் பார்த்தால்
    அனைத்தும் தண்ணீர் !

    புதிய வீடு
    வரவில்லை தூக்கம்
    வாங்கிய கடன் !

    பறக்க மறந்தன
    சிறகுகள் இருந்தும்
    சோதிடக் கிளிகள் !

    இரும்புச் சங்கிலி இழுத்துத் தோற்றதால்
    சிறிய கயிறையும் இழுக்கவில்லை
    யானை !

    கண்களை மூடியபோதும்
    களைப்பின்றிப் பயணம்
    குதிரை !

    வாழ்வின் ஏற்றம் இறக்கம்
    கற்பிக்கும் விளையாட்டு
    பரமபதம் !

    பகிர்தலை
    பயிற்றுவிக்கும் விளையாட்டு
    பல்லாங்குழி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    ஏறும்போது ரூபாயில்
    இறங்கும்போது பைசாவில்
    பெட்ரோல் !

    அன்று உப்புக்கு
    இன்று அனைத்துக்கும்
    வரி !

    பண்படுத்தப் படைத்தது
    புண்படுத்தப் பயன்படுது
    மதம் !

    உயர் திணையிலிருந்து
    அ ஃ றிணைக்கு இறக்கம்
    சாதி வெறி !

    பயிற்றுவிக்கின்றன
    ஊடகங்கள்
    தமிங்கிலம் !


    அறிகுறி
    சுனாமிக்கு
    வெப்பமயமாதல் !

    வெட்டுதல் அதிகம்
    நடுதல் குறைவு
    மரம் !

    அய்வகை நிலத்திலும்
    அமோக சுரண்டல்
    மனிதன் !

    பகிர்ந்துண்ணும் பறவை
    தனித்துண்ணும் மனிதன்
    உயர்திணை எது ?

    தொழிலாளி வேடம்
    கோடிகள் ஊதியம்
    கதாநாயகன் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    மனத்தால் செதுக்கினான்
    உளியில் செதுக்கும் முன்
    சிற்பி !


    பன்னாட்டு மொழி பண்பாட்டு மொழி
    உலகின் முதல் மொழி
    தமிழ் !

    துன்ப இருள் நீக்கி
    இன்ப ஒளி தரும் விளக்கு
    திருக்குறள் !

    அன்று சொன்னது அர்த்தம் உள்ளது
    இன்றும் நன்மை தருவது
    ஆத்திசூடி !

    நல்வழி அறநெறி
    நான்கே அடியில்
    நாலடியார் !

    பொய்க்கின்றன
    கற்பிதங்கள்
    அழகுதான் கருப்பும் !

    உதட்டில் ஆன்மிகம்
    கண்களில் காமம்
    சாமியார் !

    விவேகமன்று
    விளைநிலங்களில்
    கட்டிடங்கள் !

    உருவம் இல்லை
    உணர முடிந்தது
    தென்றல் !

    காண்பதும் பொய்
    நகரும் மரங்கள்
    தொடர்வண்டிப் பயணம் !

    ஒற்றைக்கால் தவம்
    மீனுக்காக
    கொக்கு !

    மழை கடல் மேகம்
    தொடர் பயணம்
    இயற்கை !

    தெரிவதில்லை சுழல்வது
    கண்களுக்கு
    பூமி !

    காட்சிப்பிழை
    நகரவில்லை
    சூரியன் !

    நன்கு விளையும்
    ஏர்முனை
    வலி தாங்கிய நிலம் !

    சுமையானலும்
    பாதுகாப்பானது
    ஆமையின் ஓடு !

    வராது ஓசை
    மீட்டாமல்
    வீணை !

    ஒலிக்காது
    தட்டாமல்
    மேளம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சுட்டபோதும்
    சுவை தந்தது
    சோளக்கதிர் !

    புறம் முள்ளாக
    அகம் இனிக்கும் சுளையாக
    பலா !

    அருகே முள்
    ஆனாலும் மகிழ்ச்சி
    ரோசா !

    வேறு இல்லை
    இணையான மலர்
    செம்பருத்தி !

    உருவமின்றியே
    அசைத்தன கிளைகளை
    காற்று !

    இல்லை தண்ணீர்
    உண்டு வரலாறு
    பழைய கிணறு !

    தெரிந்தது
    குளத்தில்
    நகரும் மேகம் !

    துளிர்த்தது
    பட்ட மரம்
    நல்ல மழை !

    வெடித்தது பஞ்சு
    வருத்தத்தில்
    இலவு காத்த கிளி !

    பணிவே சிறப்பு
    வளைந்து நின்றது
    விளைந்த கதிர் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    உயிரற்றவைதான்
    பலரை உயிர்ப்பிக்கும்
    புத்தகம் !

    பிறருக்குப் புரியாது
    பெற்றவளுக்குப் புரியும்
    மழலை மொழி !

    வேட்டு வைத்தது
    வெட்டியான் வேலைக்கும்
    மின்சாரத் தகனம் !

    அதிகமானது
    பிற மாநிலத்தில்
    தமிழ்ப் பற்று !

    வேண்டவே வேண்டாம்
    வறட்டு கெளரவம்
    கொலைகள் கொடூரம் !

    மனிதனை
    விலங்காக்கும்
    சாதிவெறி !

    மனிதனுக்கு அழகு
    மனதினில்
    மனிதநேயம் !

    குறைக்கும்
    வாழ்நாளை
    கவலை !

    உணர்கிறோம்
    பிரிவின் போது
    மனைவியின் அருமை

    இரண்டே வரிகளில்
    இணையற்ற இலக்கியம்
    திருக்குறள் !

    மனிதர்கள் மட்டுமல்ல
    பேருந்துகளும் விடுகின்றன
    பெருமூச்சு !

  1. ஹைக்கூ ! சென்ரியு !கவிஞர் இரா .இரவி !

    தெரிவதில்ல்லை
    தேனீன் சுவை
    மலர்களுக்கு !

    பயணப்படுவதில்லை
    கிணற்றுத்தவளை
    செக்குமாடு !

    மாற்றி யோசி
    மாற்றம் தரும்
    வெற்றி !

    போராடியதால்
    கம்பளிப்பூச்சி
    வண்ணத்துப்பூச்சி !

    வெந்த புண்ணில்
    வேல்பாய்ச்சல்
    அகதி படுகொலை !

    .

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !


    இனம் காணலாம்
    வாய்ச்சொல் வீரர்கள்
    தேர்தல் !

    சிரித்து வாழ வேண்டும்
    சிரித்து உணர்த்தியது
    சின்ன மலர் !

    சொல்லாமல் சொல்லியது
    வாடாமல் வாழ்
    வாடாமல்லி !

    மழை வெள்ளம்
    உதவியது
    முகநூல் !

    மனிதனுக்கு அழகு
    மதமல்ல
    மனிதநேயம் !

    வழி செய்யுங்கள்
    உழுதுண்டு வாழ்வார்
    வாழ !

    கண்ணால் காண்பதும் பொய்
    சுற்றவில்லை சூரியன்
    என்பதே மெய் !

    தெரிவதில்லை
    கண்களுக்கு
    சுற்றும் பூமி !

    ஒளியற்ற சந்திரன்
    ஒளி பெறுகிறான்
    சூரியனால் !

    முடியும் முடியும்
    உள்ளத்தால் நினைத்தால்
    முடியும் !

    பாதையில்லை பதற வேண்டாம்
    துணிவுடன் நடந்திடு
    உருவாகும் பாதை !

    கணினி யுகத்தில்
    வில் உண்டு
    வானவில் !

    பார்ப்பவர்களுக்கு தருகிறார்கள்
    தன்னம்பிக்கை
    மாற்றுத்திறனாளிகள் !

    விபத்தில் இல்லை
    மதித்து நடந்தால்
    சாலை விதி !

    வேகமாகச் செல்ல அல்ல
    நிற்பதற்குத்தான்
    மஞ்சள் விளக்கு !

    ரசிப்பதற்குத்தான்
    பறிக்க அல்ல
    மலர்கள் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    வேண்டாம் மழை
    வேண்டினான் விவசாயி
    அறுவடை நாள் !

    ஏமாற்றுதல்
    புதிய சொல்
    உலகமயம் !

    பாதாளம் தள்ளுதல்
    புதிய சொல்
    தாராளமயம் !

    ஏழைகளுக்கு
    இன்னல்
    புதிய பொருளாதாரம் !

    எளிய வழி
    கவலை மறக்க
    கவிதை !

    சிறிய வேறுபாடு
    நான் திறமைசாலி தன்னம்பிக்கை
    நானே திறமைசாலி ஆணவம் !

    வாழ்வியல் தத்துவம்
    அகந்தை அழிக்கும்
    அன்பு உயர்த்தும் !

    சிரமம் இல்லை
    சிகரம் அடைவது
    முயற்சியே முக்கியம் !

    அரசிடம் தொடங்கி
    மக்கள் வரை தொடர்வது
    பற்றக்குறை !

    சில நிமிடம் வாழ்கின்றன
    நீரைப் பிரிந்த பின்னும்
    மீன்கள் !

    பாதுகாப்பு என்பதால்
    பாரத்திற்கு வருந்தவில்லை
    ஆமை !

    கொடிய விசம்
    பெயரோ
    நல்ல பாம்பு !

    கொள்கைக்காக அன்று
    கோடிகளுக்காக இன்று
    கூட்டணி !

    இதயேந்திரனின் தொடக்கம்
    இனிதே தொடர்கின்றது
    உடல் தானம் !

    வீணாக்காது வழங்கிடுக
    வேண்டும் விழிப்புணர்வு
    விழிகள் தானம் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    வியர்ப்பதே இல்லை
    எவ்வளவு ஓடினாலும்
    எலி !

    தொழில்நுட்பம் கற்பிக்கும்
    குருவாகின்றான்
    மகன் !

    நேரமில்லை பொய்
    மனமில்லை உண்மை
    சாதிக்க !

    அழுகுக்காடை சுமக்க வருத்தமில்லை
    சுத்தாடை சுமக்க கர்வமில்லை
    கழுதை!

    உலகில்
    ஒருவருமில்லை
    கவலையற்றோர் !

    சிரிக்கின்றன
    பிணத்தின் மீதிருந்தும்
    மலர்கள் !

    களவாடுகின்றான்
    கதிரவன்
    மலர்களில் பனித்துளிகள் !

    எரிச்சலூட்டியபோதும் நன்றி
    உணவு கிடைக்கின்றது
    விளம்பர இடைவெளி !

    வன்மம் கற்பிக்கும்
    பாடசாலை
    தொலைக்காட்சித் தொடர்கள் !

    பூவே
    பூ சூடியது
    என்னவள் !

    வேண்டவே வேண்டாம்
    மிகக் கொடியது
    கோபம் !

    உடற்பயிற்சியின் இராசா
    உடல்நலம் காக்கும்
    நடைப்பயிற்சி !

    வேண்டா வெறுப்பாக வேண்டாம்
    விரும்பி செய்வோம்
    விவசாயம் !

    கல் சிலையானது
    சிற்பியின்
    சிந்தையால் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    எண்ணிலடங்காதவை
    எண்ணம் கவர்ந்தவை
    மலர்கள் !

    மதித்து ரசிப்பவர்களுக்கு
    மகிழ்வைப் போதிக்கும்
    மலர்கள் !

    கோபம் கொள்வதில்லை
    ஊடல் கொள்வதில்லை
    மலர்கள் !

    வரவேற்கின்றன
    வண்டுகளை
    மலர்கள் !

    தேன் உண்டால்
    தேம்பி அழுவதில்லை
    மலர்கள் !

    கண் கொள்ளாக் காட்சி
    கண் கவர் மாட்சி
    மலர்கள் !

    கர்வம் இல்லை
    கொள்ளை அழகு
    மலர்கள் !

    இல்லவே இல்லை
    போட்டி பொறாமை
    மலர்கள் !

    கூர்ந்துப் பார்த்தால்
    எல்லாம் அழகு
    மலர்கள் !

    ரசித்துப் பார்த்தால்
    அழகோ அழகு
    எருக்கம் மலர்கள் !

    பறக்காமல்
    பட்டாம் பூச்சி
    ஓ மலர் !
    .

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    வருத்தத்தில் கதிரவன்
    நிலவு கண்டு மலரும்
    அல்லி !

    வெளியே
    தெரிவதில்லை
    வேர்களின் கடின உழைப்பு !

    உடன் இருந்தாலும்
    ஒட்ட விடுவதில்லை நீரை
    தாமரை இலை !

    கொடியதும் உண்டு
    மரங்களில்
    கருவேல மரம் !

    முக்கண் உண்டால்
    இன்பம்
    நுங்கு !

    அவசியம்
    களை எடுப்பு
    விவசாயம் !

    காக்கும் நீர்வளம்
    தரும் நன்மைகள்
    பனைமரம் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !



    முதல் மொழி மட்டுமல்ல
    முதன்மை மொழி
    தமிழ் !

    உலகம் முழுவதும்
    ஒலிக்கும் மொழி
    தமிழ் !

    மனஇருள்
    விரட்டிடும் விளக்கு
    திருக்குறள் !

    எரிந்து கருகினாலும்
    விளக்கேற்றிய மகிழ்வு
    தீக்குச்சி !

    உருகி வழிந்தாலும்
    ஒளி தந்த மகிழ்வு
    மெழுகு !

    அவிழ்த்து விட்ட கூந்தலில்
    முடிந்து விட்டாள்
    மனதை !

    நல்லவனுக்கு
    ஆயுதம்
    உண்மை !

    தொட்டால்
    கெட்டாய்
    மது !

    காரணமாகின்றது
    காதல் முறிவிற்கு
    பொய் !

    வீட்டில் எலி
    வெளியில் புலி
    பிரபலங்கள் !

    வழிவகுக்கும்
    அழிவிற்கு
    ஆடம்பரம் !

    நெடுநாளாகி விட்டது
    நேர்மை நீதி விலகி
    அரசியல் !

    புரட்டர்களின் வெற்றி
    நிரந்தரமன்று
    புரட்டி விடும் !

    பெருகப் பெருக
    அழிவும் பெருகும்
    நெகிழி !

    அகம் புறம்
    தூய்மையானால்
    இனிக்கும் வாழ்க்கை !

    வெறுத்தாள் திருமணத்தை
    முதிர்கன்னி
    வரதட்சணை

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    மதித்தால்
    மதிக்கும்
    குழந்தை !

    உடலில் இருக்கலாம்
    உள்ளத்தில் இல்லை அழுக்கு
    உழைப்பாளி !

    உருவாக்கும்
    முன்னேற்றம்
    மனஎழுச்சி !

    விதைத்தால்தான் முளைக்கும்
    நினைத்தால்தான் நடக்கும்
    வாழ்க்கை !

    பிறருக்காக வாழ்
    இறந்த பின்னும்
    வாழ்வாய் !

    சிந்தித்துப் பார்
    பகையாளி மனநிலையில்
    விலகும் பகை !

    சுவர் இன்றி
    சித்திரம் உண்டு
    காகிதத்தில் !

    காலம் கடந்து விழித்தால்
    காலம் கடந்துதான் விடியும்
    வாழ்க்கை !

    அஞ்சாதே
    அஞ்சினால் கூடும்
    துன்பம் !

    முடியாததை முடித்திடும்
    நடக்காததை நடத்திடும்
    நட்பு !

    வீணாக்குகின்றான் சோம்பேறி
    விவேகமாக்குகின்றான் அறிவாளி
    நேரம் !

    பாராட்டுக
    திறமை இருந்தால்
    பகைவனையும் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    செத்துப் போனது
    சாதி மத பேதம்
    மழை வெள்ளம் !

    மரிக்கவில்லை மனிதநேயம்
    மெய்ப்பித்தது
    மழை !

    கொண்டாடு
    திருவிழா போல
    வாழ்க்கை !

    முடிந்து விடுகிறது
    தோற்றம் மறைவோடு
    சராசரி வாழ்க்கை !

    நண்பன் இல்லாவிடினும்
    பகைவன் இன்றி வாழ்
    இனிக்கும் வாழ்க்கை !

    பெண் பிறந்தால்
    பேதலிக்கும்
    பெண்கள் ?

    உலகிற்கு உழைத்தவனும்
    இளைத்தவனும்
    தமிழன் !

    கைரேகையில் இல்லை
    கைகளில் உள்ளது
    எதிர்காலம் !

    இன்பத்தின் காரணி
    பணமன்று
    மனம் !

    வழிவகுக்கும்
    மன நிம்மதிக்கு
    மவுனம் !

    பெரிய மனிதர்களின்
    சிறந்த பண்பு
    விட்டுக் கொடுத்தல் !

    உறுதியாகின்றது
    உழைப்பாளிக்கு
    உறக்கம் !

    அரிதிலும் அரிது
    கணவனைப் பாராட்டும்
    மனைவி !

    வரலாம் தோல்வி
    இறுதி வெற்றி
    உண்மைக்கே !

    அறியவில்லை யாரும்
    அவள் அழுததை
    மழை !

    நல்ல கனவு
    கலைத்தது
    கொசு !

    பிடிக்காமல் ரசியுங்கள்
    பார்ப்பதே பரவசம்
    பட்டாம் பூச்சி !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    அறிகின்றன பறவைகள்
    அறியவில்லை மனிதன்
    கனமழை !

    மதங்களை வென்றது
    மனிதநேயம்
    மழை !

    ஆறவில்லை
    வெள்ளத்தின் ரணங்கள்
    வேண்டாம் அரசியல் !

    வேண்டாம் விளையாட்டு
    இனியாவது உணர்க
    இயற்கையின் பலம் !

    போதும் அறிவுரை
    வேண்டும் நடைமுறை
    இயற்கை நேசம் !

    வீழ்வது தவறல்ல
    எழாதது தவறு
    எழுந்து நட !

    வேண்டாம் வரிகள்
    மூன்றுக்கு மேல்
    ஹைக்கூ !

    கூச்சலின்றி நடந்தது
    பாராளுமன்றம்
    கனவில் !

    சொன்னவன் எங்கே ?
    பத்துப் பொருத்தம்
    மணமுறிவு !

    பிறந்தவுடனும்
    இறக்கும் தருவாயிலும்
    பால் !

    ஆண்களுக்கும் வேண்டும்
    மணமானதற்கு அடையாளம்
    கட்டுக தாலி !

    ஓடி விளையாடவில்லை
    அமர்ந்தே விளையாடியது
    கணினியில் குழந்தை !

    வாடிவிடும் குழந்தை
    வேண்டாம்
    வன்சொல் !

    கர்வம் உண்டு
    குரல் பற்றி
    குயிலுக்கு !

    கவலை இல்லை
    நிறம் பற்றி
    குயிலுக்கு !

    யார் சுட்டது ?
    வெள்ளையப்பம்
    வானத்தில் !

    அன்றே உரைத்தாள்
    அணுவை
    அவ்வை !

    ரசிக்கமுடியவில்லை
    நிலவை
    பசி !

    கவனம்
    போலிகள் பெருகிவிட்டனர்
    சாமியார்கள் !

    மது உள்புக
    மதி வெளியேறும்
    வேண்டாம் மது !

  1. மழை ! கவிஞர் இரா .இரவி !

    தலைநகரை
    தண்ணீர் நகராக்கியது
    மழை !

    நகரத்தை
    நரகமாக்கியது
    மழை !

    பொய்த்தும் வாட்டியது
    பெய்தும் வாட்டியது
    மழை !

    ஏழைகளை வாட்டியது
    இன்னலில் ஆழ்த்தியது
    மழை !

    சாலையை எரியாக்கியது
    ஏரியில் இடமில்லாததால்
    மழை !

    சாலைகளை வழியாக்கியது
    நீர்வழிகளை அடைத்ததால்
    மழை !

    காலை வாரியது
    தூர் வாராததால்
    மழை !

    உண்மையாக்கியது
    சிறுதுளி பெருவெள்ளம்
    மழை !


    ஏழைக்குடிசைகள் மட்டுமல்ல
    மாளிகைகளும் மூழ்கியது
    மழை !

    பேராசை மனிதர்களுக்கு
    பாடம் புகட்டியது
    மழை !

    உணர்த்தியது
    உண்ண முடியாது பணத்தை
    மழை !

    பணக்காரர்களுக்கும் உணர்த்தியது
    பசியின் கொடுமையை
    மழை !

    புகட்டியது
    பாசம் நேசம்
    மழை !

    சூறையாடியது
    சொத்தின் ஆசையை
    மழை !

    வசதியானவர்களுக்கும் காட்டியது
    வாழ்வின் நிலையாமையை
    மழை !

    பிறர் ஆட்டங்களை நிறுத்தி விட்டு
    தான் ஆட்டம் போட்டது
    மழை !

    சிறிய ரொட்டியையும்
    உயிர் காக்கும் அமுதாக்கியது
    மழை !

    வெளியேற முடியாமல்
    சிறை வைத்தது
    மழை !

    சோதிடன் சொல்லவில்லை
    சோதிடனும் மூழ்கினான்
    மழை !

    பெய்தது போதும் போதும்
    பெய்யென வேண்டுகையில் வா
    மழை !
    .

  1. கலாம் ! கவிஞர் இரா .இரவி !

    அகந்தை அறியாதவர்
    அகிலம் அறிந்தவர்
    கலாம் !

    வாழ்வாங்கு வாழ்ந்தவர்
    வையகம் போற்றியவர்
    கலாம் !

    கேள்வி கேட்டு பதில் வாங்கி
    அறிவை விதைத்தவர்
    கலாம் !

    ஆசிரியர் மாணவர்
    உள்ளம் வாழ்பவர்
    கலாம் !

    காவலர்களுக்கு குளிராடை தந்து
    மகிழ்வித்த பேகன்
    கலாம் !

    தவறான மதிப்பீடுகளை
    தவிடு பொடியாக்கினார் பொக்ரானில்
    கலாம் !

    அவர் மூச்சு மட்டுமே நின்றது
    அவர் பற்றிய பேச்சு நிற்காது
    கலாம் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    அசைவத்தை வென்றது
    சைவ விலையேற்றம்
    துவரம் பருப்பு !

    வட்டிக்கு வாங்கி
    ஒரு நாள் மகிழ்ச்சி
    தீபாவளி !

    சாதி மதம் மறந்திடுக
    சாதிக்க நினைத்திடுக
    சமுதாயம் சிறக்கும் !

    சாரல்
    மழை நின்றபின்னும்
    மரத்திலிருந்து !

    விவேகமன்று
    அதிக வேகம்
    விபத்து !

    வாழ்நாள் நீட்டிப்பு
    கவனம்
    சாலையில் !

    வேண்டாம் வெறி
    விலங்காக மாறாதே
    வாழ்க மனிதனாக !

    மாண்ட உயிர்
    மீண்டும் வருவதில்லை
    வேண்டாம் கொலை !

    கற்பிக்கப்பட்ட
    கற்பனை
    பேய் பிசாசு !

    நாடு கடத்துவோம்
    பேய்ப்பட
    இயக்குனர்களை !

    கடமை
    பண்படுத்துதல்
    படைப்பாளிக்கு !

    நீதி நெறி
    கற்பிப்பவரே
    எழுத்தாளர் !

  1. ஹைக்கூ (சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

    உலகக் கவிஞர்களின்
    பொதுப் பாடுபொருள்
    நிலவு !

    சாக்கடையில் விழுந்தாலும்
    ஒட்டவில்லை சகதி
    நிலவு !

    நடந்தேன் நடந்தது
    நின்றேன் நின்றது
    நிலவு !

    அடம் பிடித்தது
    குழந்தை
    நிலவைக் கேட்டு !

    மழை பொழிந்த வானிற்கு
    பூக்கள் பூத்து
    நன்று சொன்னது மரம் !

    கற்றுத் தருகின்றன
    கண் சிமிட்ட
    நட்சத்திரங்கள் !

    காலியான பானை
    நிறைந்து இருந்தது
    காற்று !

    பறவைக்கு நன்றி
    பாறை இடுக்கிலும்
    முளைத்தது செடி !

    கொக்கு
    ஒற்றைக்கால் தவம்
    மீனிற்காக !

    மகரந்தம் உண்டது
    பூவிற்கு வலிக்காமல்
    வண்ணத்துப் பூச்சி !

    அறியவில்லை
    தன் எதிர்காலம்
    சோதிடக் கிளி !

    ஆய்வின் தகவல்
    நலத்திற்குக் கேடு
    நவீன உணவு !

    விழா நாட்களிலும்
    சோகத்தில்
    ஆதரவற்றோர் விடுதி !

    விரைவில் சாம்பலாவாய்
    உணர்த்தியது
    வெண் சுருட்டு !
    .
    குடையோடு சென்றான்
    வரவில்லை
    மழை !

    புதைப்பதா எரிப்பதா
    சண்டை கண்டு
    ஓடியது பிணம் !

  1. ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

    வேதனையில் விவசாயி
    உடைத்தனர் சாலையில்
    திருஷ்டி பூசணி !

    பொருள் தருவதை விட
    புத்தகம் தருவது மேல்
    நண்பனுக்கு !

    பணத்தால் வருவதல்ல
    மனத்தால் வருவது
    இன்பம் !

    வாய்ப்பு வழங்கினால்
    வலம்வருவர் வானிலும்
    பெண்கள் !

    சாம்பார் இன்றி
    ரசம் வந்தது
    விலை ஏற்றம் !

    மடமையின் உச்சம்
    மனிதன் கொலை
    மாட்டிற்காக !

    வேண்டாம் அவமரியாதை
    வேண்டும் மரியாதை
    முதுமைக்கு !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    அர்த்தமில்லை
    மண் பார்க்கச் சொல்வதில்
    விண்வெளியில் பெண்கள் !

    தயங்குவதில்லை
    தடைகள் கண்டு
    எறும்புகள் !

    ஒழிந்தது தந்தி
    ஒழியுங்கள்
    வதந்தி !

    மேகம் மறைத்த
    நிலாக்கள்
    முகமதியர் !

    கவிதையே
    கவிதை ரசித்தது
    என்னவள் !

    மரம் கனி தந்தது
    கல் எறிந்தவனுக்கு
    மனிதன் ?

    தேசமெங்கும் இருப்பதால்
    தேசியப் பறவையோ ?
    கொசு !

    தேயவுமில்லை வளரமில்லை
    தேய்பிறையில் வேண்டாம் எனல்
    மூடநம்பிக்கை !
    .
    தெரியவில்லை அடையாளம்
    தப்பித்தேன் அறுவையிடம்
    தலைக்கவசம் !

    இலங்கையில் விசித்திரம்
    கொலைகளை விசாரிப்பது
    கொலையாளியே !

    உடைக்காமலே பெருங்கல்
    சிறுகல்லானது
    ஆற்றின் உருட்டலால் !

    பத்துப் பொருத்தம் பார்த்து
    முடித்த இணைகள்
    மணமுறிவு வரிசையில் !

    யாரோ என்று
    பயந்தான் சிறுவன்
    நிழல் கண்டு !

  1. லிமரைக்கூ !

    கவிஞர் இரா. இரவி!



    மட்டற்ற கவிஞர் பாரதி
    பாடலால் படைத்தான் புதுஉலகம்
    பாட்டு ரதத்தின் சாரதி !


    பார்க்கப் பரவசம் சிலை!
    பார்ப்போர் உள்ளம் பறிபோகும்
    என்றும் அழியாத கலை!



    ஈடு இணையற்றவள் தாய்
    தன்னை உருக்கி ஒளி தருவாள்
    தாயால் வளரும் சேய் !


    சாதி ஆதியில் இல்லை
    வர்ணம் என்ற பெயரில் சிலரால்
    பாதியில் படைத்திட்ட தொல்லை!


    நிலவின் இருப்பிடம் விண்
    நாளும் ரசிப்போர் இங்கு பலர்
    நிலவொளி விழுமிடும் மண்!


    மதித்திடுக என்றும் பெண்மை
    உரிய மரியாதை நாளும் தருக
    அவர்கள் உள்ளம் மென்மை!


    வேண்டாம் சேலையில் பட்டு
    வண்ணத்துப்பூச்சி நல்வாழ்க்கை இழந்தது
    போனது உலகை விட்டு !


    மழைக்குக் காரணி மரம்
    விரும்பி நாளும் பேணி வளர்ப்போம்
    மரம் வளர்ப்பு அறம் !


    பழி போடாதே விதி மீது
    விதியென்று ஒன்று இல்லவே இல்லை
    மதியால் வெற்றிமாலை தோள்மீது !


    வாழ்வை என்றும் விரும்பு
    ரசித்து வாழ்ந்து பார் உனக்கு
    வாழ்க்கை ஆகிடும் கரும்பு !


    சோகம் வேண்டாம் இனி
    சோர்வைக் கொஞ்சம் தள்ளி வை
    இன்பமே எந்நாளும் இனி !



    காந்தியடிகள் போற்றியது வாய்மை
    நல்லதை மட்டும் என்றும் நினை
    மனம் ஆகட்டும் தூய்மை !




    தன்னம்பிக்கை பெரும் சொத்து
    எதை இழந்தாலும் பெற்று விடலாம்
    வாழ்வின் வளர்ச்சிக்கான வித்து !


    உயர்வாக இருக்கட்டும் எண்ணம்
    ஓயாமல் உழைத்து வந்தால்
    வெற்றி கிட்டுவது திண்ணம் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !


    உலகமே சுற்றினாலும்
    ஈடு இணை இல்லை
    பிறந்த மண் !

    உண்பது பச்சைப்புல்
    தருவது வெள்ளைப்பால்
    விசித்திர மாடுகள் !

    வரைந்து முடித்தான்
    சாலையில் கடவுள் ஓவியம்
    வந்தது மழை !

    இறந்த பின்னும் விடவில்லை
    பதவி ஆசை அரசியல்வாதிக்கு
    சிவலோகப் பதவி !

    உணர்க
    பட்டுப்பூச்சிகளின் மரணத்தால்
    வந்தது பட்டுச்சேலை !

    அறியவில்லை
    தன் வீ ட்டுத் திருட்டு
    குறி சொல்லும் கோடாங்கி !

    வெள்ளையா இருக்கிறவன்
    பொய் சொல்ல மாட்டன்
    மூட நம்பிக்கை !

    பலருக்கு சம்பவம்
    சிலருக்கு சரித்திரம்
    மரணம் !

    கல் மண் தண்ணீர்
    கொள்ளை
    தனக்குத்தானே கொல்லி !

    மம்மி என்றால்
    செத்த பிரமிடு
    சொன்னது குழந்தை !

    சிறிய வீடு
    பெரிய மனம்
    ஏழை !

    பெரிய வீடு
    சிறிய மனம்
    பணக்காரன் !
    .
    தன்னை உருக்கி
    பிறருக்கு ஒளி
    மெழுகு !

    நலமாக வாழ
    நாளும் தேவை
    நல் தானியங்கள் !

    ஆடி மாதம்
    தேடி விதைக்கவில்லை
    பெய்யவில்லை மழை !

  1. ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

    சுமையான போதும்
    பாதுகாப்பு
    நத்தையின் கூடு !

    கடவுச்சீட்டு விசா இன்றி
    கடல் கடந்து பயணம்
    பறவை !

    சேற்றில் மலர்ந்தும்
    ஒட்டவில்லை சேறு
    செந்தாமரை !

    குரல் இனிமை
    குயில் !
    நிறம் கருமை

    அடைகாக்கா அறியாவிடினும்
    காக்காவின் தயவில் பிறப்பு
    குயிலினம் !

    நம்பமுடியாத உண்மை
    மானை விழுங்கும்
    மலைப்பாம்பு !


    இனிமைதான்
    ரசித்துக் கேட்டால்
    தவளையின் கச்சேரி !

    இனிய அனுபவம்
    நனைந்து பாருங்கள்
    மழை !

    மழையில் நனைந்தும்
    கரையவில்லை வண்ணம்
    மயில் தொகை !

    நிலா வேண்டி
    அழும் குழந்தை
    அமாவாசை !

    முதல் மாதம் கனமாக
    கடைசி மாதம் லேசாக
    நாட்காட்டி !

    மீண்டும் துளிர்த்தது
    பட்ட மரம்
    மனிதன் ?

    தோட்டம் அழித்து
    கட்டிய வீட்டில்
    செயற்கை மலர்கள்

    பாடுவதில்லை
    நாற்று நாடுவோர்
    பண்பலை வானொலி !

    ரேகை பார்த்தது ஈசல்
    சொன்னார் சோதிடர்
    ஆயுசு நூறு !

    மணி காட்டாவிட்டாலும்
    மகிழ்ச்சி தந்தது
    மிட்டாய் கடிகாரம் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    ஏரிகளில்
    ஏறி நின்றன
    கட்டிடங்கள் !

    ஏக்கத்துடன் பார்த்தான்
    மழைக்கு ஒதுங்கியவன்
    பள்ளியை !

    வருவதில்லை
    சொத்துச் சண்டை
    ஏழை வீட்டில் !

    சிறுவனுக்கு வண்டியானது
    நோண்டிய பின்
    நுங்கு !

    கற்பித்தது தாய்மொழி
    புலம் பெயர்ந்தோருக்கு
    வானொலி !

    குருதியோடு
    உறுதியானது
    தாய்மொழி !

    வெறுப்பதில்லை
    வண்டுகளை
    மலர்கள் !

    மரத்தைப் பிரிந்ததால்
    சருகானது
    இலை !

    கடிக்காது
    மிதிக்காமல்
    பாம்பு !

    ஒளிக்கும்
    தென்றலுக்கும்
    ஒரே சன்னல் !

    குட்டிப்போடவில்லை
    வருடங்கள் ஆகியும்
    மயிலிறகு !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    உடைந்தது பொம்மை
    வலித்தது
    குழந்தைக்கு !

    என்றும்
    இளமையாக
    நிலா !

    பறக்க மறந்தன
    சிறகுகள் இருந்தும்
    வாத்துக்கள் !

    அறியவில்லை
    கொக்கின் காத்திருப்பை
    மீன்கள் !

    சிதைத்தப் போதும்
    கட்டத் தொடங்கியது
    சிலந்தி !

    தன் எதிர்காலம் அறியாமல்
    கதவிடுக்கில் மரித்தது
    பல்லி !

    இல்லாத போதும்
    வாழ்கின்றார் போதனையில்
    புத்தர் !

    மகன் கெட்டுப் போனாலும்
    மற்றவரிடம் விட்டுத் தராத
    அம்மா !

    நேற்று தண்ணீர் இல்லை
    இன்றும் மணலும் இல்லை
    பெயரோ ஆறு ?

    தரணியில் குறைத்தது
    தமிழகத்தின் மதிப்பை
    வாக்களிக்கப் பணம் !

    இருக்கட்டும் பற்று
    வேண்டாம் வெறி
    நடிகர் மீது !

    தரமாட்டான் அவ்வைக்கு
    நெல்லிக்கனி
    இன்றைய அதியமான் !

  1. ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    வெட்டுதல் முறையோ
    வாழும் வாழையை
    திருமணத்திற்கு !

    அகற்றினோம் பெயரிலிருந்து
    அகற்றுவோம் மனதிலிருந்து
    சாதி !

    தேவை கவனம்
    ஒவ்வொரு வினைக்கும்
    உண்டு எதிர்வினை !

    உடன் கிடைக்கும்
    உற்று நோக்கினால்
    கருப்பொருள் !

    கட்டவேண்டியது
    வழிபாட்டுத்தலங்கள் அல்ல
    மனிதநேயம் !

    தள்ளி வையுங்கள்
    தவறான கற்பிதங்களை
    வெண்மை மேன்மை !

    இயற்கை மட்டுமல்ல
    செயற்கையும் அழகுதான்
    மலர்கள் !

    காத்திருப்பதில்லை
    யாருக்காகவும்
    ஓடும் நதி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    வருத்தத்தில் விவசாயி
    மகிழ்வில் மணற்கொள்ளையர்
    வறண்ட ஆறு !

    அழுகை நிறுத்தியது குழந்தை
    சவ் மிட்டாய்காரனின்
    கை தட்டும் பொம்மை !

    சுவை அதிகம்
    பெரிதை விட சிறிது
    வெள்ளரிப்பிஞ்சு !

    பத்துப்பொருத்தம்
    இருந்த இணைகள்
    மணவிலக்கு வேண்டி !

    சொத்துக்களில்
    சிறந்த சொத்து
    தன்னம்பிக்கை !

    அன்று சமர்கிருதம்
    இன்று நீட் தேர்வு
    அவாள் சதி !

    திரும்பக் கிடைக்காது
    வீணாக்கிய
    வினாடிகள் !

    பிறரை நேசிக்கும் முன்
    முதலில்
    உன்னை நேசி !


    தேடி வராது
    தேடிச்செல்
    வாய்ப்பு !

    வருடங்களானலும் மறக்காது
    உயிர் காக்கும்
    கற்ற நீச்சல் !

    சம்பாதிக்கும் அப்பா 300 ரூபாய்
    படிக்கும் மாணவன் 3000 ரூபாய்
    காலணி !

    போட்டியாளர்கள்
    அகற்றவேண்டியது
    தோல்வி பயம் !

    பிறருக்கு வழங்கினால்
    நமக்கும் வளரும்
    தன்னம்பிக்கை !

    அறிவது அழகு
    ஆடம்பரம் அழிவு
    அடக்கம் உயர்வு !
    .
    ஆசையை அழிக்கச்
    சொன்ன பூமியில்
    பேராசை !

    குடை விரித்தது
    மழை நின்றதும்
    காளான் !

    வருமானம் அல்ல
    அவமானம்
    மதுக்கடை !

    நேரம் விழுங்குகிறது
    அன்று தொலைக்காட்சி
    இன்று அலைபேசி !

    நடிகராக மட்டும்
    பாருங்கள்
    நடிகவேள் வேண்டுகோள் !


    பூனையில் சைவம் இல்லை
    பசுவில் அசைவம் இல்லை
    இயற்கையின் இயல்பு !

    பூமியை முடித்து
    நிலவை ஆராய்கிறான்
    சுரண்டிட மனிதன் !

    தேவைப்பட்டது தண்ணீர்
    செயற்கை மலர்களுக்கும்
    தூசி கழுவ !

    இரை தேடித் செல்லும்
    மீனவன் இரையாகிறான்
    சிங்கள ஓநாய்களுக்கு !

    வயிற்றுப் பிழைப்பு முயற்சியில்
    மீனவர்கள் உயிர் பறிப்பு
    இலங்கை இராணுவம் !

    பார்த்தாலே
    எச்சில் ஊறும்
    மாங்காய் !

    தானாக உதிரவில்லை
    உதிர்த்தது காற்று
    இலைகளை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அழிந்தன பதிந்தவை
    பதிகிறேன் குரலைவைத்து
    அலைபேசி !

    வேண்டும்
    சில மணி நேரம்
    பால் தயிராக !

    முட்கள் பற்றிய
    கவலையின்றிப் பயணம்
    தேனீக்கள் !

    தந்தது இசை
    துளைகளிட்டப்பின்னும்
    புல்லாங்குழல் !

    கேள்விக்குறியானது
    வாழ்வாதாரம்
    ஏழைகளுக்கு !

    மீன்களை பிடிக்கும் முன்
    மீனவரைப் பிடிக்கிறான்
    சிங்களன் !

    தாமரைஇலை தண்ணீர்
    தலைவன் தொண்டன்
    இன்றைய அரசியல் !

    அனைத்துக் கட்சி
    வேட்டிகளும் உண்டு
    அரசியல்வாதியிடம் !

    நிவாரண நிதியிலும்
    வாரி விடுகின்றனர்
    அரசியல்வாதிகள் !

    ஒருவழிப்பாதை
    ஏறும் இறங்காது
    விலைவாசி !

    பாதையில் நடந்தால்
    மாதவரி வசூலிப்பு
    விடுதலைக்குப்பின் இந்தியா !

    பறித்தனர் எழுத்துரிமை
    பறிக்கின்றனர் பேச்சுரிமை
    பெயரோ மக்களாட்சி !

    நீ யாரடா
    என் உணவை
    முடிவு செய்ய !

    தோற்கடித்தனர்
    வரி வசூலிப்பில்
    இங்கிலாந்துக்காரனை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    காண்பதும் பொய்
    நீரல்ல
    கானல் நீர் !

    இழந்து வருகின்றன
    நல்மதிப்பை
    நீதிமன்றங்கள் !

    முயற்சி செய்
    நூறு முறை
    பத்துமுறை வெல்ல !

    செய்து பின் வருந்துவதைவிட
    செய்யாதிருப்பது நன்று
    தவறு !

    கேடு தரும்
    உள்ளத்திற்கும் உடலுக்கும்
    பொறாமை !

    உடன் உரைத்திடுக
    பெற்ற உதவிக்கு
    நன்றி !

    உன்னைப்போலவே
    பிறரையும்
    மதி !

    கொல்லைப்புறமாக
    குலக்கல்வி அமுல்
    நீட் தேர்வு !

    மருத்துவக்கல்வி
    ஏழைக்கு எட்டாக்கனி
    நீட் தேர்வு !

    பெயர்மாற்றம்
    தொலைக்காட்சியன்று
    தொல்லைக்காட்சி !

    கொலை கொள்ளை
    இல்லாத நாளில்லை
    செய்தித்தாள் !

    வீணடிப்பு
    தாளும் நேரமும்
    ராசிபலன் !

    வாழ்கிறது
    கணினியுகத்திலும்
    காந்தியம் !

    அமைதி பூங்காவாக
    தமிழகம்
    பெரியார் பிறந்ததால் !

    சர்வசக்தி பிள்ளையார்
    கரைக்கையில்
    உயிரிழப்பு ?

    கறுப்புப்பணம் ஒழிப்பதாக
    கோடிகள் விரையம்
    புதுப்பணம் அச்சடிப்பு !

    சின்ன மீன் போட்டு
    சுறா மீன் அபகரிப்பு
    அரசியல் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

    இலையின் வாழ்வை
    நெகிழி கவ்வும்
    கடைசியில் இலையே வெல்லும் !

    வெட்டாமல்
    வேரோடு இடப்பெயர்ச்சி
    மரம் !

    தானாக வந்து சேர்ந்தது
    மேய்ச்சலுக்குச் சென்ற
    மாடு !

    காப்பாற்ற ஆசை
    பல்லியின் வாயில்
    பூச்சி !

    மறையாமல் நிலைத்தது
    வானவில்
    ஓவியத்தில் !

    ஆசைகளை நிறைவேற்ற
    வேண்டினான் பக்தன்
    புத்தரிடம் !

    தோல்வி அடைந்தவள்
    மகனுக்குச் சூட்டினாள்
    காதலன் பெயரை !

    அளவு சுருங்கியது
    கடலை மிட்டாய்
    புதுவரி !

    குளிக்க முடியவில்லை
    வராதபோதும் வெள்ளமானபோதும்
    அருவி !

    வரைந்தாள் வட்டம்
    வளையல் வைத்து
    சிறுமி !

    மழை அறியாது
    சாலை ஓவியன்
    பசி !

    மதிக்கப்படுகின்றன
    வருடத்தில் ஒருநாள்
    எருக்கம் பூக்கள் !

    வரவேற்க
    அன்றும் இன்றும்
    பூங்கொத்து !

    கண்ணீர் சிந்தி
    ஒளி தருகிறது
    மெழுகு !

    தனித்து இருந்தால் கிழிக்கலாம்
    சேர்ந்து இருந்தால் கிழிக்க முடியாது
    காகிதம் !

    கவனக்குறைவு
    பகலிலும் எரியும்
    தெருவிளக்கு !

    நினைவிற்கு வந்தனர்
    காமராசரும் கக்கனும்
    ஆடம்பர அரசியல் !

    கற்பித்தன
    சுறுசுறுப்பு
    கடல் அலைகள் !

    தூக்கி எரியும்
    யார் தொட்டாலும்
    மின்சாரம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    கொட்டு இன்றி ஆடும் காவலர்களுக்கு
    கொட்டு வழங்கியது புதிய ஆணை
    அசல் உரிமம் !

  1. அம்மா ! கவிஞர் இரா .இரவி !

    உணர்வின் அகரம்
    உயர்வில் சிகரம்
    அம்மா !

    பெற்று எடுத்தவள்
    உயிர் தந்தவள்
    அம்மா !

    குழந்தைக்காக
    பிடித்தவற்றையும் புறக்கணித்தவள்
    அம்மா !

    பொறுமை காத்தவள்
    பெருமை சேர்ந்தவள்
    அம்மா !

    முதல் ஆசான்
    தாய்மொழி கற்பித்தவள்
    அம்மா !

    விதையை
    விருட்சமாக்கியவள்
    அம்மா !

    பாலோடு
    பாசமும் ஊட்டியவள்
    அம்மா !

    சோறோடு
    சுறுசுறுப்பும் ஊட்டியவள்
    அம்மா !

    தாலாட்டுப் பாடி
    தமிழுணர்வு வளர்ந்தவள்
    அம்மா !

    உலகே வெறுத்தாலும்
    ஒருபோதும் வெறுக்காதவள்
    அம்மா !

    கெட்டவன் என்றாலும்
    விட்டே தராதவள்
    அம்மா !

    தந்தை அடித்தால்
    தாவிவந்து தடுப்பவள்
    அம்மா !

    கண் கலங்கினாள்
    உள்ளம் கலங்கிடுவாள்
    அம்மா !

    புகழ் பெறுகையில்
    பூரித்து மகிழ்ப்பவள்
    அம்மா !

    சாதனை புரிந்தால்
    பறை சாற்றிடுவாள்
    அம்மா !

    மறக்க முடியாத உறவு
    மறக்கக் கூடாத உறவு
    அம்மா !

  1. அறம் ! கவிஞர் இரா .இரவி !

    அடுத்தவருக்குத் தீங்கு
    நினைக்காதிருத்தல்
    அறம் !
    எவ்வுயிரும் தன்னுயிராய்
    நினைத்தல்
    அறம் !
    வன்முறை
    விரும்பாதிருத்தல்
    அறம் !
    மனசாட்சிப்படி
    நடத்தல்
    அறம் !
    பிறர் கண்ணீர்
    துடைத்தல்
    அறம் !
    நேசக்கரம்
    நீட்டுதல்
    அறம் !
    மனிதநேயம்
    காட்டுதல்
    அறம் !
    உதவிடும்
    உள்ளம்
    அறம் !
    இருப்பதைப்
    பகிர்தல்
    அறம் !
    வன்சொல்
    பேசாதிருத்தல்
    அறம் !
    இன்சொல் மட்டுமே
    பேசுதல்
    அறம் !
    அமைதி
    காத்தல்
    அறம் !
    சினம்
    தவிர்த்தல்
    அறம் !
    மரம்
    வளர்த்தல்
    அறம் !
    விலங்குகளையும்
    நேசித்தல்
    அறம் !
    பறவைகளிடம்
    பாசம் காட்டுதல்
    அறம் !
    கட்டுப்பாட்டில்
    காமம்
    அறம் !
    ஒழுக்கம்
    பேணுதல்
    அறம் !
    பகையின்றி
    வாழ்தல்
    அறம் !
    புகைப்பிடிக்காது
    வாழ்தல்
    அறம் !
    மது அருந்தாது
    வாழ்தல்
    அறம் !
    பண்பாடு
    காத்தல்
    அறம் !
    நேர்மையாக
    நடத்தல்
    அறம் !
    கண்ணியம்
    காத்தல்
    அறம் !
    பிறர் பொருள்
    திருடாதிருத்தல்
    அறம் !
    மெய் மட்டுமே
    பேசுதல்
    அறம் !
    பொய்யே
    பேசாதிருத்தல்
    அறம் !
    பிறர் பசி
    நீக்குதல்
    அறம் !
    வறுமையிலும்
    செம்மை
    அறம் !
    பிறரை
    மதித்தல்
    அறம் !
    பிறரை
    அவமதிக்காதிருத்தல்
    அறம் !
    மனைவியின் கருத்துக்கு
    மதிப்பளித்தல்
    அறம் !

    வாழ்க்கை
    திருத்து | நீக்கு

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அருகே மான்
    விரட்டவில்லை புலி
    பசியில்லை !

    தினம்
    ஒரு தோற்றம்
    நிலவு !

    சுற்றாத சூரியன் சுற்றுவதாய்
    சுற்றும் பூமி சுற்றாததாய்
    புலப்படும் பொய்யாக !

    கணக்குப் பார்த்தான்
    உழுதவன்
    நட்டமோ நட்டம் !

    சம்பாதித்தாலும்
    தருவதில்லை சமஉரிமை
    மனைவிக்கு !

    மழைநீர் சேகரித்த வீட்டில்
    வற்றவில்லை
    நிலத்தடி நீர் !

    தொட்டியையும் ஆட்டி
    பிள்ளையையும் கிள்ளும்
    அரசியல்வாதிகள் !

    அமைச்சர் அறிவிப்பு
    குறைந்தது விலைவாசி
    70 ஐ தாண்டியது பெட்ரோல் !
    .
    காபிக்கும் வரி
    தேநீருக்கும் வரி
    வாழ்க இந்தியா !

    எல்லோரும்
    மவுனமாக இருங்கள்
    பிறக்கும் புதிய இந்தியா !

    புரியவில்லை
    புத்தரின் போதனை
    அரசியல்வாதிகளுக்கு !

    மெய்ப்பித்தனர்
    பேராசை பெருநட்டம்
    அரசியல்வாதிகள் !

    பாதியில் பழுதானது
    பாரதத்தின் பீரங்கி
    வேண்டாம் போர் !

    மனிதகுலத்தை அழிக்கும்
    மோசமான சொல்
    போர் !

  1. மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !

    எல்லா சாலைகளும்
    முடியுமிடம்
    மதுக்கடை !

    நண்பனாகச் சென்று
    பகைவனாகத் திரும்புமிடம்
    மதுக்கடை !

    ஆறறிவோடு சென்று
    ஐந்தறிவாகி வருமிடம்
    மதுக்கடை !

    பொதுவுடைமை பேசி
    தனியுடைமைச் சண்டை
    மதுக்கடை !

    கொள்ளையடித்தப் பணம்
    தண்ணியாகக் கரையுமிடம்
    மதுக்கடை !

    திருடியப் பணம்
    தண்ணியாகக் கரையுமிடம்
    மதுக்கடை !

    உழைத்திட்டக் கூலியும்
    குவியுமிடம்
    மதுக்கடை !

    திருவிழாக் கூட்டமென
    தினமும் கூட்டம்
    மதுக்கடை !
    .
    எண்ணிக்கை குறைந்தாலும்
    விற்பனை குறையவில்லை
    மதுக்கடை !

    விலைகள் கூடினாலும்
    குடிப்பது குறையவில்லை
    மதுக்கடை !

    விற்பனை செய்திட
    உண்டு இலக்கு
    மதுக்கடை !

    சொல்லமுடியாது கடன்
    சொன்னாலும் ஏற்பதில்லை
    மதுக்கடை !

    வயது வேறுபாடின்றி
    கூடுகிறது கூட்டம்
    மதுக்கடை !

    செல்ல பயந்தனர் அன்று
    பயமில்லை இன்று
    மதுக்கடை !

    பஞ்சம் இல்லை பணத்திற்கு
    பஞ்சம் உண்டு குணத்திற்கு
    மதுக்கடை !

    தமிழகப் பெண்களின்
    தாக்குதலுக்காகுமிடம்
    மதுக்கடை !

    காந்தி இருந்தால்
    கண்ணீர் வடிப்பார்
    மதுக்கடை !

    அன்று சிறுபான்மை
    இன்று பெரும்பான்மை
    குடிமகன்கள் !

  1. காற்று ! கவிஞர் இரா .இரவி !


    உணர்த்தியது
    ஆடி பிறந்ததை
    காற்று !

    தென்றல் மெல்லினம்
    புயல் வல்லினம்
    காற்று !

    பின்னிருந்து முன்னேற்றியது
    முன்னிருந்து தடுத்தது
    காற்று !

    கிளைகளை மட்டுமல்ல
    மரங்களையும் முறிக்கும்
    காற்று !

    குப்பையும்
    கோபுரத்தில்
    காற்று !

    கோபுரக் கலசமும்
    மண்ணில்
    காற்று !

    உயிரினங்கள்
    உயிர் வாழ
    காற்று !

    பஞ்ச பூதங்களில்
    பெரிய பூதம்
    காற்று !

    புல்லாங்குழல்
    இனிய இசை
    காற்று !

    சிறு தீ
    பெருந் தீ யானது
    காற்று !

    இல்லை உருவம்
    உண்டு ஆற்றல்
    காற்று !


    நின்றது சுவாசம்
    வந்தது மரணம்
    காற்று !

  1. முத்தம் ! கவிஞர் இரா .இரவி !

    கற்காலம் தொடங்கி கணினிக்
    காலம் வரை தொடர்வது
    முத்தம் !

    இதழ்கள் எழுதும்
    இனிய கவிதை
    முத்தம் !

    காதலர்களின்
    முதல்படி
    முத்தம் !

    உதடுகள் வழி
    ஊட்டச்சத்து
    முத்தம் !

    யானைப்பசிக்கு
    சோளப்பொரி
    முத்தம் !

    இதழ்கள் வழி
    அமுதம் பரிமாற்றம்
    முத்தம் !

    உச்சரிக்கும் போதே
    உதடுகள் உரசும்
    முத்தம் !

    தமிழ்த் திரைப்படங்களில்
    தடை செய்யப்பட்டது
    முத்தம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    தமிழின் கருவூலம்
    தமிழரின் அடையாளம்
    திருக்குறள் !

    பரவ விடாதீர்
    தொற்றுநோய்
    தமிங்கிலம் !

    கவனம் ஆண்களே
    கன்னம் கிள்ளியது
    கொலையில் முடிந்தது !

    முடியவில்லை
    ஆடவோ அசையவோ
    கையில் குடுமி !

    உலகம் சுற்றும் வாலிபரே
    உள்நாட்டையும் பாருங்கள்
    உழவர்கள் தற்கொலை !

    தினமும் தாக்குவான்
    கைதும் செய்வான்
    இலங்கை நட்பு நாடா ?

    குறைந்தது வேகம்
    வயது ஆக ஆக
    வாகனத்தில் !

  1. என்னவள் ! கவிஞர் இரா .இரவி !

    நடந்துவரும் நந்தவனம்
    சுண்டிஇழுக்கும் சோலைவனம்
    என்னவள் !

    அழகிகளும் பொறாமை
    கொள்ளும் அழகு
    என்னவள் !

    வனப்பில்
    தோற்றது வண்ணத்துப்பூச்சி
    என்னவளிடம் !

    அவளின் அளவிற்கு
    வேறு யாருக்கும் இல்லை
    குரல் இனிமை !

    அழகாகின்றது
    எந்த ஆடையும்
    அவள் அணிந்ததும் !

    அகம் வைத்ததால்
    அறியவில்லை அகவை
    அழகி அவ்வளவுதான் !

    கவிதை வழங்கிடும்
    அட்சயப்பாத்திரம்
    அவள் முகம் !

    நீரின்றி
    வாழ்கின்றன மீன்கள்
    அவள் விழிகள் !

    தேவையில்லை வண்ணம்
    இயற்கையில் சிவப்பு
    அவள் இதழ்கள் !

    பேசாவிடினும்
    பார்த்தாலே போதும்
    அழகோ அழகு !

    நாள் முழுவதும்
    ரசிக்கலாம்
    நடனமிடும் விழிகள் !

    தோற்றது
    காந்த விசை
    அவள் விழிகளிடம் !

    மறந்தது பசி
    பிறந்தது மகழ்ச்சி
    அவள் வருகை !

    ஆயிரம் பேரிலும்
    தெரிவாள் தனித்து
    ஆயிரத்தில் ஒருத்தி !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    மாட்டிடம் காட்டும் பாசத்தை
    கொஞ்சம் காட்டுங்கள்
    மனிதனிடம் !

    விளம்பரத்தில் போய்
    ஆறு அறிவாம்
    இரும்புக்கம்பிக்கு !

    தூக்கம்
    நிரந்தரமானால்
    துக்கம் !

    துக்கம்
    துப்பாக்கிக்குண்டுகள் பரிசு
    உழவர்களுக்கு !

    உத்திரவாதமில்லை
    உயிருக்கு
    மீனவர்களுக்கு !

    தீர்வு அல்ல
    தீங்கு
    வன்முறை !

    ஒழுங்கு கற்பித்தன
    வரிசையாகச் செல்ல
    எறும்புகள் !

    நாடுகள் கடந்தன
    கடவுச்சீட்டுகள் இன்றி
    பறவைகள் !

    அறிந்தது முகரந்ததும்
    பசுவின் கர்ப்பம்
    தீண்டவில்லை காளை !

    பெயரால் மட்டுமல்ல
    உண்மையில் பெரியார்
    பெரியார் !

    அடுக்கு மொழியால்
    அள்ளியவர் உள்ளங்களை
    அறிஞர் அண்ணா !

    பொதுவுடைமையானது
    கல்வி
    காமராசர் !

    முன்னவரும் இல்லை
    பின்னவரும் இல்லை
    கலாமிற்கு இணை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பட்டிமன்றம்
    தொடங்கியது
    நடிகரின் பேச்சு !


    நினைவிற்கு வந்தது
    கவுண்டமணி செந்தில்
    நெல் அரைக்கும் நகைச்சுவை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சண்டையிட்ட பூனைகளை
    ஏமாற்றிய குரங்காய்
    அரசியல் !

    ஒற்றுமை இல்லையெனில்
    இழப்புதான்
    குரங்கு அப்பம் கதை !

    உணர்த்தியது
    ஏமாற்றினால் ஏமாறுவாய்
    பாட்டி வடை கதை !

    ஒன்று செய்தால்
    மற்றவையும் செய்யும்
    குரங்கு குல்லாக் கதை !

    உணர்த்தியது
    நேர்மைக்கு மதிப்பு உண்டு
    கோடாரிக் கதை !

    உணர்த்தியது
    முயற்சி திருவினையாக்கும்
    காகம் தண்ணீர் கதை !

    மகிழ்ந்தன
    மரங்களும்
    கோடை மழை !

    சூதாடிவிடும்
    வாழ்க்கையை
    சூதாட்டம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    பார்த்தோம் திரையில்
    பார்க்கிறோம் நேரில்
    ஒரு நாள் முதல்வர் !

    மணி முடிக்கான போட்டியில்
    மாய்ந்து விடுகின்றன
    நீதி நியாயம் !

    இயற்கை மகுடம்
    உழைப்பாளிக்கு
    வியர்வைத் துளி !

    மணி முடிக்கான போட்டியில்
    மாய்ந்து விடுகின்றன
    நீதி நியாயம் !

    அழியாது
    கல்வெட்டென
    அகஅழகு !

    குறித்து வைக்காததால்
    மறந்து போனது
    நல்ல ஹைக்கூ !

    வசம் இல்லை
    வனப்பு உண்டு
    செயற்கை மலர் !


    இல்லை
    அம்பு
    வானவில் !


  1. நம்பும் மூடராக
    வாக்காளர்கள் !

    தர வேண்டாம் மீன்
    கற்றுக் கொடுங்கள்
    மீன்பிடிக்க !


    வந்தது சிரிப்பு
    சுவரொட்டியைப் பார்த்து
    வருங்கால முதல்வரே !



    வருந்துவதில்லை
    சுமைக்காக
    சுமைதாங்கிக்கல் !

    மாறுபடுகிறது
    அன்றும் இன்றும்
    பாசம் !

    சாதி மத ஆராய்ச்சி வேண்டாம்
    தாருங்கள் தண்டனை
    குற்றவாளிக்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    உணர்த்தியது
    வாழ்வின் நிலையாமை
    நண்பனின் மரணம் !


    அறிவதில்லை
    எரிக்கும் தீ
    சந்தனத்தின் வாசம் !

    மற்றவர் தவறாலும்
    தண்டனை நமக்கு
    விபத்து !

    நொடியில் விபத்து
    வடுவானது
    வாழ்நாள் முழுதும் !

    தேவைப்படுகிறது பாதுகாப்பு
    காவல்
    உயர் அலுவலருக்கு !

    நாயினும் கீழாக
    மனிதன் ?
    வன்புணர்வு !

    முதுகில் குத்துவது
    தொடர்கதையானது
    அரசியலில் !

    விலை ஏற ஏற
    ஏறியது இரத்தக் கொதிப்பு
    பெட்ரோல் !

    பறைசாற்றியது
    ஆள்வோரின் திறமையின்மை
    பெட்ரோல் விலையேற்றம் !

    காரணியானது
    விலையேற்றத்திற்கு
    பெட்ரோல் விலையேற்றம் !

    பெரும்பாடானது
    பெண் குழந்தை வளர்ப்பு
    காமுகர்களால் !

    பயன்படுத்தாமல்
    துருப்பிடித்து
    பகுத்தறிவு !

    காரணமின்றியே
    நடக்கின்றன கொலைகள்
    காரணம் திரைப்படங்கள் !


    செந்தமிழும் நா பழக்கம்
    பேசுக
    தமிழில் !

    பன்னாட்டு நிறுவனங்களின்
    பகல் கொள்ளை
    புதிய பொருளாதாரம் !

    சுவை நீர் இளநீர் இருக்க
    எதற்கு
    நஞ்சு நீர் குளிர்பானம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    காளை கூட சினை என்றால் தீண்டுவதில்லை
    சிறு பிள்ளையைத் தீண்டிய கயவர்கள்
    விலங்கிலும் கீழ் !

    நெஞ்சு பொறுக்கவில்லை
    கொதிக்கிறது நெஞ்சம்
    கொல்லுங்கள கொடூரன்களை !

    காம வெறி பிடித்த கொடூரன்களை
    காவு கொடுக்க வேண்டும்
    கோயில் வாசலில் !

    காம வெறி பிடித்த கொடூரன்களை
    காவு கொடுக்க வேண்டும்
    கோயில் வாசலில் !

    மனித வடிவில் மிருகங்கள்
    வாழ்கின்றன கோயிலில்
    கவனம் பெண்களே !

    ஆலயத்தில் உள்ளோர்
    மெய்ப்பித்துள்ளனர்
    கடவுள் இல்லை என்பதை !

    காட்டுமிராண்டிகள் திருந்திவிட்டனர்
    நாட்டுமிராண்டிகள் கெட்டு விட்டனர்
    கொடியோரின் ஆணுறுப்பை அகற்றுங்கள் !

    பிஞ்சின் உயிர் பிரித்த
    வஞ்சகரின் உயிர் பறிப்பதே
    உன்னத தீர்ப்பாகும் !


    பாலியல் கொடுமை கொடூரம்
    இதற்குப்பின்னும் நம்பலாமா ?
    கடவுள் உண்டு என்பதை !

    மனித வடிவில் மிருகங்கள்
    வாழ்கின்றன கோயிலில்
    கவனம் பெண்களே !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    வருந்தியது
    உதிர்ந்தபின்
    இலை !

    ஓய்வின்றி ஓட்டம்
    பார்ப்பவர்களுக்கு
    காட்டும் காலம் !

    அப்பக்கம் ஆதவன்
    இப்பக்கம் இருட்டு
    இரவு !

  1. சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    அடி கொள்ளை
    தா பங்கு
    அரசியல் கொள்கை !

    அசந்தால்
    கடவுளை விழுங்கிடும்
    மகாதேவன்கள் !

    மன்னர்களை மிஞ்சினார்கள்
    துணை வேந்தர்கள்
    சொத்து சேர்ப்பதில் !

    துச்சம்தான் சிலருக்கு
    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
    மேலாண்மை வாரியம் ?

    ஒன்று செய் நன்று செய்
    இன்றே செய்
    காலம் கடத்தாதே !

    காற்றுள்ளபோது துற்று
    பதவியிலிருக்கும்போதே அடித்திடு
    அரசியல் வேதம் !

    ஏழைகளின் பழம்
    பணக்காரர்களின் பழமானது
    கொய்யா !

    இழவைத் தடுக்க வேண்டினால்
    திருமணம் செய்து வைக்கின்றனர்
    அரசியல் கூத்து !

    உருவம் ஒன்று
    சுவை வேறு
    பூசணி தர்பூசணி !

  1. சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    இருக்காது சும்மா
    ஆடிய காலும் பாடிய வாயும்
    ஊழல்வாதி கையும் !

    மிதந்தபோதும்
    ஒட்டுவதில்லை தண்ணீர்
    தாமரையிலை !

    செய்யவில்லை நன்மை
    தமிழகத்திற்கு
    தாமரையும் இலையும் !

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
    சரி கைது செய்யலாமா ?
    போராடும் மன்னர்களை !

    இந்தா ! அந்தா !என்றே
    ஏமாற்றுகின்றனர்
    பெண்கள் இடஓதுக்கீடு !

    நல்ல சாதனை
    தடுக்கி விழுந்தால்
    மதுக்கடை !

    நீந்தியது
    பிறந்ததும்
    மீன் !

    தன் குஞ்சு
    பொன் குஞ்சு
    அரசியல்வாதிகளுக்கு !

    வெந்து தணிந்தது காடு
    பல உயிர்களைக் கொன்று
    குரங்கணி !

    மேலாண்மை வாரியம் அமைக்காமல்
    மேலாண்மை செய்யும்
    நடுநிலையற்ற நடுவணரசு !

    வேட்டைக்காடானது
    அந்நியர்களுக்கு
    தமிழகம் !

    தீதும் நன்றும்
    அமையும்
    நாக்கால் !

    நேரம் இருப்பதில்லை
    பொல்லாங்கு பேசிட
    உழைப்பாளிக்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    வித்தைக்காட்டி வசமாக்கி
    அடிக்கின்றனர் கொள்ளை
    சாமியார்கள் !

    வீட்டிற்குள் இருந்தால்
    விவகாரம் இல்லை
    மதம் !

    மெய்ப்பித்து வருகின்றனர்
    லெனின் கூற்றை
    மதவாதிகள் !

    இருப்பதாகத் தெரியவில்லை
    சிலர்க்கு
    ஆறாவது அறிவு !

    துருப்பிடித்தது
    பயன்படுத்தாமல்
    பகுத்தறிவு !

    மதத்தை மற
    மனிதனை நினை
    மலரும் மனிதநேயம் !

    உன் சாதி பெரிதல்ல
    என் சாதி பெரிதல்ல
    பெஞ்சாதியை பெரிது !

    செயல்படு சிந்தித்து
    சிறக்கும்
    வாழ்க்கை !

    கடினமன்று
    விரும்பிச் செய்தால்
    உழைப்பு !

    மடியவில்லை
    இன்றும் வாழ்கிறது
    அடிமை மோகம் !

    சிரித்திட வேண்டினார்
    புகைப்படக் கலைஞர்
    செத்தப்பிணத்தை !

    வாழ்கின்றனர் இன்றும்
    கடையெழு வள்ளல்கள்
    புரவலர்கள் !

    உண்மை
    சிறுதுளி பெருவெள்ளம்
    ஹார்வர்டு தமிழ் இருகை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பறப்பதில்லை
    சிறகை சுமையாக
    நினைக்கும் பறவை !

    அன்று நோயுடன் சிலர்
    இன்று நோயின்றி சிலர்
    உணவு முறை !

    வேண்டாம் நெகிழி
    வேண்டும் இலை
    காக்கும் உடல்நலம் !

    சுவை கூடக் கூட
    கூடுகின்றது
    தீங்கு !

    உணவில்
    செயற்கை வண்ணம்
    புற்றுநோயுக்கு வரவேற்பு !

    எதிலும்
    இயற்கை வளர்ச்சி இதம்
    செயற்கை வளர்ச்சி தீங்கு !

    செலவிடமாட்டோம் சாமானியனுக்கு
    செலவிடுவோம் சமாதிக்கு
    அரசியல் !

    கலங்குவதில்லை
    கடன்பட்டார் நெஞ்சம் போல்
    ஆள்வோர் !

    எங்கும் எதிலும் தமிழ்
    சரி
    அரசுப்பள்ளியில் தமிழ் ?

    அன்று பொதுநலம்
    இன்று தன்னலம்
    அரசியல் !


    பாரபட்சம்
    உயிர்ப்பிக்கின்றனர் செத்தமொழியை
    அழிக்கின்றனர் உயிர்ப்பான மொழியை !


    கரும்புள்ளியாகின்றான் நூறு திருடியவன்
    கோடிகள் திருடியவன்
    பெரும்புள்ளியாகின்றான் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    வடிப்பார் கண்ணீர்
    காந்தியடிகள் இருந்தால்
    மதுக்கடைகள் !

    மதுக்கோப்பை மோதல்
    உணர்த்தியது
    பின்னால் வரும் மோதலை !

    மதுக்கோப்பை மோதி
    சரிபார்த்தனர்
    அளவை !

    நட்டநடுநிசியில் அல்ல
    பட்டப்பகலில் நடக்க முடியவில்லை
    பெண்கள் !

    உண்டு ஏட்டில் எழுத்தில்
    இல்லை நடைமுறையில்
    பெண் விடுதலை !

    போகப்பொருள் அல்ல
    உயிரும் உணர்வும் உள்ளவள்
    பெண் !

    எண்ணி விடலாம்
    விரல் விட்டு
    புதுமைப்பெண்கள் !

    அகிலம்முழுவதும்
    ஆணாதிக்கத்தால்
    அடிமைப்பெண்கள் !

    பொதுவாக்குவோம்
    இருபாலருக்கும்
    சமையல் அறையை !


    கோடை மழை
    குதூகலத்தில்
    உழவன் !

    ஒன்றுபட்டால்
    உறுதியாகும் வெற்றி
    உணர்த்தியது சல்லிக்கட்டு !

    முடியவில்லை முத்தெடுக்க
    முழுநேர அரசியல்வாதிகளால்
    பகுதிநேர அரசியல் ?

    ஆசையால் அழிந்தும்
    வரவில்லை அறிவு
    அரசியல்வாதிகளுக்கு !

    உடன் பிறந்த நோயானது
    ஊழல்
    அரசியல்வாதிகளுக்கு !

    சடங்குகளில்
    ஒன்றானது
    நிதிநிலை அறிக்கை !

    ஏற்றமின்றி
    ஏமாற்றத்தில்
    ஏழை மக்கள் !

    உயிருக்கு உலை
    வாகனம் ஓட்டுகையில்
    அலைபேசியில் பேசுதல் !

    பிறக்கையில் இருந்தளவே
    இறுதியிலும் இருந்ததா ?
    கர்ணனின் கவசம் !

    பெட்ரோல் விலை ஏற ஏற
    இறங்குகிறது
    ஆள்வோரின் மதிப்பு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சாண் பிள்ளையானாலும்
    ஆண் பிள்ளை
    ஆணாதிக்கம் விதைப்பு !

    சிரித்தால் போச்சு
    பெண் பிள்ளை
    பெண்ணடிமை பாதிப்பு !

    சாண் ஏற
    முழம் சறுக்கிறது
    ஏழைகளின் வாழ்வு !

    யாராவது குடித்தனர் அன்று
    யாரவது குடிப்பதில்லை
    இன்று !

    சுற்றியது பம்பரம்
    கயிறு இன்றி
    சுழட்டினான் கையால் !

    அவித்த நெல் முளைக்காது
    அடங்காத மாணவன்
    சிறக்க முடியாது !

    உருவத்தில் சிறியது
    உடல்நலத்திற்கு நல்லது
    அருகம்புல் !

    ஒரு முறை சொன்னாலும்
    உயர் மதிப்பைக் குறைக்கும்
    பொய் !

    உருவம் பெரிதல்ல
    சிங்கத்தைப் பார்த்து
    பயந்தது யானை !

    அறிந்து விடுகிறது
    மழை வருவதை
    தவளை !

    சேற்றில் மலர்ந்தும்
    ஒட்டவில்லை சேறு
    தாமரை !

    நாய்கள் நுழைந்தன
    திறந்த வீட்டில்
    பன்னாட்டு நிறுவனங்கள் !

    பொதி சுமக்காது
    துள்ளும் மாடு
    அதிகம் பேசும் அரசியல்வாதி !
    .
    தான் பிடித்த முயலுக்கு
    மூன்றே கால்
    அரசியல்வாதிகள் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    ஒரு தடவை சொன்னா
    நூறு தடவை சொன்ன மாதிரி
    யார் நீங்க?

    சும்மா அதுருதில
    யார் நீங்க?
    மகிழ்ச்சி !

    ஆள்கிறவர்கள் சொல்கிறார்கள்
    இந்த அருணாச்சலம்
    செய்றான்.

    எதற்கு உளற வேண்டும் ?
    பிறகு எதற்கு
    வருந்த வேண்டும் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    முத்து எடுக்கும் நகரில்
    உயிர்களை எடுத்து விட்டனர்
    மூடர் கூட்டம் !

    முடக்கலாம் இணையத்தை
    முடக்க முடியாது
    இன உணர்வை !

    மூச்சு விட சிரமம் என்றவர்களின்
    மூச்சை நிறுத்தின
    துப்பாக்கிக்குண்டுகள் !

    ஆந்திராவில் சுட்டான்
    தமிழகத்திலும் சுடுகின்றனர்
    தமிழர்களை !

    முழங்காலுக்குக் கீழ் சுடவேண்டும்
    என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு
    நெஞ்சில் சுட்டான் கொடூரன் !

    மிக மிக மலிவானது
    இந்த உலகில்
    தமிழன் உயிர்

    வெளிநாட்டு கோடீசுவரனுக்காக
    உள்நாட்டு ஏழைகளின்
    உயிர் பறிப்பு !

    செருப்பால் அடித்து விட்டு வெல்லம்
    கொன்றுவிட்டு
    பத்து லட்சம் !

    சுடுவதற்கு ஆணை வழங்கிய
    சும்பனை தூக்கிலிடுங்கள்
    விசாரணையின்றி !

    காக்கை குருவிகளைக் கூட
    சுடுவது குற்றம்
    மனிதர்களைச் சுடுகின்றனர் !

    மீண்டு வந்தது
    மீண்டும் வந்தது
    காவல்துறைக்கு அவமானம் !

    அயல்நாட்டுக்காரனுக்காக
    சொந்தநாட்டு மக்களின்
    உயிர் பறித்த சுயநலவாதிகள்!

    வெற்றி ! வெற்றி !வெற்றி !
    தமிழர்களுக்கு வெற்றி
    சல்லிக்கட்டு போலவே !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி


    கண்ணீர் வடித்திருப்பார்
    காமராசர் இருந்திருந்தால்
    அரசுப்பள்ளிகள் மூடல் !

    அன்று பொதுநலத்தின் எச்சம்
    இன்று தன்னலத்தின் உச்சம்
    அரசியல் !

    ஆட்சி பறிபோன சினத்தில்
    அவமதிப்பு
    தேசியகீதம் !

    கண்டிப்பாகப்பேசிப் பணம் பெற்று
    பேசிய தலைப்பு
    பொதுநலம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    பார்த்தோம் திரையில்
    பார்க்கிறோம் நேரில்
    ஒரு நாள் முதல்வர் !

    மணி முடிக்கான போட்டியில்
    மாய்ந்து விடுகின்றன
    நீதி நியாயம் !

    இயற்கை மகுடம்
    உழைப்பாளிக்கு
    வியர்வைத் துளி !

    மணி முடிக்கான போட்டியில்
    மாய்ந்து விடுகின்றன
    நீதி நியாயம் !

    அழியாது
    கல்வெட்டென
    அகஅழகு !

    குறித்து வைக்காததால்
    மறந்து போனது
    நல்ல ஹைக்கூ !

    வசம் இல்லை
    வனப்பு உண்டு
    செயற்கை மலர் !


    இல்லை
    அம்பு
    வானவில் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    ஆரம்பமானது
    கர்னாடகத்திலும்
    குதிரைபேரம் !

    எண்ணிக்கை குறைந்து
    எண்ணம் பொய்த்தது
    எல்லோருக்கும் !

    தாமரைப்பூ
    மொட்டானது
    கர்னாடகத்தில் !

    கோட்டையைப் பிடிக்கும்
    மனக்கோட்டை தகர்ந்தது
    தேர்தல் முடிவு !

    வாரியம் அமைக்காமல்
    வாரலாம் வாக்கு
    பொய்த்தது கனவு !

    செய்வார்கள்
    பஞ்சமாபாதகம்
    பதவி வெறி !

    மக்கள் வைத்தனர்
    அரசியல்வாதிகளுக்கு ஆப்பு
    தேர்தலில் !

    இரண்டும் ஒன்றுதான்
    முன்விட்டை பின்விட்டை
    கட்சிகள் !

    வேண்டும் கவனம்
    நடக்கிறது விபத்து
    இமைக்கும் நேரத்தில் !

    கேப்பையில் நெய்
    நம்பும் மூடராக
    வாக்காளர்கள் !

    தர வேண்டாம் மீன்
    கற்றுக் கொடுங்கள்
    மீன்பிடிக்க !


    வந்தது சிரிப்பு
    சுவரொட்டியைப் பார்த்து
    வருங்கால முதல்வரே !



    வருந்துவதில்லை
    சுமைக்காக
    சுமைதாங்கிக்கல் !

    மாறுபடுகிறது
    அன்றும் இன்றும்
    பாசம் !

    சாதி மத ஆராய்ச்சி வேண்டாம்
    தாருங்கள் தண்டனை
    குற்றவாளிக்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    உணர்த்தியது
    வாழ்வின் நிலையாமை
    நண்பனின் மரணம் !


    அறிவதில்லை
    எரிக்கும் தீ
    சந்தனத்தின் வாசம் !

    மற்றவர் தவறாலும்
    தண்டனை நமக்கு
    விபத்து !

    நொடியில் விபத்து
    வடுவானது
    வாழ்நாள் முழுதும் !

    தேவைப்படுகிறது பாதுகாப்பு
    காவல்
    உயர் அலுவலருக்கு !

    நாயினும் கீழாக
    மனிதன் ?
    வன்புணர்வு !

    முதுகில் குத்துவது
    தொடர்கதையானது
    அரசியலில் !

    விலை ஏற ஏற
    ஏறியது இரத்தக் கொதிப்பு
    பெட்ரோல் !

    பறைசாற்றியது
    ஆள்வோரின் திறமையின்மை
    பெட்ரோல் விலையேற்றம் !

    காரணியானது
    விலையேற்றத்திற்கு
    பெட்ரோல் விலையேற்றம் !

    பெரும்பாடானது
    பெண் குழந்தை வளர்ப்பு
    காமுகர்களால் !

    பயன்படுத்தாமல்
    துருப்பிடித்து
    பகுத்தறிவு !

    காரணமின்றியே
    நடக்கின்றன கொலைகள்
    காரணம் திரைப்படங்கள் !


    செந்தமிழும் நா பழக்கம்
    பேசுக
    தமிழில் !

    பன்னாட்டு நிறுவனங்களின்
    பகல் கொள்ளை
    புதிய பொருளாதாரம் !

    சுவை நீர் இளநீர் இருக்க
    எதற்கு
    நஞ்சு நீர் குளிர்பானம் !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    காளை கூட சினை என்றால் தீண்டுவதில்லை
    சிறு பிள்ளையைத் தீண்டிய கயவர்கள்
    விலங்கிலும் கீழ் !

    நெஞ்சு பொறுக்கவில்லை
    கொதிக்கிறது நெஞ்சம்
    கொல்லுங்கள கொடூரன்களை !

    காம வெறி பிடித்த கொடூரன்களை
    காவு கொடுக்க வேண்டும்
    கோயில் வாசலில் !

    காம வெறி பிடித்த கொடூரன்களை
    காவு கொடுக்க வேண்டும்
    கோயில் வாசலில் !

    மனித வடிவில் மிருகங்கள்
    வாழ்கின்றன கோயிலில்
    கவனம் பெண்களே !

    ஆலயத்தில் உள்ளோர்
    மெய்ப்பித்துள்ளனர்
    கடவுள் இல்லை என்பதை !

    காட்டுமிராண்டிகள் திருந்திவிட்டனர்
    நாட்டுமிராண்டிகள் கெட்டு விட்டனர்
    கொடியோரின் ஆணுறுப்பை அகற்றுங்கள் !

    பிஞ்சின் உயிர் பிரித்த
    வஞ்சகரின் உயிர் பறிப்பதே
    உன்னத தீர்ப்பாகும் !


    பாலியல் கொடுமை கொடூரம்
    இதற்குப்பின்னும் நம்பலாமா ?
    கடவுள் உண்டு என்பதை !

    மனித வடிவில் மிருகங்கள்
    வாழ்கின்றன கோயிலில்
    கவனம் பெண்களே !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    வருந்தியது
    உதிர்ந்தபின்
    இலை !

    ஓய்வின்றி ஓட்டம்
    பார்ப்பவர்களுக்கு
    காட்டும் காலம் !

    அப்பக்கம் ஆதவன்
    இப்பக்கம் இருட்டு
    இரவு !

  1. சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    அடி கொள்ளை
    தா பங்கு
    அரசியல் கொள்கை !

    அசந்தால்
    கடவுளை விழுங்கிடும்
    மகாதேவன்கள் !

    மன்னர்களை மிஞ்சினார்கள்
    துணை வேந்தர்கள்
    சொத்து சேர்ப்பதில் !

    துச்சம்தான் சிலருக்கு
    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
    மேலாண்மை வாரியம் ?

    ஒன்று செய் நன்று செய்
    இன்றே செய்
    காலம் கடத்தாதே !

    காற்றுள்ளபோது துற்று
    பதவியிலிருக்கும்போதே அடித்திடு
    அரசியல் வேதம் !

    ஏழைகளின் பழம்
    பணக்காரர்களின் பழமானது
    கொய்யா !

    இழவைத் தடுக்க வேண்டினால்
    திருமணம் செய்து வைக்கின்றனர்
    அரசியல் கூத்து !

    உருவம் ஒன்று
    சுவை வேறு
    பூசணி தர்பூசணி !

  1. சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

    இருக்காது சும்மா
    ஆடிய காலும் பாடிய வாயும்
    ஊழல்வாதி கையும் !

    மிதந்தபோதும்
    ஒட்டுவதில்லை தண்ணீர்
    தாமரையிலை !

    செய்யவில்லை நன்மை
    தமிழகத்திற்கு
    தாமரையும் இலையும் !

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
    சரி கைது செய்யலாமா ?
    போராடும் மன்னர்களை !

    இந்தா ! அந்தா !என்றே
    ஏமாற்றுகின்றனர்
    பெண்கள் இடஓதுக்கீடு !

    நல்ல சாதனை
    தடுக்கி விழுந்தால்
    மதுக்கடை !

    நீந்தியது
    பிறந்ததும்
    மீன் !

    தன் குஞ்சு
    பொன் குஞ்சு
    அரசியல்வாதிகளுக்கு !

    வெந்து தணிந்தது காடு
    பல உயிர்களைக் கொன்று
    குரங்கணி !

    மேலாண்மை வாரியம் அமைக்காமல்
    மேலாண்மை செய்யும்
    நடுநிலையற்ற நடுவணரசு !

    வேட்டைக்காடானது
    அந்நியர்களுக்கு
    தமிழகம் !

    தீதும் நன்றும்
    அமையும்
    நாக்கால் !

    நேரம் இருப்பதில்லை
    பொல்லாங்கு பேசிட
    உழைப்பாளிக்கு !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    வித்தைக்காட்டி வசமாக்கி
    அடிக்கின்றனர் கொள்ளை
    சாமியார்கள் !

    வீட்டிற்குள் இருந்தால்
    விவகாரம் இல்லை
    மதம் !

    மெய்ப்பித்து வருகின்றனர்
    லெனின் கூற்றை
    மதவாதிகள் !

    இருப்பதாகத் தெரியவில்லை
    சிலர்க்கு
    ஆறாவது அறிவு !

    துருப்பிடித்தது
    பயன்படுத்தாமல்
    பகுத்தறிவு !

    மதத்தை மற
    மனிதனை நினை
    மலரும் மனிதநேயம் !

    உன் சாதி பெரிதல்ல
    என் சாதி பெரிதல்ல
    பெஞ்சாதியை பெரிது !

    செயல்படு சிந்தித்து
    சிறக்கும்
    வாழ்க்கை !

    கடினமன்று
    விரும்பிச் செய்தால்
    உழைப்பு !

    மடியவில்லை
    இன்றும் வாழ்கிறது
    அடிமை மோகம் !

    சிரித்திட வேண்டினார்
    புகைப்படக் கலைஞர்
    செத்தப்பிணத்தை !

    வாழ்கின்றனர் இன்றும்
    கடையெழு வள்ளல்கள்
    புரவலர்கள் !

    உண்மை
    சிறுதுளி பெருவெள்ளம்
    ஹார்வர்டு தமிழ் இருகை !

  1. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பறப்பதில்லை
    சிறகை சுமையாக
    நினைக்கும் பறவை !

    அன்று நோயுடன் சிலர்
    இன்று நோயின்றி சிலர்
    உணவு முறை !

    வேண்டாம் நெகிழி
    வேண்டும் இலை
    காக்கும் உடல்நலம் !

    சுவை கூடக் கூட
    கூடுகின்றது
    தீங்கு !

    உணவில்
    செயற்கை வண்ணம்
    புற்றுநோயுக்கு வரவேற்பு !

    எதிலும்
    இயற்கை வளர்ச்சி இதம்
    செயற்கை வளர்ச்சி தீங்கு !

    செலவிடமாட்டோம் சாமானியனுக்கு
    செலவிடுவோம் சமாதிக்கு
    அரசியல் !

    கலங்குவதில்லை
    கடன்பட்டார் நெஞ்சம் போல்
    ஆள்வோர் !

    எங்கும் எதிலும் தமிழ்
    சரி
    அரசுப்பள்ளியில் தமிழ் ?

    அன்று பொதுநலம்
    இன்று தன்னலம்
    அரசியல் !


    பாரபட்சம்
    உயிர்ப்பிக்கின்றனர் செத்தமொழியை
    அழிக்கின்றனர் உயிர்ப்பான மொழியை !


    கரும்புள்ளியாகின்றான் நூறு திருடியவன்
    கோடிகள் திருடியவன்
    பெரும்புள்ளியாகின்றான் !

«Oldest ‹Older   1 – 200 of 250   Newer› Newest»

Post a Comment